Wednesday, February 2, 2011

ஊர்ல உலவிய கதையும்..திரும்பி வந்த ( நொந்த ) கதையும்…

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

 

நீங்க படிச்சி இருப்பீங்கன்னு

நினைக்கிறேன்…ஊருக்கு போனது தான்

விஜய் படம் பார்க்கிற மாதிரி

கொடுமையா இருந்துச்சுன்னு பார்த்தா..

திரும்பி வரும்போது TR படம் பார்க்கிறது 

போல அதை விட கொடுமையா இருந்தது..
 
அதுக்கு முன்னால ஊருக்குள்ள 

உலாத்திக்கிட்டு திரிஞ்ச அந்த நாலு

நாட்களை பத்தி சொல்லணுமில்ல..

அப்படி  இப்படின்னு ஆஞ்சு ஓஞ்சு ஆறு

மணிக்கு போயி எங்க ஊர்ல இறங்கினேன்…


என்னோட பாட்டி வீடு திருக்கடையூர் 


அப்படின்னு ஒரு அரை கிராமம்..


புகழ்பெற்ற அபிராமி அம்மன்


கோவில் இருக்கு…



அறுபதாம் , எண்பதாம் கல்யாணங்கள்

அந்த கோவில்ல விசேஷம்…

( மணிவிழா , சதாபிஷேகம்  னு சொல்லுவாங்க…)

மார்கண்டேயர் , அபிராமி பட்டர் னு கொஞ்சம்





பெரியவங்களுக்கு தெரிஞ்ச கதைகள் நடந்தது 

எல்லாம் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில்

தான்…நம்ம மக்களுக்கு புரியும்படி 

சொன்னா...குணா படத்துல அந்த 

பொண்ண பார்த்ததும் லட்டை 

கையில வச்சிக்கிட்டு கமல் ஒரு பாட்டு

பாடுவாரே.. பார்த்த விழி பார்த்த படி 

பூத்து இருக்க னு..அது அபிராமி அந்தாதி தான்..


எங்க ஊரை சுற்றி நவகிரக சன்னதிகள்

உள்ளன.. ஊர் பெருமை போதும்

னு நினைக்கிறேன்..Dot.




எங்க வீட்டில் எல்லாரும் அன்னைக்கு 

காலையில தான் சென்னையில் இருந்து 

கிளம்பி ஊருக்கு வந்துகிட்டு  இருந்தாங்க.

போகி அன்னைக்கே ஊருக்கு போயி

இறங்கிட்டேன்.. சும்மா சொல்லக்கூடாது சார்.. 

இயந்திரத்தனமான இந்த என்ஜினியர் 

வாழ்கையில இந்த மாதிரி எப்பவாவது

இயற்கையை ரசிக்கறது நல்லா தான் இருக்கு…
 
எங்க ஊருல காவிரி யோட கிளை ஆறு 

( மஞ்சளாறு ) ஒண்ணு ஓடுது..

அப்படியே பூம்புகார்ல போயி கடலோட

கலந்திடும்..என்ன தான் சிட்டி வாழ்கையில

ஷவர் ல குளிச்சாலும் ஆத்துல குளிக்கிறதுல

அப்படி ஒரு சுகம்.. 

பொண்ணுங்களும் பக்கத்துலையே

குளிப்பாளுங்களே



காலையில பனி அதிகமா இருந்ததால 

எல்லா வீட்டுலயும் ஏழு மணிக்கு மேல 

தான் கோலம் போடவே வந்தாளுங்க..

எங்க வீடு மூணு மாடி கட்டிடம்..

அதனால மொட்டை மாடில இருந்து 

பார்த்தா அக்ரஹாரம் ல இருந்து 

ஆத்தங்கரை வரைக்கும் தெரியும்..

சகுனம் எல்லாம் சரியா இருக்கான்னு

பார்த்துகிட்டு.. அப்படியே ட்ராக்கை 

மாட்டிகிட்டு கெத்தா வாயில வச்சிக்கிட்டு

ஆத்தங்கரைக்கு புறப்பட்டேன்..

வேப்பங்குச்சியை..



Oral B க்கு பழகின பற்கள்..குச்சி பட்ட வுடனே

கொஞ்சம் குழப்பமா தான் ஆயிடுச்சி. 

அடடடா…

இந்த பொண்ணுங்களை

கோலம் போடும்போதும்,


கோவில்ல பார்க்கும் போதும்,


குழந்தைகளை கொஞ்சும் போதும்,


குடத்தை தூக்கிகிட்டு போகும் 




போதும் பார்த்தா மட்டும் அவ்வளவு 

அழகாக தெரியிறாங்களே எப்படி சார்… 




பாவாடை தாவணி , சேலை , 

சுடிதார் , நைட்டி னு விதவிதமான டிரஸ் 

கோட்  ல அப்படியே அள்ளிட்டாளுங்க போங்க..

தேவதைகள் னாலே வெள்ளை டிரஸ் னு 

பாரதி ராஜா நம்மளை நல்ல ஏமாத்தி வச்சி 

இருக்கார்.. அவருக்கு என்னுடைய கடும் 

கண்டனங்கள்.. ஒவ்வொருத்தியும் இருட்டு கடை

அல்வா போல , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு

போல , ஆனந்த பவன் மில்க் ஸ்வீட் போல , 

லாலா கடை  லட்டு போல , ஐயங்கார் பேக்கரி 

கேக் போல னு அப்படியே சாப்பிட

தூண்டும் அழகு…



அதுலயும் கைலியில திரியுற பசங்களுக்கு

மத்தியில காலையிலேயே ட்ராக் போட்டுக்கிட்டு

போகவும் யாருடா இந்த ஜந்துன்னு வீட்ல

இருந்து வந்து எட்டி பார்த்துட்டு போனாளுங்க.. 

எது எப்படியோ..எனக்கும் தரிசனம் கொடுத்து

என்னுடைய தரிசனமும் வாங்கிட்டு

போனாளுங்க .. நமக்கு அது  தானே முக்கியம்..

இதுல எதிர்ப்பட்ட ஏழெட்டு ஆகாவலிகளின்

குசல விசாரிப்பு வேறு.. அதுவும் நல்லதா

போச்சு..அவனுங்கள சாக்கா வச்சி அங்கயே

கொஞ்ச நேரம் கடையை போட்டாச்சு...

குளிச்சி முடிச்சி வீட்டுக்கு வந்ததும்.. 

பாட்டி கையால சுட சுட இட்லியும் 

தேங்காய் சட்னியும்..அது என்னமோ 

எத்தனையோ ஹோட்டல் ல சாப்பிட்டு

இருந்தாலும்.. வீட்டு சாப்பாடு மாதிரி 

வர்றதில்லை.. நல்ல வேலையா நாலு 

நாளைக்கு காஞ்சு போன பரோட்டா கிட்ட

இருந்து விடுதலை… அது என்ன மாதிரி 

நாடோடிகளுக்கு நல்லாவே  புரியும்…


( எங்க..என்னை தான் ஊருக்குல்லையே 


சேர்க்க மாற்றானுன்களே )

அப்படியே சில பல இட்லி களை சூடா 


உள்ள தள்ளிட்டு ஒரு குட்டி தூக்கம்..

( நல்லா படிங்க சார்.. நான் நல்லவன்..

ஐயோ..நான் சத்தியமா நல்லவன்..) 


மதியத்துக்கு மண் சட்டியில செஞ்ச 


மீன் குழம்பு.. அது மண் பானை காரணமா , 

பாட்டி கை பக்குவமா , இல்ல அந்த கடல்


மீனா னு தெரியலை… 


அமுதம் ஒருவேளை அசைவமாக இருந்தா

இப்படி தான் இருக்குமோ என்னமோ…


நாக்குலையும் மூக்குலயும் ஜலம்


கொட்டிண்டே சாப்பிட்டு  முடிச்சேன்…

முடிச்சிட்டு அப்படியே கடைதெரு 


பக்கம் போனா.. அத்தனை நடிகைகளும் 


அங்கே தான் இருந்தாங்க…

கடைகளோட பெயர் பலகைகளில.. 


சிந்து பேன்சி ஸ்டோர்க்கு 

ஸ்னேஹா எப்ப

ambassador ஆனானு தெரியலை.. 



இது கூட பரவா இல்லை..


செட்டியார் மளிகை கடைக்கு

தீபிகா படுகோனே சிரிக்கிறா.. 



அட ஆண்டவா.. 



பொங்கல் பர்சேசுக்காக


ஊருக்குள்ள இருந்த டக்கரு , டாப்பு , 


டொக்கு , கலக்கல் ,  கலாசல் , கழிசடை னு 


அத்தனை கும்பலும் வந்து குவிஞ்சு இருந்தது.. 


நமக்கு தேவையானதை நாம் தான் 

தேடி பெற வேண்டும்ங்கற  ஜென் தத்துவத்தோட 


லேசர் கண் கொண்டு ஊடுரிவியதில் …


7 , 8 தேறிச்சி..


அதுல நாலு தான் என்னை பார்த்துச்சு.. 


நானும் நாக்கை தொங்க போட்டுகிட்டே போக..


இந்த ப்ளடி முறை பசங்க.. 


எங்க இருந்து தான் வருவானுங்களோ.. 


நான் பார்க்கிறதை பார்த்துட்டு… 


ரொம்ப டீசன்ட்டா அப்ரோச் பண்ணானுங்க.. 


என்னா பாஸ்..


எங்க ஆளுங்களை பார்க்குறீங்க போல.. 

ஏன் பாஸ் சிட்டி ல நீங்க பார்க்காததா னு கேட்க… 

நான் உடனே பம்பி இல்லைங்க..

சும்மா தாங்க பார்த்தேன்..தப்பான 

எண்ணத்தில எல்லாம் இல்லை னு

ஜகா வாங்க..

( சின்ன வயசுல "அந்த" நேரத்தில

"அந்த" பொசிஷன்ல இருந்த ரெண்டு

நாய்களை கல்லால அடிச்ச பாவமே

இன்னும் என்னை விட்டு போகாம நான்

இன்னும் கன்னி கழியாம இருக்கேன்.. 

இதுல இவனுங்க பாவம் வேறையா…) 

ரெண்டு பேரு ஜாலியா பேசுனானுங்க சார்.. 

ஒருத்தன் மட்டும் குறுகுறுன்னு

பார்த்துகிட்டே இருந்தான்…

( அடிப்பானோ.. 

இது அடி வாங்குற ஒடம்பு இல்லைடா…) 

அப்புறம் மிச்சம் இருந்த அந்த ஒண்ணை 

கட்டம் கட்டி பெரிய கோவில்

வரைக்கும் போயிட்டேன்.. அங்கே

ஒரு ஆகாவலி வந்து என்

காதல் வேட்டையை கலைச்சிட்டான்.

( நல்லா இருங்கடா.. ) 

இந்த நாயெல்லாம் 

என்னை நலம் விசாரிக்கலை னு 

எவன் அழுதான்… 

அதுக்குள்ளே அந்த மயிலு மாயமாயிடுசி.

அப்புறம் வீட்ல இருந்து அப்பா , அம்மா 

வந்ததால அடுத்து வந்த நாட்களில் 

கொஞ்சம் அடக்கமாக இருந்தேன்.


இனி திரும்பி வந்த கதையை பார்ப்போம்.. 


திங்கட்கிழமை காலையில் தஞ்சாவூர் 

வழியா திருச்சி போயி அங்கே 

இருந்து கோயம்புத்தூர் போகறதா

பிளான்..என்னோட ரெகுலர் ரூட் 

அதான்.. இருந்தாலும் அந்த ரூட் 

எப்பவுமே கொஞ்சம் கூட்டமா தான் இருக்கும்..
மயிலாடுதுறை வந்த உடனே ஒரு சேலம்

பஸ் காலியா இருந்துச்சு…

எப்படி பார்த்தாலும் தூரமும் , நேரமும் 

ஒண்ணு தான் னு ஒருத்தர் வித்தியாசமாய்

யோசிக்க ஆரம்பிச்சாராம்..அதுக்கு 

பின்னாடி அனுபவிக்க போறது தெரியாம… 

அந்த பஸ் சிதம்பரம் வழியா தான் சேலம்

போகுமாம்.. அவர் வீட்டில் இருந்து வேறு

வழியா போனா.. சிதம்பரம் ஒரு மணி 

நேர பயணம் தான்..
ஆனா இப்போ மயிலாடுதுறை க்கு 

ஒரு மணி நேரம். அங்கே இருந்து சிதம்பரம்

ஒரு மணி நேரம்…ஆரம்பத்திலேயே 

ஒரு மணி நேரம் அவுட்டா…சுத்தம்..

8.30 மணிக்கு சிதம்பரம் .அங்கே ஒரு

அரை மணி நேரம் ஸ்டாண்ட் ல போட்டுட்டான். 

போயி பொங்கல் சாப்பிட்டுட்டு 

வந்தேன்.

மறுபடியும் ஹோட்டல் சாப்பாடு..( உவ்வே…) 

அப்புறம் தான் சார் ஆரம்பிச்சது கூத்து…

அந்த பைத்தியம் புடிச்ச மொன்ன நாயி… 

டவுன் பஸ்சை விட கேவலமா வடலூர் 

போற வழியில ஒவ்வொரு வீட்டிலையா 

வண்டிய நிறுத்தி யாராவது வர்றீங்களா.. 

வர்றீங்களா..னு கேட்காத குறையா… 

தெருவுக்கு தெரு நிறுத்துறான் சார்.
விருத்தாசலம் போயி சேர்றதுக்குள்ள…


விழி பிதுங்கிடுச்சி…
அதுக்கு அப்புறம் வேறு விதமான இம்சை… 


விருத்தாசலம் – சேலம் ரோடு அவ்வளவு

மோசம் சார்..  

கொஞ்ச நேரத்துக்கு எல்லாம்

என் அடிவயித்துல இருந்து தொண்டைக்கு 

ரெண்டு உருளைகள் உருளுவது போல ஆச்சு.

முடியல… 


A .R.ரஹ்மான் பீட்டுக்கு

ஷகிலா ஆடுனா எப்படி இருக்கும்...?

அப்படி குலுங்குது பஸ்… 


ஐயா ரோடு காண்ட்ராக்டர் களே …

இருபதுகளில் இருக்கும் என்னாலையே 

இந்த சாலையில பயணிக்க முடியலையே..

முப்பது , நாப்பதுகள் ல இருக்குற நடுத்தர

வயதினரும்… அம்பது அறுபதை தாண்டிய

ஆயாக்களும் , தாத்தாக்களும் எப்படி 

சார் தாங்குவாங்க… 


தினம் தினம் இந்த ரூட்டில் வண்டி

ஓட்டும் டிரைவர் , கண்டக்டர் நிலைமை 

எல்லாம் டண்டணக்கா தான்…. 

மன்னிச்சுக்குங்க சார்.. இதெல்லாம் 

தெரியாம நான் உங்கள தப்பா பேசிட்டேன்…


கேள்விப்படாத ஊருக்கெல்லாம் வண்டி


போயி நிக்குது… வெயில் நேரம்..

வேர்வை வாசம்..வெறுப்பான 

பயணம்…வேடிக்கை பார்க்க 

விண்டோவுக்கு வெளிய வெட்ட 

வெளிகள்..நான் என்ன பாவம்


செஞ்சேன் பெருமாளே… 


உனக்கு இரக்கமே இல்லையா…


இத்தனை இடர்களை தந்த நீ இளைப்பாற

ஏதாவது இளம் கன்னிகளை காட்டி 

இருக்க கூடாதா… அத்தனையும் 

பொக்கையும் டொக்குமா இருக்குது… 


ஒரு பிகரை கூட காணோம்…ஏன் இறைவா…

மதிய நேரம் மயக்கம் வராத குறை.. 

ஒரு வழியா சேலம் வந்து சேர்றதுக்குள்ள 

செத்து சுண்ணாம்பு ஆயிட்டேன்…

சேலம் வந்து இறங்கும்போது மதியம் 2.30 மணி…

அங்கே இருந்து கோயம்புத்தூர் 4 மணி நேரம்… 

சரி..அந்த பாடாவதி பஸ் ல வந்து என்

பாடி பஞ்சர் ஆகி பணால் ஆனதால 

பீர் சாப்பிட்டு பீஸ்புல் ஆகலாம்னு பார்

தேடினேன்.. ஹாட் அடிச்சிட்டு தனியா 

ட்ராவெல் பண்ணா சங்கடமா இருக்கும்


சார்…அதனால தான்… ஒரு பிரெண்ட்

கிட்ட சேலத்தில AC பார் எங்க 

இருக்குனு கேட்டா…அவன் ஒரு 

இடம் சொன்னான்.. நான் அதுக்கு opposite ல

5 கார்னர் போயிட்டேன்… 

அங்கே தேவி டவேர்ஸ் ல ஒரு பார்.. 

அம்சமா இருந்துச்சு…


மானங்கெட்ட தனமா ஒரு பீர் வாங்கி

வச்சிக்கிட்டு ஒன்னரை மணி நேரமா

உக்காந்து இருந்தேன்.. 

கடைக்காரன் ஒரு மாதிரி டேப்பரா 

பார்த்தான்..நான் கண்டுக்கலை… 

அங்கே வேற ரெண்டு பேரு 

நட்பாயிட்டாங்க…,அவங்களும்

மெக்கானிகல் என்ஜினியர்ஸ் ..

ஒரே இனம்..சீக்கிரம் மிங்கிள் ஆயிட்டோம்… 

வேறு இடங்களில் உண்டாகும் நட்பு

மறந்து போகும்..

ஆனா சரக்கடிக்கும் போது வர்ற 

நட்பு ட்யூராசெல் பேட்டரியை போல 

நீடித்து இருக்கும்…

இவ்வாறாக எனது பொங்கல் 

பயணம் வழக்கம் போலவே 

பாப்பாக்களோடும்..

பாட்டில்களோடும் போனது..

No comments: