Sunday, February 6, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 4

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

நல்ல சரக்கை குடி..

எப்போதும் நன்றாகவே இருக்கும்...

மட்டமான சரக்கையும் குடி…

மாற்றம் வேண்டும் அல்லவா..




அதிகமா குடிச்சி ரிஸ்க் எடுக்கலாம்..

உன்கிட்ட ஆட்டோ வுக்கு 

பணம் இருந்தால்…

பாக்கெட்ல எக்ஸ்ட்ராவா பத்து 

பைசா கூட இல்லேன்னா கட்டிங் 

கோட கடையை  விட்டு வந்துடு .


போதையில் இருந்தால் 

நூலகத்தில் இருக்கும் புத்தகம் 

போல அமைதியாய் இரு..

இல்லைனா பொண்டாட்டி கிட்ட

ஏதாவது உளறி கொட்டி 

பொடிமாஸ் ஆகிடுவ..






நல்ல சரக்கோ…

கள்ள சரக்கோ… 

நினைவில் வைக்க வேண்டிய

இரண்டு முக்கியமான விஷயங்கள் …

குடிக்கலை னா குப்புறப்படு…

மட்டை ஆனா மல்லாக்க படு..





போதை அதிகமானால் நீ பேச 

வேண்டிய ஒரே மொழி 

மவுனம் மட்டுமே…
எவன் எவனுக்கு என்ன

அர்த்தம் வேணுமோ…

எடுத்துங்குங்கடா..

என்னை குழப்பி தெளிய 

வச்சிடாதீங்க டா…

No comments: