Monday, February 7, 2011

ஜோக்கூ..Part 15

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. கல்லூரியில் இருமனங்கள் 

ஒன்றாக இணைந்தது..

அப்புறமா பரிட்சையில 

அரியர்ஸ் குவிந்தது..

எங்க உருப்பட போகுதுங்க..






2. காதல் தோல்வியில் கண் 

கலங்கி நின்ற என் நண்பனுக்கு 

என்னிடம் இருந்து வந்த 

ஆறுதல் வார்த்தைகள்..

மச்சி..உனக்கு பீரா 

இல்ல ஹாட்டா..
  
டாஸ்மாக் - நாங்க இருக்கோம்…






3. சில கவிதைகளை புரிந்துகொள்வது

கடினம் தான்..

ஒரு சில பெண்களை பார்த்ததும்

தான் உணர்ந்தேன்…

சனியன் புடிச்சவளுங்க..

ஓவரா சீன் போடுறாளுங்க சார்..





4. ஓடி வந்து அணைத்திட வேண்டும்

என்று தான் இப்படி கொதித்து 

பொங்குகிறாயோ…

( அமலா பால் போல பொண்ணு

எல்லாம் இல்ல..)

அடுப்பில் வைத்த ஆவின் பால்…

பெருமூச்சு விட்டே வாழ்க்கை 

முடிஞ்சுடும் போல இருக்கே…





5. உன்னிடம் பேச ஆயிரம்

வார்த்தை உண்டு..

ஏனோ பேச முடியவில்லை..

உன்னை கண்டு வார்த்தைகள்

கூட வெட்கப்படுகிறது போல..

( அவ அண்ணன் ஏரியா ரவுடி சார்..)

No comments: