Saturday, February 5, 2011

ஜோக்கூ..Part 13

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. நினைப்பதை விட மறப்பது 

கடினம் என்று புரிந்து கொண்டேன்..
 
சனிக்கிழமைகளில் சரக்கு 
 
ருசி கண்ட பிறகு..






2. பூட்டி இருக்கும் கடைக்குள் 

காத்திருக்கும் சரக்குகள்..

ஆசை கொண்ட அடி வயிற்றில் 

போதையின் நினைவுகள்..

என்றும் பிரியாமல் என்னுடன் 

ஏலக்காய் இருக்க..

உடனே திறங்கடா.. 

நான் ஊத்திகிட்டு வூட்டுக்கு போறேன்..





3. வெளியில் வரும் வாந்தியில்..

தொலைந்து போகும் போதைகள்…

மறந்து போகும் உளறல்கள்..

கரைந்து போகும் காசுகள்..

எதுவுமே திரும்ப வருவதில்லை..

சரக்கடிக்கும் போது சூடாக

எதையாவது சாப்பிடுங்கள்..





4. எத்தனையோ பூக்கள் இருக்க..

என்னை கண்டதும் உன்னிடத்தில்

ஏனடி இந்த வெறுப்பு..

நான் கண் ஜாடை காட்டினா 

நீ ஏன் காட்டுற செருப்பு…

நான் உன்னை அணைக்க துடிக்கிறேன்

ஏன்னா நீ நெருப்பு…

உன் தங்கச்சிய உஷார் பண்ணிட்டு

போலாம்னா அவ அட்ட கருப்பு…

என்னை இப்படி பொலம்ப விட்ட 

உன் அப்பன் ஒரு பருப்பு..




5. கல்யாண வீட்டில்…

உள்ளே ஒரு ஜோடி சேர்ந்தது…

வெளியே ஒரு ஜோடி தொலைந்தது…

( நான் லவட்டிகிட்டு வந்துட்டேன்ல.. )    



          

No comments: