Monday, July 13, 2015

பாகுபலி - "தேவதை தமன்னா" ரசிகனின் பார்வையில்...


சிறுத்தை,வீரம் படங்களின் இயக்குனர் சிவாவை விட, 

தமன்னா எனும் பேரழகியை திரையில் எவராலும் 

அலங்கரித்து காட்ட முடியாது என்ற என் எண்ணத்தை 

மாற்றியுள்ளார் ராஜமௌலி...
 

ஏற்கனவே தமிழ்நாடு என்ற பெயரை "தமன்னாடு" னு 

மாற்ற துடிக்கிறேன். இனி அகராதியில தேவதையை 

தூக்கிட்டு தமன்னா னு மாத்திடலாம்.


படத்தோட கதையைப் பத்தி தான் எல்லாரும் 

சொல்றாங்களே..நாம அதுக்கும் மேல சில 

விஷயங்களைப் பார்ப்போம்..


முதல் சீனிலேயே ரம்யா கிருஷ்ணனை 

"பின்னாடி குத்திடுறாங்க".. கத்தியால.. முதுகில..

(ம்ஹும்..நான் திருந்துவேன்னு எனக்கே நம்பிக்கை இல்லை..)

வயசானாலும் வாளிப்பா தான் இருக்காங்க..ஹ்ம்ம்ம்ம்..

அம்மன் படத்திலேயே ஜொள்ளு விட்டவன் நான்...


பிரபாஸ் வளர்கிற அந்த கிராமத்தில ரோஹிணியைத் 

தவிர வேற பெண்களையே காட்டாத இயக்குனருக்கு என் 

வன்மையான கண்டனங்கள்...



அவ்ளோ பெரிய சிவலிங்கத்தை தூக்குறது கூட 

பரவா இல்லைங்க..அப்படியே ஜம்ப் பண்ணான் பாருங்க..

சிரிப்பை அடக்க முடியல.. பயலுக்கு ஒரு சின்ன கீறல் 

கூட இல்லை..

 
பிரபாஸ் எப்போ பாரு "ஏறிக்கிட்டே" இருக்கான்.. 

மலை மேல,மரத்து மேல, "தமன்னா" மேலனு.. 

மலையில இருந்து தாவுனான் பாருங்க.. 

அணிலு பிச்சை வாங்கணும்..


ஹாலிவுட் படங்களிலும்,சைனீஸ் படங்களிலும்,

சில "விஜய்" படங்களிலும் மட்டுமே பார்த்து வந்த 

அதிஅற்புத அந்தரத்தில் தாவும் கலையை அழகா 

காட்டி இருக்காங்க..ஏனோ எனக்கு தான் சிரிப்பை 

அடக்க முடியலை.. (200 கோடி அப்பே..200 கோடி..?? 

ஆமா 200 கோடி.. நீ பார்த்தே..??)


சரி தமன்னாவுக்கு வருவோம்.. நீலப் பட்டாம்பூச்சிகள் 

சூழ திரும்புனா பாருங்க.. செயலிழந்து போயிட்டேன்.. 

அருவி பேக்ட்ராப்ல வெள்ளி மழையில நனையுற 

தங்க சிலையா ஜொலிச்சா தமன்னா டார்லிங்..



தமன்னாவை சில வீரர்கள் துரத்த,அவ ஓட,எனக்கு 

கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. ஒருத்தன் அவளைக் 

கொள்ள பாய, நான் ஸ்க்ரீனை நோக்கி ஓட அவ 

கத்தியால அவனைக் குத்தினா.. நான் திரும்பிட்டேன்.. 

அழகுப் பதுமையினுள் ஆக்ரோஷ புயல்..



அவளோட அந்த "கூர்மையான இதுல" இருந்து 

என்னால பார்வையை எடுக்கவே முடியலை.. 

ஆங்.. அந்த கத்தி..கத்தி..

 

அடுத்ததா..அவ தனிமையில படுத்துகிட்டு தண்ணிக்குள்ள 

கையை விடுவா பாருங்க.. அவ கையைத் தொட்ட 

மீனெல்லாம் தேனா தித்திக்கும்..ஹ்ம்ம்ம்ம்... 



அவ கூட ஒரு தோழி வருவா.. நல்ல ஃபிகர்..நல்ல ஃபிகர்.. 

அவளுக்கு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் வச்சி இருக்கலாம்...

 

பிரபாஸ்கும் தமன்னாவுக்கும் இடையே காதல் அரும்பும் 

காட்சி இருக்கே.. அடடடடா.. அவங்க உருள..எனக்கு 

உடம்பு வலி வந்துடுச்சு.. ஹ்ம்ம்ம்ம்ம்..அதுலயும் அந்த 

தண்ணீரில் அவ மொத்த உருவமும் தெரியும் காட்சி.. 

சொல்ல வார்த்தைகளும் இல்ல.. "ஜொள்ள வாயும்" இல்ல..


 
என்னடா தெலுங்கு படத்தில இன்னும் ஹீரோயினை 

தண்ணியில நனைய விடலயேனு நெனச்சேன்.. 

உடனே தமன்னாவை குளிப்பாட்டிட்டானுங்க.



அனுஷ்காவை "அழுக்கு தேவதையா" காட்டி இருக்காங்க.. 

அட போங்க பாஸ்.. செகண்ட் பார்ட்டிலயாவது சிறப்பா

காட்டுங்க..அவங்க காட்டுவாங்க..



அந்த 100 அடி சிலையை நிறுவும்போது கயிறு கட்டி 

இழுக்கிறவங்க எல்லாம் கை வலி,கால் வலின்னு 

கத்தாம "பாஹுபலி"னு கத்துறாங்க..என்னமோ போ.. 



200 கோடி பட்ஜெட்டாலையோ என்னவோ சம்பந்தமே 

இல்லாம ஆனா "மிகஅவசியமான"(ஹி..ஹி..) ஒரு ஐட்டம் 

சாங் இருக்கு.. மூணு பிகர்கள் கூட..ஒருத்தியை மட்டும் 

துள்ளல்னு  ஒரு சூப்பர் ஹிட் படத்தில பார்த்திருக்கேன்..

வில்லன்ற காரணத்துக்காக ராணாவை ஆட்டத்திலேயே

சேர்த்துக்கலை.. ராஜமௌலி வேற வர்றாரு அந்த சீன்ல.

எல்லாம் K.S ரவிகுமாரால வர்றது.. 



முதல் பாதி முழுக்க சூப்பர் பவர்னு காமெடியா

இருந்தாலும்,தமன்னாவைக் காட்டி ஜொள்ளு விட்டு 

வாயைப் பிளக்க வைச்சு.. இரண்டாம் பாதியில அரண்மனை

செட்டுகளாலும்,போர்க்காட்சிகள் பிரம்மாண்டத்தினாலும் 

வாயைப் பிளக்க வைக்கிறாங்க..


ட்ராய்,ஹெர்குலிஸ் இது எல்லாம் போர் அடிக்குதுனு 

நான் பார்க்க மாட்டேன்..என்னைப் போல ஆட்களையும் 

பார்க்க வைக்கிற விஷயத்தில..இந்த படம் WORTH TO WATCH..


ஹர ஓ சம்பா.. அழகுனா தமன்னா தாம்பா...
 
என்றும் ஜொள்ளுடன்.. 3G