Saturday, February 21, 2015

மாத்தி யோசி .. 84


 

போன் பண்ணும்போது கால் வெயிட்டிங் வரலைனாலே 
 
பசங்க "நீ வேஸ்ட்டுடானு" கேவலமா கேட்குறானுக..
 
# ஹ்ம்ம்ம்..ஆடிய ஆட்டம் என்ன...?????




"நீ" என்பது ஒரு எழுத்துனு எவனாவது ஆரம்பிச்சாலே
 
"மூடு" என்பது இரண்டு எழுத்துனு மொக்கை 
 
போட்டுடுறேன்..# சாவடிக்கிறானுங்களே..!!!




FEB 14 உறவுக்கு பரிசு கொடுக்கலைனா விரிசல் 
 
வந்து பிரிவாமே..# நல்லவேளை எனக்கு காதலியும் 
 
இல்ல..காசும் இல்ல.."நல்ல கம்பெனியை" தேடணும்..




இன்னமுமா பசங்க காதல் கவிதைகள் எழுதி இம்ப்ரெஸ்
 
பண்ணனும்னு பொண்ணுங்க நினைக்கிறாங்க...???
 
4 பசங்க கவிதைகள் எழுதி வாங்கிட்டு போயி இருக்கானுங்க..



"கவிதைகள் விற்பனைக்கு" போர்டு வச்சிடலாம் போல..
 
# காசு இல்லாத .நேரத்துக்கு உதவும்..

Thursday, February 19, 2015

ஏன் இப்படி ...89



இந்த வருஷமும் சனிக்கிழமை வாழ்த்துக்கள் னு 

சொல்ல வைச்சிட்டாங்க..#ஹ்ம்ம்ம் எனக்கில்ல..

எனக்கில்ல..அவ்வ்வ்வ் 



என் போன்ல பொண்ணு குரல் கேட்டாலே பசங்க 

பொறாமையில பொங்கிடுறானுங்க..

#அடேய்..இருங்கடா..ஏன் இன்னும் கிரெடிட் கார்டு 

பில்லு கட்டலைன்னு கேட்குறா..!!



ஒரு பக்கம் காதலி இல்லாதது கடுப்புனா,

இவனுங்க கவிதை சொல்றது காண்டாகுது.. 

# வாங்கடா வாயில கத்தியை விட்டு சுத்துறேன்..



மிர்ச்சி டைம் செக்னு 3 நிமிஷம் விளம்பரம் போட்ட 

அப்புறம் டைம் சொல்றானுங்க..#பக்கத்தில இருந்தவர் 

கிட்டயே நேரம் என்னனு கேட்டு இருக்கலாம் போல ..



ஒரு விஷயத்தில இருக்குற உண்மைத்தன்மை 

என்னனு தெரிஞ்சுக்கிறதை விட,அது தப்புன்னு நிரூபிக்க

அதிகம் மெனக்கேடுறானுங்க..

Tuesday, February 17, 2015

மாத்தி யோசி .. 83



மதராசப்பட்டினத்தை தமிழ்நாடுனு மாத்தினாங்க..
 
ரியல் எஸ்டேட் காரனுங்க சென்னையை மறுபடியும் 
 
கன்னியாகுமரி வரை கொண்டு போயிடுவானுங்க போல..
 
#இப்போவே திண்டிவனம் வரை சென்னைக்கு மிக 
 
அருகில்னு ஆயிடுச்சு.. 



பரீட்சைக்கு பிரார்த்தனைக் கூட்டம் போட்ட மாதிரி
 
உலகக்கோப்பையை வெல்ல ஒரு உபவாசக்கூட்டம் 
 
போட்டா உபயோகமா இருக்கும்..
 
# இறங்கி வாரும் ஆண்டவரே..!!!!!



பீர் அடிச்சோமா,பிரியாணி சாப்பிட்டோமா,
 
பீடா போட்டோமான்னு இருக்குறது தானே அழகு..
 
பொக்கே வாங்கணும்,கிப்ட் கொடுக்கணும்,
 
மொய் எழுதணும்னு # BAD FELLOWS..



"என்னை அறிந்தால்"  இவ்வளவு எதிர்பார்த்து 
 
ஏமாந்து இருக்க மாட்டோம்..# தெரிஞ்சிக்காம 
 
போயிட்டோம் கவுதம் சார்..


 
ஒரு நல்ல விஷயம் உடனே எத்தனை நாளைக்கு 
 
இது தொடருமோனு இனம்புரியாத பயம் வந்து ஒட்டிக்குது..
 
#எல்லாம் மாயா..எல்லாம் சாயா..!!!!