Monday, August 31, 2015

10 செகண்ட் கதைகள்.. Part 2




செடியில் முதன்முதலாக பூ பூத்ததையும், 

பக்கத்து வீட்டு மனிதர் முதன்முதலாக சிரித்ததையும், 

உடல் மீது முதல் மழைத்துளி விழுந்ததையும் 

விழாவென கொண்டாடுகிறோம்..

# ஆம் நாங்கள் ஆண்ட்ராய்ட் யுக மனிதர்கள்..




எனக்கு அடுத்தவங்களைப் பத்தி புறம் 

பேசுறவங்களைப் பார்த்தாலே அருவெறுப்பா இருக்கும்..

அப்படியா மச்சி என்றவனிடம் சொன்னேன்..

ஆமாம்டா.. கிளார்க் ரவி என்ன பண்ணான் தெரியுமா...?????



கண்ணு மண்ணு தெரியாம அப்படி என்ன குடி 

வேண்டி இருக்கு.. இவனுங்களால தான்டா குடிக்கிற 

அத்தனை பேருக்கும் அசிங்கம்னு சொல்லிட்டு கீழ 

குனிஞ்சி தேடிக்கிட்டு இருக்கேன்.. என் வேட்டியை...




எவ்ளோ வெயில் அடிக்குது..பாவம் மக்கள்னு 

பரிதாபப் படுற நான் தான்.. கொஞ்சம் முன்னாடி 

பசிக்குதுனு கை ஏந்திய மூதாட்டியை 

தவிர்த்து விட்டு வந்தவன்..




ABCD கூட தெரியலையா உனக்குனு கலாய்ச்சேன் 

பக்கத்து வீட்டு பாப்பாவை.Candy crush level 70 ல 

திணறிக்கிட்டு இருந்தேன்.போனை வாங்கி கேமை 

முடிச்சிட்டு என்னைப் பார்த்தா பாருங்க 

ஒரு பார்வை..!!!

வேணாம் விடுங்க..



வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் 

தெரியுமானு ஆரம்பிச்ச தாத்தாகிட்ட, 

பாட்டி என்ன வாங்கிட்டு வர சொன்னாங்கனு 

ஞாபகம் இருக்கானு கேட்டேன்.. 

நடுங்கிட்டார்.. 

திருக்குறள் < திருமதிகுரல்...????

Tuesday, August 25, 2015

10 செகண்ட் கதைகள்..


3 மணி நேரம் போராடியும் தீயின் ஆரம்பப் புள்ளியை 

கண்டறிய இயலாதவர்களிடம் நான் சரியாய் 

அடையாளம் காட்டினேன்.. ஆம்.. நான் அங்கே தான் 

சிகரெட் துண்டினை வீசியிருந்தேன்...




9.40 க்கு வேகமாய் ஒன் வேயில் சென்ற என்னை 

மடக்காத காவலர்கள்.. 10.10 க்கு திரும்பி வந்த 

என்னை மடக்கி சொன்னனர்.. "ஊதுடா.."




5 வருடங்களாக உன்னிடம் சொல்லத் தயங்கிய 

என் காதலை.. நீயாகவே வந்து என்னிடம் 

சொன்னதும் எனக்குள் மணியடித்தது..

# ஆம்..கருமம் பிடித்த அலாரமே தான்..




பைக்கில் செல்லும்போது நீ கொடுத்த செல்போன் 

முத்தத்தால் நான் காற்றில் மிதப்பது போலவே 

ஒரு உணர்வு..ஆனால் என் உடம்பை சுத்தி ஏன் 

இவ்ளோ பேர் நிக்குறாங்க...




எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு சொல்றாங்க..

ஏன்னே புரியலை.. கண்ணாடியில தெரியிறவனும் 

அதையே சொல்றான்.. பைத்தியக்காரன்...




பசிக்குதுனு  சொன்ன நண்பனிடம் என்ன 

சாப்பிடலாம்னு கேட்டேன்.. ப்ரைடு ரைஸ், சிக்கன் 

அதுக்கு முன்னாடி 2 பீர்னு சொல்றான்..




உன்னைக் காதலிக்க தொடங்கியபின் யாரும் 

என் கண்களுக்கு தெரிவதில்லை.. நீயும் தான்..

# எனக்கு தான் பார்வை இல்லையே..