Wednesday, November 20, 2013

மாத்தி யோசி .. 71



ஒரு காலத்தில நானும் யோகாசனம் பண்ணுனேன்..

சவாசனம் பண்ணும்போது எங்க அம்மா பார்த்துட்டு 

தூங்குறேன்னு தண்ணி ஊத்திட்டாங்க..






 

இனிமே பொறுமைக்கு எருமையை உதாரணம் 

சொல்லாம ஆடித்தள்ளுபடியில பெண்களோட துணிக்கடைக்கு 

போகும் ஆண்களை சொல்லலாம்..# அசராம இருக்காங்கப்பா..

எனக்கு இன்னும் பயிற்சி வேணும் போல..



யா யா படம் பார்த்தேன்..சட்டியில இருந்தா தானே அகப்பையில் 
 
வரும் பழமொழிக்கு சிறந்த உதாரணம்..சிவாவின் 
 
சவ பெர்பார்மன்ஸ்..




என்ன தைரியத்துல இப்படி படம் எடுக்கிறானுங்க னு யோசிக்காம 
 
என்ன தைரியத்துல நீ தியேட்டருக்கு போனேன்னு எனக்கு 
 
நானே கேள்வி கேட்கும் நிலைமை.

 
 
கொலையும் கூலிங்க்ளாசும் இல்லனா  சரக்கும் சைடிஷ்ஷும் னு 
 
பெயர் வச்சாத்தானே அது மிஷ்கின் படமாகும்..என்னமோ போங்க..
 
 
 
ஐயையோ இவனுங்க கொடுக்குற அலப்பறையை பார்த்தா 
 
சற்குணம் தனுஷுக்காக சறுக்கிருப்பாரோ..? அடுத்த 
 
மர்ஷியல் குப்பையா இருக்கக்கூடாது ஆண்டவா..!!

 
நான் சொன்ன மாதிரியே சறுக்கிட்டார் சற்குணம். உங்க காசு 
 
தண்டமா போச்சேனு நமக்கும் தயாரிப்பாளருக்கும் 
 
நய்யாண்டி காமிச்சுட்டார்..




ரெண்டு நல்ல படம் கொடுத்து மூணாவதா கமர்சியல் படம் ,

பெரிய ஹீரோனு சுசீந்திரனுக்கு ராஜபாட்டை,

சற்குணத்துக்கு நய்யாண்டி.மாமா பௌ...

 

 
சிறுத்தைல ஆந்திரா வாடை ரொம்ப  அதிகமா இருந்துச்சே..
 
அஜித் படத்துக்கு "காரம்"னு  பேரு வச்சி இருக்கலாம்.

 
 

அஜித்தின் ஆரம்பம் பில்லா 2 போல "ஆ..ரம்பம்."னு  நம்மை 

அலற வச்சா அணில் குஞ்சுங்க அலப்பறை பண்ணி 

ஆகாசத்துல பறப்பானுங்களே..

Sunday, November 17, 2013

ஏன் இப்படி ...77


உங்களைத் தவிர நாங்க வேற யார்கிட்ட சிரிச்சு பேசினாலும் 
 
சூர காண்டு ஆகுரீங்களே..ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?



உங்களுக்கு மட்டும் எல்லாரும் நண்பர்களா இருக்கணும்..
 
நாங்க ம்!@#$%^ பிடிச்சி இழுத்து சண்டை போட்டுக்கணும்..
 
இது என்ன நோய் பாஸ் / கேர்ள்ஸ்..?




எங்களுக்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை 
 
இருக்குனு சொல்லும்போது ஒரு மொக்கை காரணம் சொல்லி 
 
எங்களை உங்க கூட இருக்க வச்சி இம்சை பண்றீங்களே.. 
 
ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?




பக்கத்தில இல்லைனாலும் நாங்க சந்தோஷமா இருக்கும்போது  

ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி எங்க நிம்மதியைக் 

கெடுப்பதில் என்ன ஆசை பாஸ் / கேர்ள்ஸ்..?











நாங்க சொல்ற எந்த கருத்தையும் ஒத்துக்காம ஏதாவது 

காரணம் சொல்லி தட்டிக்கழிக்குறீங்க..அப்புறம் ஏன் எங்க 

கிட்ட கேட்குறீங்க பாஸ் / கேர்ள்ஸ்..?




கொலைகாரனைக் கூட மன்னிச்சுடுவாங்க போல.. 

குடிக்கிறவன்னு சொன்னா கோரமா பார்க்குறாங்க..?


 



எக்ஸாம் ஹாலில் அடுத்தவன் பேப்பரை 

பார்க்கிறதை விட,ஹோட்டலில் அடுத்தவன் என்ன 

சாப்பிடுறான்னு பார்க்கிறதில நம்ம மக்கள் கில்லாடிங்க..




குழப்பத்தில் எடுக்கும் தவறான முடிவுகள் பெரும்பாலும் 

கூட இருப்பவர்களின் குடைச்சலாலேயே எடுக்கப்படுகின்றன..

#கொலை பண்ணிடலாமா.?

 



தன்னைப்பத்தி கேவலமா பேசுறதை சிரிச்சுக்கிட்டே 

ஏத்துக்குறவன் இன்னொருத்தனைப் பத்தி புகழ்ந்தா உடனே 

உர்ருன்னு ஆயிடுறானுங்க..#அட மானங்கெட்ட பதருகளா..



 


குழப்புவதில் தெளிவாகவும் , புரிந்துகொள்வதில் 

எப்போதும் குழப்பமாகவும் இருக்க பொண்ணுங்களாலும் , 

பாஸ்களாலும் மட்டும் தான் முடியும்..#ப்ப்பா... 

Thursday, November 14, 2013

என் வாழ்க்கை நீ


காதல் வழியும் உன் கண்களின் வெளிச்சம் பட்டு என் 

தேகமெல்லாம் நிறம் மாற , என்னை சூழ்ந்திருந்த கவலை 

மேகங்களும் நிறம் மாறுகின்றன..


காலம் முழுதும் நீ சேர்த்து வைத்த காதலை , என்னைப் பார்த்த 

அந்த நொடியில் உன் கண்களின் வழியே கண்டேன்..

 
எனக்காக காத்திருக்கையில் வெட்கம் பூசிய வெள்ளைத் 

தாமரையாய் உன் முகம்,ஆனால் தவிப்புடன் அலைபாயும் 

கண்கள் ..# ராட்சசி..லவ்யூடி..


 
உன் காதல் இன்றி இத்தனை நாள் எப்படி வாழ்ந்தேன் 

என தெரியாது.. ஆனால் இனி நீ மட்டுமே என் 

வாழ்க்கை என தெரியும் ..


அத்தனை உறுப்புகளின் வலியும் கண்களில் தெரிவது 

போல என் அத்தனை உறவுகளும் உன் காதலில் தெரிகிறது...


எத்தனையோ அழகிகள் கண்டபோதிலும் , உன்னைப்போல் 

ஒருத்தி இருப்பதை இன்னமும் நம்பமுடியவில்லை என்னால்..

# தேவதை ஸ்த்ரீயடி நீ..






உன் அழகைக் கண்டு அச்சப்பட்டு விலகுகிறேன் நான்..

கண்களில் காதலைக் காட்டி காந்தம் போல் ஈர்க்கிறாய் நீ..



நம் நலன் குறித்து செய்வன அனைத்தையும் உன்னை 

ஆலோசித்தே செய்கிறேன்..என் நலன் குறித்து 

மட்டும் நீயே முடிவெடுப்பது ஏன் ஹனி..?





எனக்கு வலிகளைத் தர, நீ பேசும் வார்த்தைகளின் 


தொனியை மாற்றினாலே போதும்..

# துடிக்க வைக்காதே ஹனி.. ப்ளீஸ்..




எத்தனை முறை என்னை உயிர்ப்பிக்கிறாயோ, அத்தனை 


முறை என்னை மரிக்கவும் செய்கிறாயே ஏனடி..? 

# ஹனி பெயர்ச்சி..