Tuesday, February 26, 2013

ஏன் இப்படி ...74






கொடுக்குற சம்பளம் வேலை செய்யுறதுக்கு தான்,

பேசுறதுக்கு இல்லைன்னு எப்போ தான் புரிஞ்சிப்பானுங்களோ

# ஆபிஸ் அவலங்கள்..

 



தலைமைக்குக் கட்டுப்படணும்ன்ற ஒரே காரணத்துக்காக..

கண்டவனும் நம்மை கலாய்க்கிற அளவுக்கு நடப்பது 

இருக்கே..#வெறியில விஜய் படம் பார்க்கலாம்னு கூட தோணுது..


 


ஒரு கேள்விக் கேட்டா , தேவையான பதிலை சொல்லாம,

சம்பந்தமே இல்லாத பத்து பதில்களைத் தர்றானுங்க..

# கொல்லாதீங்கடா டேய்..

 



ஒரு வேலையை வேகமா முடிச்சி நல்ல பேரு 

வாங்கணும்னு நினைத்து,அதை தப்புத்தப்பா செய்து 

உயிரை வாங்குறவனுங்களை என்ன பண்ணலாம்…?

வேட்கையாய்  ஆரம்பிக்கும் வேட்டை வேதனையில் முடிவது 
ஏனோ..? JOB SEARCH / FIGURE PICK UP

பயனில்லைன்னு தெரிஞ்சதும் எப்படி தான் ஞானி போல 
பற்றற்று எனக்கு வேண்டாம்னு சொல்றானுங்களோ? 

பொய் பேசுறவன் எல்லாம் ஒண்ணு சேர்ந்து உண்மையை 
பேசுறவனை மாட்டிவிட்டு ஓரங்கட்டுவது அதிகமா 
அலுவலகங்களில் மட்டுமே நடக்குது.



மோட்டல்களில் கொள்ளை அடிப்பானுங்க தெரியும்..

அதுக்காக BOOMER ரெண்டு  ரூபாய் எல்லாம் ஓவர்டா டேய்..

 


வயசு வித்தியாசம் பார்க்காம நிறைய பேருக்கு ஐஸ்க்ரீமும் 

சாக்லேட்டும் பிடிக்குது.

சான்ட்விச் நடுவுல இருக்கும் ஸ்டப் கணக்கா 
மேனேஜ்மென்ட் , எம்ப்ளாயீஸ் இடையில ஸ்டாப்ஸ் 
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்.

Saturday, February 23, 2013

சமாதான முத்தம்

 
 
 
காதல் ததும்பும் உன் கடைக்கண் பார்வை என் மீது படும் 
 
சில கணங்கள் , பலமணி நேரம் என்னுள் இருக்கும்..
 
 
 
கண்களை மூடினால் நீ மறைந்து விடுவாயோ என் அஞ்சியே 
 
இமைக்க மறுத்து வெறித்து பார்க்கிறேன்... 
 
# தேவதை ஸ்த்ரீயடி நீ..(காஞ்சு போயி இருக்கேனும் சொல்லலாம்..)
 
 
 
உன்னிடம் மட்டுமே எனக்கு தெரிந்த மூன்று மொழியிலும் 
 
மவுனம் சாதிக்கிறேன்..ஆனால் என் கண்களில் ஒளித்த 
 
காதலைக்கண்டு புன்னகைக்கிறாய் நீ..#லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
தன்னைத்தானே இயக்கும் சக்தி மிக அரிது..நீயோ 
 
சுலபமாய் செய்கிறாய்..ஆம்..என் உலகத்தை 
 
இயக்குபவள் நீ தானே..
 
 
 
கடற்கரை இரவில் ,மிக அழகாக உள்ளதென 
 
நிலவை சுட்டிக்காட்டுகிறாய். நானும் ஆம் என்கிறேன்..
 
உன் விரல் நுனியைப் பார்த்தபடி..
 
 
 
 
இதயத்தை இடம் மாற்றிக்கொள்வோம்..
 
இரக்கமின்றி இறுக்கி அணையேன் ஹனி...
 
 
 
 
உன் கண்களின் கள்ளச்சிரிப்பின் வழியே கண்டு கொண்டேன்.. 
 
காதல் கொண்ட உன் மனதை..ராட்சசி.. 
 
லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
 
சிரிக்கும்போதும்,சிலிர்க்கும்போதும் அழகாய் இருப்பது 
 
பெண்கள் மட்டுமே...ஹ்ம்ம்ம் 

 



உன் ஒரே ஒரு சமாதான முத்தம் பெற வேண்டி 

சண்டையிட்டு,எண்ணிலடங்கா சமாதான முத்தங்களை 

உனக்கு அளிக்கிறேன் நான்..


 


உன் அத்தனை வலிகளையும் மறைக்க முயல்கிறாய்..

உன்னை கண்ணீர் சிந்த விடக்கூடாது என நினைக்கும் நான் 

கலங்காமல் இருக்க..லவ்யூடி ஹனி..

Monday, February 18, 2013

ஏன் இப்படி ...73





LICKING ,SUCKING னு சொன்னா ஒண்ணும் சொல்லாதவங்க..


அதையே தமிழ்ல சொன்னா டேப்பரா பார்க்குறானுங்க..

#ஏன்டா ஏன்..? தேனை LICK பண்றேன்.. குச்சி மிட்டாயை 

SUCK பண்றேன்னு சொன்னா நல்லாவா இருக்கு…?
 


இப்போவெல்லாம் செல்போனை பேசுவதற்காக உபயோகிப்பது 

ரொம்ப கம்மியாயிடுச்சு போல..(கடலை தவிர்த்து) தகவல் 

சொல்ல பயன்படும்னு சொன்னாங்க.. பொழுதுபோக்கு 

கருவியா மாத்திட்டோம்..
 



பொறைக்கே வக்கு இல்லாதவனைப் பார்த்து பிட்சா 

சாப்பிடலையானு கேட்குறது போல.. எனக்கு காதலிக்கவே 

பொண்ணு கிடைக்கலை..இதுல எப்போ கல்யாணம்னு கேட்டு 

காண்டு ஆக்குறானுங்க எசமான்...

 




பிரெண்டுக்கு போன் பண்ணேன்..மச்சி FB ல பிசியா இருக்கேன்.. 

FB ல சாட் பண்ணலாம்  வாடா னு சொல்றான்..வெளங்கிடும்…

 



இப்போவெல்லாம் சத்தியமா சொல்றேன்னு சொன்னா யாரும் 

நம்ப மாட்றாங்க..ஆனா ப்ராமிஸ் பண்ணா நம்புறாங்க..

#என்னடா நடக்குது இங்க..

 



வாதம் பண்ணும்போது ஒரு எழவும் தோண மாட்டுது..

ஆனா வேடிக்கை பார்க்கும்போது என்ன என்னமோ தோணுதே..

 



புதிதாய் ஆங்கில வார்த்தைகளை அறிந்து கொள்ள ஆர்வம் 

காட்டும் மக்கள்,தினத்தோறும் பயன்படுத்தும் 

பிறமொழி வார்த்தைகளுக்கு தமிழ் பதம் தெரிஞ்சிக்க 

ஆர்வம் காட்ட மாட்றாங்க..

 




சில பெண்களின் சமையலைக் கூட சகிச்சிக்கிட்டு சாப்பிடலாம்..

ஆனா அவங்க அதை செய்ததை ஏதோ சாகசம் பண்ண மாதிரி 

சீன் போடுவாங்க பாருங்க..அவ்வ்வ்... 


சில பேரு பேசும்போது அவங்களைக் கொன்னுடலாம்னு தோணும்..

சில பேரு பேசுறதைக் கேட்கும்போது தற்கொலை 

பண்ணிக்கலாம்னு தோணுது..

 



"இது உன்வேலைடா ..நீயே செய்னு மேலதிகாரி கிட்ட 

ஏத்து வாங்கியதைக் கூட,எல்லாப் பொறுப்பையும் எங்கிட்ட 

தான் கொடுக்குறாங்கனு என்ன அழகா மாத்துறானுங்க..

#எப்படிடா..?

Wednesday, February 13, 2013

கண்களின் மொழி



நீ வித்தியாசமானவள் தான் ஹனி. நீ இருக்கும் இடத்தில் 

அழகு மட்டுமே தெறித்து சிதறுகிறது..

 

பேசாமல் அருகில் அமர்ந்து இருக்கையில் உன்னில் 

இருந்து வெளிப்படும் வாசனை கூட என்னிடம் 

காதலையே சொல்கிறது.

 



உன்னுடைய சந்தோஷம் தான் நான்...ஆனால் 

என்னுடைய எல்லாமுமே  நீ மட்டுமே ஹனி..

# புரிஞ்சிக்கோ பம்ப்ளிமாஸ் 

 


சூழ்நிலைகளால் எதிரில் இருக்கும் அனைவரும் "மனிதர்களாகவும்" 

தோன்ற,நீ மட்டும் சிறகுகள் இல்லாத தேவதையாய் 

தோன்றுகிறாய்  எனக்கு..ஆசிர்வதித்து அணைத்துக்கொள் 

ஹனி..ப்ளீஸ்

 

பசி தீர உண்ணும் என்னைக்காட்டிலும் , நான் பசியாறுவதைப்

 பார்த்துப் பூரிக்கும் உன் கண்களிலே தான் தேவ திருப்தி 

# லவ்யூடி ஹனி..

 


காதல் வழிய நீ பேசும் தருணங்களில் என் காதுகள் 

அதைக் கேட்பதேயில்லை..என் கண்களிரண்டுமே 

பார்க்கவும் , கேட்கவும் செய்கின்றன...

#அவ்வளவு அழகு ஹனி நீ..



 


எனக்கு என்ன தேவை என்பது நான் சொல்லாமலே உனக்கு 

தெரிவது ஆச்சர்யம் இல்லை அது எனக்கு தேவையான 

நேரத்தில் கிடைக்கும்படி செய்கிறாயே அது தான்  ஆச்சர்யம் ..

#தேவதை ஸ்த்ரீயடி நீ..

 


பிரிவுக்கு பின் வரும் சந்திப்பில் , கண்களில் நீருடன் துடிக்கும் 

உன் உதடுகளின் துடிப்பிலே தானடி என் உயிர் 

இன்னும் துடித்துக்கொண்டு இருக்கிறது..கட்டி 

அணைத்துக்கொள் ஹனி.




கோபத்தின் மிகுதியில் போடி என்கிறேன்..கண்களில் நீருடன் 

நீயும் வாடா என்கிறாய்..#அதிரப்பள்ளி கூட்டிப்போயி 

தள்ளி விட்டுடுவா போலேயே..அவசரப்பட்டுடனோ..?அவ்வ்வ்வ்….



 
 
ஏதோ ஒரு நாட்டில் , ஏதோ ஒரு மொழி பேசித் திரிந்த 
 
என்னை , கண்களின் மொழி பேசி காதல் தேசத்தில் 
 
அலைய வைத்தாய்..# ஐயாம் லவ்விங் பெங்காலி பிகர்..

Saturday, February 9, 2013

ஏன் இப்படி ...72 ( BOSS & GIRLS )



ஒரே விஷயத்தை பல கேள்விகளா கேட்க இந்த பாஸ்களாலும் 


பொண்ணுங்களாலும் மட்டும் தான் முடியும்…#ஸ்ஸ்சப்பா..எத்தனை…?

 


கொஞ்சமா பேசணும்..நிறைய கேட்கணும்னு சொல்லிட்டு நம்மை 

பேச விடாம அவங்க மட்டும் பேசிக்கிட்டே இருக்காங்க..

ஏன் பாஸ்…? ஏன் கேர்ள்ஸ்…?

 



நாம செய்யக்கூடாதுன்னு இருந்தாலும்,நம்மகிட்ட எப்படி 

வேலை வாங்கணும்னு இந்த பாஸ்களுக்கும்,பொண்ணுங்களுக்கு 

நல்லாவே தெரியுது..எத்தனை பசப்பு வார்த்தைகள்..

என்னா திறமைடா சாமி..

 



இவங்ககிட்ட அவ்வளவு சீக்கிரம் நமக்கு கோபம் வராது..

மீறி கோபப்பட்டா, உடனே பம்மி பச்சைக்குழந்தை போல 

ரியாக்ஷன் கொடுக்குறாங்க..? எப்படி பாஸ்..? எப்படி பொண்ணுங்களா..?

 




பாசத்துக்கு கட்டுப்படுறோமோ இல்லையோ,கட்டுப்பட்டா 

மாதிரி இவங்ககிட்ட வேஷம் போட்டே ஆகணும்..

# இல்லைனா விட மாட்டாங்க..பாஸ் & கேர்ள்ஸ்..

 



சிரிச்சுகிட்டே பேசி , கேட்குறவனை வெறி ஏத்தி காண்டாக்க 

இவங்களால மட்டும் தான் முடியும்..#காதுல ரத்தம் வந்தாலும் 

கர்ச்சிப் தருவாங்களே தவிர,பேச்சை நிறுத்த மாட்டாங்க..

 



நாம கேட்குறோம்ன்ற ஒரே காரணத்துக்காக என்ன வேணும்னாலும் 

பேச இவங்களால எப்படி தான் முடியுதோ…? உங்களுக்கு 

மனசாட்சியே இல்லையா..?

 



நாம ஒரு தப்பு செஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற 

இவங்க தப்பு செஞ்சி அதை நாம கண்டுபிடிச்சிட்டா ஒரு

 ரியாக்ஷன் கொடுப்பாங்க பாருங்க..அத்தனை 

ஆஸ்கரும் கொடுக்கலாம்..

 



நம்மோட தாமதத்துக்கு காரணம் சொன்னா ஏத்துக்காதவங்க, 

இவங்க தாமதமா வந்த காரணத்தை நாம கேட்க 

விரும்பலைனாலும் அதை சொல்லி சித்ரவதை 

பண்ணாம விட மாட்டாங்க..

 



தப்பை அவங்க செய்துட்டு நம்மை மன்னிப்பு கேட்க வைக்கிற 

திறமை பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும் மட்டுமே உண்டு..

Wednesday, February 6, 2013

ஹனி




என்னை உணராத உன் கோபங்களைக் காட்டிலும்,என் நலனுக்காக 

நீ என்னை விட்டு விலகுவதே அதிகம் வலிக்குதடி..# ஹனி பெயர்ச்சி..

 


சுற்றியுள்ள பிரச்சினைகளுக்காக என்னை விட்டு விலகும் நீ, 

நீ விலகுவதால் நமக்குள் ஏற்படும் மனப்போராட்டங்கள் 

குறித்து சிந்திக்க மறந்தது ஏனோ..? பைத்தியக்காரி..

 # ஹனி பெயர்ச்சி..

 


எதுவாயினும், அதை எனக்கு முதலில் நீயே தரவேண்டுமென 

ஆசைப்படுவாய்..அதற்காக மரணவலியையும் நீயே 

தரவேண்டுமா..?# ஹனி பெயர்ச்சி..

 



நீ என்னைப் பிரிந்து போய்விடுவாய் என நான் என்றுமே 

பயப்பட்டதில்லை..ஆனால் என்னைப் பிரிந்து நீ எப்படி 

இருப்பாய் என்றே அஞ்சுகிறேன்..# ஹனி பெயர்ச்சி..

 


"என்னை விட்டுப் போடா" என்றே சொல்கிறாய் நீ..பைத்தியக்காரி.. 

என் மீதான உந்தன் காதல் மீது எனக்கு நம்பிக்கையும்,உனக்கு 

பயமும் இருப்பதே அதற்கு காரணம் என்று தெரிந்தும் நான் 

எப்படி உன்னைப் பிரிய….?

 



என் மீது நீ கொண்ட அதிகப்படியான காதலின் சுமை தாங்காமல், 

என்னைப்பிரிகிறேன் என்று சொல்வது என்ன நியாயம் ஹனி..? 

# ஹனி பெயர்ச்சி..

 


"நான் உனக்கு வேண்டாம்டா" என்றே சொல்லும் நீ..ஒருமுறை 

கூட "நீ எனக்கு வேண்டாம்டா" என சொன்னதே இல்லை..

உன்னை விட்டு நான் எங்கேடி செல்ல..? பைத்தியக்காரி..

# ஹனி பெயர்ச்சி..

 



"என்னை மறந்து விடு" என சொல்லத் துணிந்த நீ,அதை என் 

கண்களை பார்த்துக் கூற மறுப்பது ஏன் என புரிந்தும் நான் 

உன்னை விட்டு எப்படி விலக பம்ப்ளிமாஸ்..? # ஹனி பெயர்ச்சி..

 



நீ இல்லாத என் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று 

நினைப்பதை விட…ஏன் இருக்க வேண்டும் என்று 

நினைக்க ஆரம்பித்துவிட்டேன்..என்னைக் காப்பாத்து 

ஹனி..ப்ளீஸ்..

 



எனக்குள் இருந்த என் காதலை நீயே கண்டெடுத்து விட்டு,

இப்போது அதை நீயே தொலைக்கவும் போகிறாயா..? 

சொல்லுடி பம்ப்ளிமாஸ்..

Sunday, February 3, 2013

ஏன் இப்படி ...71 ( BOSS & GIRLS )



கடைக்கண் பார்வை கிடைக்காதான்னு நம்மை ஏங்க வைத்து 

கொஞ்ச நாளில் அவங்க கண்ணுல படாம தலைமறைவா ஓடி 

ஒளிய வைக்கிறத்திறமை பொண்ணுங்களுக்கும் , பாஸ்களுக்கும்  

எங்கே இருந்து தான் வருமோ..? 



 



நாங்க எந்த மூடுல இருக்கோம்னு கவலைப்படாம உங்க 

மூடுக்கு ஏத்தமாதிரி நாங்க மாறணும்னு நினைப்பதை 

எப்போ மாத்திக்குவீங்க பாஸ் / கேர்ள்ஸ் ..?

 



நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தையோ / பொருளையோ , 

நாமே வெறுக்குற அளவுக்கு மாத்துற திறமை

பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும்  மட்டுமே உண்டு..

 


நாங்க ஆர்வமா சொல்லும் விஷயத்தை அலட்சியமா கேட்குறீங்க..

ஆனா சப்பை மேட்டரை நீங்க சொன்னாலும் நாங்க எக்ஸ்ட்ராவா 

ரியாக்ஷன் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறங்களே..

ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?
 



நாங்க சொல்ல வருவதையே நீங்க காதுல வாங்கிக்க மாட்றீங்க..?

ஆனா நீங்க சொல்லாததையும் நாங்க புரிஞ்சி நடக்கணும்னு 

எதிர்பார்க்கிறீங்க.. முடியல பாஸ் / கேர்ள்ஸ்..

 


கூட்டமா விவாதம் பண்ணும்போது உங்க கருத்தில் இருந்து 

சுவிட்ச் போட்ட மாதிரி உடனே அந்தர் பல்டி அடிச்சி கூட 

இருக்க எங்களை கோர்த்து விடுறீங்களே..

ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?
 


கூடவே இருந்து என்கரேஜ் பண்ணுவது போல ஏத்திவிட்டு 

நாங்க வெளிவரமுடியாத அளவுக்கு பிரச்சினையில போட்டு 

விடுறீங்களே..?ஏன் பாஸ் / கேர்ள்ஸ்..?

 



நீங்க பண்ற தப்பை எல்லாம் உடனே மறக்கறீங்க..ஆனா நாங்க 

பண்ண தப்பை மட்டும் மறக்காம அப்போ அப்போ 

மணி அடிக்கிறீங்களே..? எப்படி பாஸ் / கேர்ள்ஸ்..?

 



அது எப்படி உங்களுக்கு வேணும்னா பாசிட்டிவாவும் , வேணாம்னா 

நெகட்டிவாவும் மட்டுமே யோசிக்க முடியுது உங்களால..?

டாக் மீ பாஸ்/ கேர்ள்ஸ்...?
 



சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கும்போது திடீருன்னு கோபப்பட்டு 

கத்த பொண்ணுங்களாலும்,பாஸ்களாலும் மட்டுமே முடியுது..