Tuesday, February 26, 2013

ஏன் இப்படி ...74

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





கொடுக்குற சம்பளம் வேலை செய்யுறதுக்கு தான்,

பேசுறதுக்கு இல்லைன்னு எப்போ தான் புரிஞ்சிப்பானுங்களோ

# ஆபிஸ் அவலங்கள்..

 



தலைமைக்குக் கட்டுப்படணும்ன்ற ஒரே காரணத்துக்காக..

கண்டவனும் நம்மை கலாய்க்கிற அளவுக்கு நடப்பது 

இருக்கே..#வெறியில விஜய் படம் பார்க்கலாம்னு கூட தோணுது..


 


ஒரு கேள்விக் கேட்டா , தேவையான பதிலை சொல்லாம,

சம்பந்தமே இல்லாத பத்து பதில்களைத் தர்றானுங்க..

# கொல்லாதீங்கடா டேய்..

 



ஒரு வேலையை வேகமா முடிச்சி நல்ல பேரு 

வாங்கணும்னு நினைத்து,அதை தப்புத்தப்பா செய்து 

உயிரை வாங்குறவனுங்களை என்ன பண்ணலாம்…?

வேட்கையாய்  ஆரம்பிக்கும் வேட்டை வேதனையில் முடிவது 
ஏனோ..? JOB SEARCH / FIGURE PICK UP

பயனில்லைன்னு தெரிஞ்சதும் எப்படி தான் ஞானி போல 
பற்றற்று எனக்கு வேண்டாம்னு சொல்றானுங்களோ? 

பொய் பேசுறவன் எல்லாம் ஒண்ணு சேர்ந்து உண்மையை 
பேசுறவனை மாட்டிவிட்டு ஓரங்கட்டுவது அதிகமா 
அலுவலகங்களில் மட்டுமே நடக்குது.



மோட்டல்களில் கொள்ளை அடிப்பானுங்க தெரியும்..

அதுக்காக BOOMER ரெண்டு  ரூபாய் எல்லாம் ஓவர்டா டேய்..

 


வயசு வித்தியாசம் பார்க்காம நிறைய பேருக்கு ஐஸ்க்ரீமும் 

சாக்லேட்டும் பிடிக்குது.

சான்ட்விச் நடுவுல இருக்கும் ஸ்டப் கணக்கா 
மேனேஜ்மென்ட் , எம்ப்ளாயீஸ் இடையில ஸ்டாப்ஸ் 
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்.

No comments: