Saturday, February 9, 2013

ஏன் இப்படி ...72 ( BOSS & GIRLS )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ஒரே விஷயத்தை பல கேள்விகளா கேட்க இந்த பாஸ்களாலும் 


பொண்ணுங்களாலும் மட்டும் தான் முடியும்…#ஸ்ஸ்சப்பா..எத்தனை…?

 


கொஞ்சமா பேசணும்..நிறைய கேட்கணும்னு சொல்லிட்டு நம்மை 

பேச விடாம அவங்க மட்டும் பேசிக்கிட்டே இருக்காங்க..

ஏன் பாஸ்…? ஏன் கேர்ள்ஸ்…?

 



நாம செய்யக்கூடாதுன்னு இருந்தாலும்,நம்மகிட்ட எப்படி 

வேலை வாங்கணும்னு இந்த பாஸ்களுக்கும்,பொண்ணுங்களுக்கு 

நல்லாவே தெரியுது..எத்தனை பசப்பு வார்த்தைகள்..

என்னா திறமைடா சாமி..

 



இவங்ககிட்ட அவ்வளவு சீக்கிரம் நமக்கு கோபம் வராது..

மீறி கோபப்பட்டா, உடனே பம்மி பச்சைக்குழந்தை போல 

ரியாக்ஷன் கொடுக்குறாங்க..? எப்படி பாஸ்..? எப்படி பொண்ணுங்களா..?

 




பாசத்துக்கு கட்டுப்படுறோமோ இல்லையோ,கட்டுப்பட்டா 

மாதிரி இவங்ககிட்ட வேஷம் போட்டே ஆகணும்..

# இல்லைனா விட மாட்டாங்க..பாஸ் & கேர்ள்ஸ்..

 



சிரிச்சுகிட்டே பேசி , கேட்குறவனை வெறி ஏத்தி காண்டாக்க 

இவங்களால மட்டும் தான் முடியும்..#காதுல ரத்தம் வந்தாலும் 

கர்ச்சிப் தருவாங்களே தவிர,பேச்சை நிறுத்த மாட்டாங்க..

 



நாம கேட்குறோம்ன்ற ஒரே காரணத்துக்காக என்ன வேணும்னாலும் 

பேச இவங்களால எப்படி தான் முடியுதோ…? உங்களுக்கு 

மனசாட்சியே இல்லையா..?

 



நாம ஒரு தப்பு செஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற 

இவங்க தப்பு செஞ்சி அதை நாம கண்டுபிடிச்சிட்டா ஒரு

 ரியாக்ஷன் கொடுப்பாங்க பாருங்க..அத்தனை 

ஆஸ்கரும் கொடுக்கலாம்..

 



நம்மோட தாமதத்துக்கு காரணம் சொன்னா ஏத்துக்காதவங்க, 

இவங்க தாமதமா வந்த காரணத்தை நாம கேட்க 

விரும்பலைனாலும் அதை சொல்லி சித்ரவதை 

பண்ணாம விட மாட்டாங்க..

 



தப்பை அவங்க செய்துட்டு நம்மை மன்னிப்பு கேட்க வைக்கிற 

திறமை பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும் மட்டுமே உண்டு..

1 comment:

கார்த்திக் சரவணன் said...

எல்லாமே பாஸ்க்கும் பொண்ணுங்களுக்கும் கரெக்டா பொருந்துது...