Saturday, February 23, 2013

சமாதான முத்தம்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
 
 
 
காதல் ததும்பும் உன் கடைக்கண் பார்வை என் மீது படும் 
 
சில கணங்கள் , பலமணி நேரம் என்னுள் இருக்கும்..
 
 
 
கண்களை மூடினால் நீ மறைந்து விடுவாயோ என் அஞ்சியே 
 
இமைக்க மறுத்து வெறித்து பார்க்கிறேன்... 
 
# தேவதை ஸ்த்ரீயடி நீ..(காஞ்சு போயி இருக்கேனும் சொல்லலாம்..)
 
 
 
உன்னிடம் மட்டுமே எனக்கு தெரிந்த மூன்று மொழியிலும் 
 
மவுனம் சாதிக்கிறேன்..ஆனால் என் கண்களில் ஒளித்த 
 
காதலைக்கண்டு புன்னகைக்கிறாய் நீ..#லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
தன்னைத்தானே இயக்கும் சக்தி மிக அரிது..நீயோ 
 
சுலபமாய் செய்கிறாய்..ஆம்..என் உலகத்தை 
 
இயக்குபவள் நீ தானே..
 
 
 
கடற்கரை இரவில் ,மிக அழகாக உள்ளதென 
 
நிலவை சுட்டிக்காட்டுகிறாய். நானும் ஆம் என்கிறேன்..
 
உன் விரல் நுனியைப் பார்த்தபடி..
 
 
 
 
இதயத்தை இடம் மாற்றிக்கொள்வோம்..
 
இரக்கமின்றி இறுக்கி அணையேன் ஹனி...
 
 
 
 
உன் கண்களின் கள்ளச்சிரிப்பின் வழியே கண்டு கொண்டேன்.. 
 
காதல் கொண்ட உன் மனதை..ராட்சசி.. 
 
லவ்யூடி பம்ப்ளிமாஸ்..
 
 
 
 
சிரிக்கும்போதும்,சிலிர்க்கும்போதும் அழகாய் இருப்பது 
 
பெண்கள் மட்டுமே...ஹ்ம்ம்ம் 

 



உன் ஒரே ஒரு சமாதான முத்தம் பெற வேண்டி 

சண்டையிட்டு,எண்ணிலடங்கா சமாதான முத்தங்களை 

உனக்கு அளிக்கிறேன் நான்..


 


உன் அத்தனை வலிகளையும் மறைக்க முயல்கிறாய்..

உன்னை கண்ணீர் சிந்த விடக்கூடாது என நினைக்கும் நான் 

கலங்காமல் இருக்க..லவ்யூடி ஹனி..

No comments: