Monday, December 31, 2012

ஹனி.. இச்சை செயல்..



என்னை மறந்துவிட்டாயா என்கிறேன்..

" நான் இன்னும் உயிரோடதான்டா இருக்கேன் " என்கிறாய்..

# லவ்யூடி பம்ப்ளிமாஸ்..



 


உன்னுடன் பேசவேண்டாமென நினைக்கிறேன்..கைகள் 

ஏனோ உன் அலைபேசி எண்களை தானாக அழைக்கிறது 

என்கிறாய்.. இது அனிச்சை செயல் இல்லை 

ஹனி.. இச்சை செயல்..


 


உன்னைப்பிரிய எத்தனிக்கையில் உன் குரல் கேட்டவுடன் 

மனம் மாறுகிறேன் என்கிறாய்.. பைத்தியக்காரி.. 

இப்போது புரிகிறதா..? எதுவாயினும் என் கண்களைப் 

பார்த்து சொல் என்பதன் அர்த்தம்..



 


 
என்னிடம் அத்தனை உண்மைகளையும் மறைக்காமல் கூறும் நீ,

நான் உனக்குள் இருப்பதை மட்டும் வெளிப்படுத்த மறுக்கிறாய்..

# ராட்சஸி..

 

 
எனக்காக வலிகளைத் தாங்கும் நீ,அதையே நான் செய்தால் 

மட்டும் ஏற்க மறுக்கிறாய்..உன்னை விட்டு நான் எங்கேடி 

செல்ல…? # பம்ப்ளிமாஸ்..


 


மிகவும் குளிர்ச்சியாக சூரியன் தோன்றிய தருணம் நீ 

என்னுடன் கடற்கரையில் இருந்த நேரம்..என்னைப்பிரிந்த 

ஐந்து நிமிட இடைவெளியில் அதே சூரியன் உக்கிரமாகவும் 

தோன்றுதடி..

 



நீ முத்தமிட்ட பிறகு நீண்ட நேரம் என் நாவில் ஏதோ ஒரு 

இனிப்பு கரைந்துக் கொண்டே இருக்கிறது.. முடிந்து விடும் 

முன் மீண்டும் ஒன்று தா..!!!

 



பத்து குதிரைகள் ஓடும் மைதானம் போல மாறுகிறது 

என் இதயம்..நீ முத்தமிட என்னை நெருங்கும் ஒவ்வொரு முறையும்..


 


ஆழ்கடலின் அமைதியும் அதீத அழுத்தமும் உண்டாகும் 

தருணம்..நீ என்னை முத்தமிட்ட கணம்..

 


மரணவலியில் துடிக்கிறேன்..உன் மார்பு சூட்டில் என்னைப் 

புதைத்து மருந்திடேன் ஹனி.. பிழைத்துவிடுவேன்..

Sunday, December 30, 2012

ஏன் இப்படி ...70




தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் கூட 

IRCTC ல டிக்கெட் புக் பண்ணினான்னா "போங்கடா !@#$%^&"

னு சொல்லுவான்...#நாக்குத்தள்ளுதுடா சாமி

 



நல்லதுக்கு ஒண்ணு சேருறாங்களோ இல்லையோ ஒருத்தனை 

போட்டு விட அத்தனை பேரும் எங்க இருந்து தான் 

கிளம்பி வர்றானுங்கனே தெரியலையே ஆண்டவா..

 



" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் " படத்தோட 

சிடி வாங்குனேன்..அட கெரகமே..நடுவுல கொஞ்சம் படத்த 

காணோம்..# தியேட்டருக்கு போங்கப்பா..
 



கொடுத்த வேலையை ஏன் முடிக்கலைன்னு கேட்கும்போது 

தான் தெரியுது…ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருக்கும் 

கதை சொல்லிகள்…# காதுகள் வலிக்குதுடா சாமி..

 



சலிக்காம பேசுறதை பெருமையா எண்ணுபவர்களே,அந்த 

கருமத்தை எல்லாம் சகிச்சுக்கிட்டு கேட்கும் எங்களை 

கொஞ்சம் நினைத்து பாருங்களேன்..

#வெளிய விடமாட்றாங்கடா டேய்..
 




ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு 

சொல்லிக் குழப்பிட்டு,உங்களுக்கு எத்தனை தடவை தான் 

சொல்றதுன்னு அலுத்துக்குறவங்களை அடுப்பில் போட்டா என்ன..?

 



"வழிகாட்டியாய்" இருக்க வேண்டிய பலர் , நமக்கு 

"வலி காட்டிகளாகவே" இருக்கிறார்கள்..

# பாஸ் பாறைகள்.. 




கேட்குறதுக்கு கொஞ்சம் பேர் இருக்கானுங்கனு பேச 

ஆரம்பிக்கிறவங்களுக்கு இன்னொரு வாய் வந்துடுமா 

என்ன..? எப்படிடா முடியுது உங்களால…?

 



இவன் ஒரு வாயால பேசுறதை எங்களுக்கு ரெண்டு காது 

இருந்தும் கேட்க முடியலையே..? கேட்குற நாங்க 

டயர்ட் ஆகி கொட்டாவி விடுறோம்..தக்காளி 

தெம்பா பேசுறானே..?

 




அடுத்தவன் பிரச்சினைகளுக்கு ஏகப்பட்ட ஐடியாக்களை 

அள்ளித் தெளிக்கிறவனுங்களை , ஏன் உங்க வேலை 

முடியலைன்னு கேட்டா கரகாட்டக்காரன் செந்தில் 

போல ரியாக்ஷன் கொடுக்குறானுங்க..

# உனக்கு ஏன் இந்த வேலை…?

Saturday, December 29, 2012

முற்றுப்புள்ளி முத்தம்


 
கண்களில் சிரித்து உதட்டில் நீ தரும் முத்தத்துடன் 

உதயமாகும் ஆசிர்வதிக்கப்பட்ட என் தினங்கள்,இரவினில் 

இறுக்கமான அணைப்பின் வழியே உன் 

கருங்கூந்தலில் அஸ்தமிக்கின்றன..


 
என் நினைவுப்பாசிகளை தெளிய வைக்கும் படிகாரமாய் 
 
உன் பார்வை..


உன் அருகில் வர எத்தனிக்கையில் ,ஏதோ ஒன்று என் 
 
கால்களைக் கட்டி இருக்கும் கயிறாய் இறுக்க..உன் 
 
புன்னகைக்கும் பார்வையில் கட்டவிழ்க்கிறாய் நீ.
 
#தேவதை ஸ்த்ரீயடி நீ..



பாழடைந்த கிணறாய் தோன்றும் இந்த 
 
வாழ்க்கையில்,படிகளெனத் தோன்றுதடி உன் பாதச்சுவடுகள்..



தென்னங்கீற்றுகளுக்கு இடையே தோன்றும் சூரிய ஒளியாய்..
 
உன் கற்றைக்கூந்தலின் வழியே என் மீது சிதறுதடி உன் 
 
வெட்கப் புன்னகைகள்..



உறைந்த கிணறாய் இருந்த என்னுள்..சிறுவர்களின் 
 
உற்சாகக் கூச்சலாய்  உன் சிரிப்புச் சத்தங்கள்..


நீ  குளித்து முடித்து வருகையில் பாதி ஈரத்தை தூவாலையால் 
 
நீயும்,மீதி ஈரத்தை என் விழிகளால் நானும் துடைக்கிறோம்


பூக்களால் செய்த உன் உடலில் பனித்துளிகளாய் 
 
தோன்றும் நீர்த்திவலைகள்.. என் உதடுகளால் ஒத்தி 
 
எடுக்கிறேன் வா.!!!

நீ கூந்தல் உலர்த்துகையில் தெறிக்கும் நீர்த்துளிகள்.. 
 
என் மீது மட்டும் பொழியும் இனிமை சாரல்..

 

நம் உரையாடலின் முற்றுப்புள்ளியாய் முத்தம் 
 
வைக்கிறேன் நான்..மேலும் சில முத்தங்கள் தந்து 
 
அதை தொடர் வாக்கியமாய் மாற்றுகிறாய் நீ 
 
# லவ்யூடி பம்ப்ளிமாஸ்

Wednesday, October 10, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 61




சில்மிஷங்கள் செய்யும்போது சிரிக்கும் பிகர்களை விட,

சிலிர்க்கும் ஆன்ட்டிகளே அதிகம் ஈர்க்கிறார்கள்..

# ஹர ஓ சாம்பா..



வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வைக்கும் 


பிகர்களை விட,வாய்ப்புகளை உருவாக்கத் தூண்டும் 

ஆன்ட்டிகளை அரவணைப்போம்..# ஹர ஓ சாம்பா..



உயிர் எடுக்கும் பிகர்களைக் காட்டிலும்,உயிர் கொடுக்கும் 


ஆன்ட்டிகள் அற்புதமானவர்கள்..# ஹர ஓ சாம்பா..



ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஒப்பாரி வைக்கும் 


பிகர்களை விடுத்து,பிரச்சினைகளுக்கு மத்தியில் 

இருப்பினும் புன்னகைக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..

# ஹர ஓ சாம்பா..



கர்வம் கொடுப்பது காதல்..


கர்வம் அழிப்பது காமம்..



கர்வத்தைக் கொடுக்கும் காதலியை விட,கர்வத்தைக் 


கொல்லும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்..

#ஹர ஓ சாம்பா..என்னா வனப்பு..



சுத்தலில் விடும் பிகர்களை விட, சுத்த விடும் ஆன்ட்டிகளே 


அதிகம் ஈர்க்கிறார்கள்..#நீங்கலாம் எந்த எந்த 

வீதியிலடி இருக்கீங்க..?


பசங்க பார்க்குறாங்கன்னு தெரிஞ்சா பிகர்கள் முகத்தில் 


வருவது கர்வம்..ஆன்ட்டிகள் முகத்தில் வருவது வெட்கம்..

# அழகு..ஹர  சாம்பா..

யார் வேணும்னாலும் காதலிக்கலாம்..ஆனா காதலிக்கும் 

எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை..

#புலம்ப விட்டுட்டாளுங்களே வாத்சாயனா..



அல்வா கொடுக்கும் காதலியை விட , 


அல்வா கேட்கும் ஆன்ட்டிகளை அன்போடு ஆதரிப்போம்...

#ஹர ஓ சாம்பா..

Monday, October 8, 2012

காதல் ரேகை




நண்பர்கள் கூட்டத்தில் நான் இருக்கையில்,சிறு பறவை 

போல என்னைக் கடந்து செல்கிறாய் நீ.. என் உடலை விட்டு 

உயிர் மட்டும் தொடர்கிறது உன்னை..


நீ அணிந்திருக்கும் மூக்குத்தியை விடவும் அழகாய் 


ஜொலிப்பது நீ போட்டிருக்கும் முகப்பருக்கள் தான்.. 

மான்களை விட புள்ளி மான்கள் தானே எப்போதும் அழகு..




பூமியில் இருந்து அழிந்துவிட்ட ஒரு தொல் விலங்கை 


போல என் காதலும் மாறிவிடுமோ என அஞ்சுகிறேன்.. 

என் காதலைக் காப்பாத்து ஹனி..




அதிகாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் பட்டு 


தெறிக்கும் பனித்துளிகளை போல, உன் அதரங்களின் 

அரை முறுவல்களில் பட்டு தெறிக்கிறது என் காதல்..




உன் கண்களின் வெளிச்சம் கொண்டே என் காதல் ரேகை..


 உன் அரவணைப்பின் சுகம் கொண்டே என் ஆயுள் ரேகை..


பொய்களை காப்பதை விடவும் உண்மைகளை மறைப்பது 


மிகவும் கடினம்.. லவ்யூடி ஹனி..


கண்களுக்கு பின்னால் காதல் சமுத்திரத்தை எப்போதும் 

தயாராக வைத்திருக்கிறாய் நீ..நீ நெகிழும் தருணம் 

அதை வெளிப்படுத்துகிறாய் என் மீது..நான் தான்

 நிலைகுலைந்து போகிறேன்..அந்த காதல் சமுத்திரத்தில்..



உன்னை வெல்கிறேன் நான்..என்னை வெல்கிறாய் நீ..


நம்மை வெல்கிறது காதல்..



என் சுவாசம் கூட முழுதாய் வெளிப்பட மறுக்கிறது..


நீ என்னுடன் இல்லாத நேரங்களில்..



கடவுள் மீதும்,காதல் மீதும் முழுதாய் நம்பிக்கை 

வை என்கிறேன்..

"ம்..நம்புறேன்டா.. உன்னை மட்டும்" என்கிறாய்.. 

லவ்யூடி ஹனி..

Saturday, October 6, 2012

ஏன் இப்படி..69





ஒரு விஷயம் தனக்கு தெரியலை / புரியலை னு 


சொல்லுறவங்களை விட,தெரியும் / புரியுது னு 

சொல்லி மாட்டிக்கிறவங்களே அதிகம்..



ஒரு விஷயத்தை அடுத்தவன் செய்து அது தப்பா 


போகிறவரை காத்திருந்து அட்வைஸ் பண்ணுறவனுங்களே..

முதல்லையே சொல்லி தொலைய வேண்டியது தானே..

 இப்போ வந்து ஏன் எழவு கொட்டுறீங்க...



ஒரு பிரச்சினைக்கு அட்வைஸ் பண்ண அம்புட்டுபயலும் 


ஓடி வர்றான்..அழைப்பு இல்லாமையே.. தீர்வு கேட்டா 

ஓடி போயிடுறானுங்க..சொல்லிக்காமையே..




ரோட்ல ஒரு பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம போச்சு..


இந்த காலத்தில இப்படி அடக்கமா ஒரு பொண்ணானு 

திரும்பி பார்த்தா சுள்ளுன்னு சுட்டுச்சு..எதிர் வெயில்..



ஆபிஸ்ல ஒரு பெரிய முதலை தகிடுத்தத்தம் பண்ணியதை 


ஒரு சின்ன முயல் கண்டுபிடிச்சி சிங்கத்திடம் சொன்னா,

முதல் ஆபத்து முயலுக்கு தான்..#ரெண்டு பேரும் எப்படா 

கூட்டு சேர்ந்தீங்க…?


குற்றத்தை செஞ்சவனை விட,அதை கண்டுபிடிச்சவனுக்கே 


ஆபத்து அதிகம்..# ஆபிஸ் அவலங்கள்..




தப்பு செய்தவனுக்கு இருக்க குற்ற உணர்ச்சியை விட,


அதை கண்டுபிடிச்சும் சொல்லமுடியாத நிலைமையில 

இருக்குறவனுக்கே குற்ற உணர்ச்சி அதிகம்..




பொய் சொல்றவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்..


ஒரு உண்மையை கண்டுபிடிச்சி அதை சொல்ல முடியாம

 சங்கடத்தில் இருக்கான் ஒருத்தன்..
எதிரிகளை விட துரோகிகளாலேயே ஆபத்து அதிகம்…


# எங்கேயும் எப்போதும்.. கண்ணு சிமிட்டுற நேரத்தில 

காலை வாருறானுங்க..அவ்வவ்வ்வ்வ்…



ஒரு வேலையை சுலபமாக்க ஒருத்தனும் வழி சொல்ல மாட்றான்..


அதை மேலும் சிக்கலாக்க அத்தனை பேரும் ஆளுக்கு பல 

வழிகள் சொல்றாங்க..# ஓடிப் போயிடுங்கடா டேய்..

Thursday, October 4, 2012

ராட்சசி..



என் வலியை விட,உனக்கு வலிப்பதை என்னால் தாங்க 

முடியாது என தெரிந்தும் அடிக்கடி ஊடல் கொ(ல்)ள்கிறாய்..

# ராட்சசி..



உனதருகில் இருக்கையில் மட்டும் என் இதயம் வேறு 


விதமாய் துடிப்பது ஏனோ..?



பொங்கிவரும் காதல் கொண்டு நீ என்னைப்பார்த்து 


கண்களால் சிரிக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் 

ஒரு துடிப்பை தவற விடுகிறது..



நீ என்னை முத்தமிட நெருங்கும் அந்த கணம் 


எனக்குள் இன்னொரு இதயம் முளைக்குதடி..



உன்னைக்காணும் வரையில் சத்தமின்றி சூரியக்கடிகாரமாய் 


துடித்த என் இதயம்,உன்னைக்கண்ட கணம் முதல் 

அத்தனை இசைக்கருவிகளின் ஒலியோடு துடிக்கிறது.

மிக அழகாய்..




நீ தலைக்குளித்து ஈரக்கூந்தல் உலர்த்தும் காலை வெயில் 


நேரம் எனக்கு மட்டும் தெரியுதடி..அழகாய் ஒரு வானவில்..



என்னிடம் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் உன்னிடம் 


பதில் இருக்கிறது…சமயங்களில் கேட்காத கேள்விகளுக்கும்..




நீ என்னை நெருங்கி வரும் தருணம் மட்டும் நியூட்டனின் 


மூன்றாம் விதி பொய்த்துவிடுகிறது..

# அவ்வளவு காஞ்சு போயி கிடக்கிறேன்..



ஆள் அரவமற்ற அறையின் ஒரு ஜன்னலின் வழியே நுழைந்து 


மறு ஜன்னலின் வழியே வெளியேறும் சருகாய் என் காதல்..

 உன்னுள் நுழைந்து வெளியேறும் முன் கவனித்துவிடேன் ஹனி..

Tuesday, October 2, 2012

மாத்தி யோசி..68




ஒரு ஆபிஸ்ல வேலைக்குன்னு போனாலே ஏகப்பட்ட 

பிரச்சினைகள் இருக்கும்..அதுல முதல் பிரச்சினை அந்த 

ஆபிஸ்க்கு வேலைக்கு போறது தான்..

அதனால ஆபிஸை மாத்துங்க..

கூட்டத்தில இருக்கும்போது அமைதியாய் இருப்பவன் 

ஆடு என கொ(ல்)ள்க..



ராஜாவா,ரஹ்மானா னு ரெண்டு ஆண்களைப் பற்றி 

விவாதம் பண்றவங்க ஏன் அனுஷ்கா ஷர்மாவா, 

அனுஷ்கா ஷெட்டியானு விவாதம் பண்ண மாட்றாங்க..# ஏக்கம்..


நல்லவர்களுக்கு வரும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு 


அவங்களே தான் காரணமா இருக்காங்க..# பைல்ஸ் ரீசன்



கெட்டவன் இன்னொரு கெட்டவனை நல்லவனாக் 


காட்ட முயற்சிப்பதில்லை..ஆனா நல்லவன் னு 

சொல்லிக்கிறவங்க அடுத்தவனைக் கெட்டவனாக் 

காட்டுவதில் தெளிவா இருக்காங்க..

# அப்போ யாரு கெட்டவன்..?




ரகசியங்கள் வெளியேற மட்டும் எத்தனையோ 


வழிகள் உருவாகின்றன..



ஒரு விஷயம் நமக்கு சரின்னு தோணியதுக்கு அப்புறம்,


அதை நியாயப்படுத்த எத்தனை காரணங்கள் கிடைக்குது..!!!!



குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குமரிகளுக்கு இடையிலும் 


போதிய இடைவெளி தேவை..# கூட்டமா வந்தா சைட் 

அடிக்க சங்கடமா இருக்கு..


ஒரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடையாது / முடியாது னு 


இருக்கும் நிலையில் தற்காலிகத்தீர்வு 

தெரிந்தால் தொடரலாமே..வருத்தப்படுறதுல 

என்ன நன்மை…?


சில வருடங்கள் முன்பு மரங்கள்,கோவில்களை அடையாளமாக்கி 

வழி சொல்லுவாங்க..இப்போ டாஸ்மாக்,ATM 

மை பயன்படுத்துறாங்க..#வீதிக்கு வீதி இது ரெண்டும் 

தானே இருக்கு…ஹ்ம்ம்ம்….

Sunday, September 30, 2012

ஒற்றை முத்தம்..




"உன் மனதிற்கு" விருப்பம் போல 

செயல்படு என்கிறேன்.."ஹ்ம்ம்..சொல்லுடா , 

என்ன பண்ணனும்" என்கிறாய்..லவ்யூடி ஹனி…



பிரிவின் வலியை பிரயத்தனப்பட்டு , பல வார்த்தைகளில் 

உனக்கு சொல்கிறேன் நான்..அதையே எளிதாக , 

ஒரு பார்வையிலும்,அணைப்பிலும் எனக்கு 

உணர்த்திவிடுகிறாய் நீ..


மோகத்தின் மிகுதியில் நான் தரும் அத்தனை 

முத்தங்களையும் அற்பமாக்கி விடுகிறது.. காதலுடன் 

நீ கொடுக்கும் ஒற்றை முத்தம்..



நீ இருக்கும் இடத்தில் நீ மட்டுமே சிறப்பு..



நமக்கிடையேயான இடைவெளியை முத்தத்தால் 


நிரப்புகிறேன் நான்..மவுனத்தால் நிரப்புகிறாய் நீ..



முரண்டு பிடிக்கும் உன்னை அடக்கும் 


அங்குசமாய் என் முத்தம்..



அடிக்கடி சந்திக்காமல் இருப்பது உன்னை 


தவிர்ப்பதற்காக அல்ல..என்னைப்பிரிகையில் நீ 

தவிப்பதைக் காண முடியாததால் தான்..



உன் பெயரில் உள்ளே ஒரே காரணத்தினால் 

வல்லினங்களும் மெல்லினங்களாக மாறி விடுகின்றன..



சனியின் பார்வை உக்கிரமாக இருக்கிறதாம் 


என் ஜாதகத்தில்..ஹனி..காதல் வழியும் கண்களுடன் 

என்னை ஒரு முறை பாரேன்..சாதகமாக மாறிவிடும்..



உன்னுடன் சண்டையிட முயற்சித்து.. உடனே கலங்கும் 


உன்னை சமாதானப்படுத்துவதில் முடிக்கிறேன்…

ஒவ்வொரு முறையும்...

Friday, September 28, 2012

ஏன் இப்படி ...68




பல நேரங்களில் ஹோட்டல்களில் சர்வர்களின் 


விருப்பமே நம்ம விருப்பமா மாற்றப்படுது..

# என்ன எழவுடா இது..



போன்ல சத்தமா பேசுற ரூம் மேட்டைக் கூட சமாளிச்சுடலாம்..


ஆனா முத்தமா கொடுத்து இம்சிக்கிறவனைக் கொல்லணும் 

போல இருக்கு..#நொச்சு நொச்சுன்னு..முடியலைடா டேய்..



முத்தம் கொடுப்பதும்,வாங்குவதும் சுகம் தான்..


ஆனா வெறுமனே அவங்க வாயை வேடிக்கை 

பார்க்கிறது நரக வேதனைடா சாமி..




காதலிக்கிறவனுக்கு கற்கண்டா இனிக்கும் முத்தம்,


வேடிக்கை பார்க்கிறவனுக்கு வேப்பங்காயா கசக்குது…

#கடுப்பேத்தாதீங்கடா கருமம் பிடிச்சவனுங்களா…



அடுத்தவனைக் கெடுக்காம , நான் மட்டும் தானேடா 


கெட்டுப்போறேன்..அப்புறம் ஏன் கெட்டவன் 

கெட்டவன் கூவுறீங்க..#ஐயோ ராமா...




கல்யாணப்பத்திரிக்கையை நேர்ல கொடுத்தா போதாதாம்..


FB ல போடணுமாம்.. அட பதருகளா..



FEB 14 அன்னைக்கு வாழ்த்தாம  , நண்பர்கள் தினம் அன்னைக்கு 

வாழ்த்தும் பொண்ணுங்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா...?

#என்னாது நான் ப்ரெண்டா..மீ பாவம்..*



*ஜெனிலியா போல பண்றேன்னு சில பொண்ணுங்க சீன் 


போடுறது அவங்களை முழு லூசா காட்டுது..

ஜெனிலியா பேஸிக்காவே அரை லூசுன்றதால கொஞ்சம் 

அழகா இருக்கு..புரிஞ்சுக்குங்க பொண்ணுங்களா..*



 எனக்கு தெரியாதுன்னு சொல்லாம ஏதோ 

ஒண்ணை சொல்லிக்கேட்குறவனை குழப்புவதையே 

பல பேரு செய்யுறானுங்க… ஏன்டா ஏன்… 



அவன் அவன் கஷ்டமே ஆயிரம் இருக்கும்போது அடுத்தவன் 

செய்யுற வேலையில நொட்டை சொல்றவங்களே.. ஏன்டா ஏன்…? 

Tuesday, September 25, 2012

தேவதை




முத்தத்திலேயே நன்றி சொல்லவும்,மன்னிப்பு கேட்கவும் 

உன்னால் மட்டுமே முடிகிறது..லவ்யூடி ஹனி…



மகிழ்ச்சியை மட்டும் நம்முடையது என என்னும் நீ,


 வருத்தங்களை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள்வது ஏனோ..?



என்னை எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் செயலிழக்க 


செய்வது உன் சிரிப்பும்,அழுகையும்..



என் மகிழ்ச்சிக்காக உன் வலியை மறைத்து சிரிக்கிறாய்.. 


நீ என்னுள் கலந்தவள் என்பதை மறந்து..பைத்தியக்காரி..



காரணம் தெரிந்த உன் கோபம் தரும் வலியை விட..

ஏதும் சொல்லா மவுனம் என்னைக் கொல்லுதடி..

# ஹனி பெயர்ச்சி..



உன்னுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் 

விடியலே வேண்டாம் என என்னும் நான், பேசி 

முடித்தவுடன் விடியலுக்காக காத்திருக்க தொடங்குகிறேன்.. 

உன் முகம் காண…



யாருக்கும் அடங்காமல் திமிராய் திரிந்தேன்..


அன்பால் அடக்கி , காதலால் கட்டுப்படுத்தி விட்டாய்..



நான் உன்னை அடித்த சோகத்தில் அழுகிறாய் நீ.. 

உன்னை அடித்ததால் என் மேல் உண்டான கோபத்தில் 

அழுகிறேன் நான்..



நான் காதல் கொண்டு தொடுவதற்கும்,மோகம் கொண்டு 

தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்து அதற்கேற்ப 

முத்தங்கள் அளிக்கிறாய்..தேவதை ஸ்த்ரீயடி நீ..



உனக்காக என் விருப்பங்களை "மாற்றிக்கொள்ள 

முயற்சிக்கிறேன்' நான்.. எனக்காக "அப்படியே 

ஏற்றுக்கொள்கிறாய்" நீ..தேவதை ஸ்த்ரீயடி நீ..

Monday, September 10, 2012

மாத்தி யோசி .. 67





விதிவிலக்கு எல்லா விஷயங்களுக்கும் உண்டு 


அப்படினா அது விதிவிலக்குக்கும் பொருந்தும் தானே..?






கருவில் இருக்கும்போது கவலைப்பட்டோமானு

தெரியாது..கல்லறையில் கவலைப்படுவோமானும் தெரியாது..

அப்புறம் வாழும்போது மட்டும் ஏன் கவலைப்படணும்..

மாத்தி யோசிங்க மக்களே..







பொண்ணு மொபைல்ல பேலன்ஸ் இருந்தா அவளுக்கு பாய் 

பிரெண்ட் இருக்கான்னு அர்த்தம்..பையன் மொபைல்ல 

பேலன்ஸ் இருந்தா அவனுக்கு இன்னும் கேர்ள் பிரெண்ட் 

இல்லைன்னு அர்த்தம்.. 


எந்த உணர்ச்சியையும் நீண்ட நாள் கழிச்சி வெளிப்படுத்தும் 

போது அதிகமாத்தான் இருக்கும்.. என்னோட காதல் எனக்கு 

இன்னும் ஸ்பெஷல்.. அட ரெண்டு மூணு பேரு வந்து 

பகிர்ந்துக்குங்க பொண்ணுங்களா...

நீ எப்படி தாங்கப்போறியோ ஹனி.. 




மவுனம் காதலர்களுக்கான மொழி எனில்,முத்தம் கணவன் 

மனைவிக்கு இடையேயான மொழி…

#ஹ்ம்ம்ம்…நான் எப்போ…?




பொய்யாய் நடிக்கிறதை விட உண்மையா இருக்குறது 

ரொம்ப சுலபம்..முயற்சி பண்ணி பாருங்க..




கெட்டவங்களை யாரும் ஏமாற்ற முயற்சிப்பதில்லை..

அவர்கள் சீக்கிரம் ஏமாறுவதும் இல்லை..* *




உடலை "மெய்" னு சொல்லுவாங்க..சிலபேருக்கு உடம்பு 

முழுக்க "பொய்" யா இருக்கு..#என்னமா புளுகுறானுங்க.. 



மனித மனம் குரங்குனா,பசங்க மனம் மானங்கெட்ட குரங்கு..

#சந்தேகம் இருந்தா சைட் அடிக்கும் போது 

வந்து பாருங்க..வாவ்..ஊருக்குள்ள எவ்ளோ பிகர்ஸ்..* *




*தச்சு மம்மூ,பப்பு பூவானு குழந்தைகள் போல சில பெண்கள் 

சொல்லிக் கேட்கும்போது  அவ்வளவு சுகமா இருக்கு…ஹ்ம்ம்..*

Saturday, September 8, 2012

சிரிக்கும் கண்கள்..



 


முத்தத்தின் தொடக்கத்தில் உறைய வைத்து உயிரை 

உறிஞ்சும் நீ,முத்தத்தின் முடிவில் அதை திரும்பத்தந்து 

திகைக்க வைக்கிறாய்..



சூழலுக்கு ஏற்றவாறு உருமாறி அலையும் ஆறு,

ஆழியில் அடங்குவதைப் போல… 

என் அத்தனை உணர்ச்சிகளும் உன் ஒருத்தியிடம் மட்டும்..

# ஹனி..



*எனக்கு பிடிக்காதவைகளையே உனக்கு பிடித்த ஒரே 

காரணத்தினால் ஏற்றுக்கொண்ட என்னால்,நமக்கு 

அதிகம் பிடித்த உன்னை , பிடிக்காததுபோல் 

எப்படி நடிக்க முடியும்..?*
*








 

பிரச்சினைகளுக்கு இடையில் சிக்கி மூச்சுத் திணறுகிறேன்..

ஒரு புன்னகை வீசி செல் போதும்..பிழைத்து விடுவேன்..*



*என் காதலினால் உன்னில் அடங்குகிறேன் நான்.. 

உன் காதலினால் உன்னில் என்னை அடக்குகிறாய் நீ..

# அப்போ மொத்தத்தில நான் அடிமை..வெளங்கிடும்*



 


உன்னுடன் இருந்த இனிமையான நினைவுகளே  என்னை 

இம்சிக்கும் இரவுகளுக்கு காரணமாய் அமைவது முரண்..

#என்னடா நடக்குது இங்க…என் கூட இருந்தவ எங்க..*


*

 


என்னைக் காதலித்துவிடக் கூடாதென தவிக்கும் உன் 

போராட்டம் தெரிந்தும் எப்படி நான் நண்பனாய் பழக..?

 


சிறு தூறலாய் என்னுள் நுழைந்த உன் நினைவுகள்,ஈர்ப்பு சாரலாய் 

மாறி இன்று காதல் பெருமழையாய் உருவெடுத்து 

என்னை வதைக்கிறது…வெள்ளம் வரும் முன் வந்து 

அடக்கி விடு அன்பே..

 



சிலருக்கு மட்டுமே கண்களிலும் சிரிப்பு இருக்கும்..என்னை 

நீ பார்க்கும் ஒவ்வொரு முறையும் காதலுடன் கூடிய 

கள்ளச்சிரிப்பை காண்கிறேனடி..உன் கண்களில்…



 



அதிகமாக பேசுவதும் உன்னிடம் தான்..

அதிகமாக மவுனிப்பதும் உன்னிடம் தான்..#ஹனி..  

Thursday, September 6, 2012

ஏன் இப்படி ...67





18 வயசு டேஞ்சர்னா , கல்யாணத்துக்கு காத்திருக்கும் இந்த 


25 - 30 ரொம்ப மோசமானது..பிகரோட போற ஆன்ட்டிகளையும் 

சைட் அடிக்கத் தோணுது..#செருப்படி சீக்கிரமே கிடைக்கும் போல..



 


தமிழை ENGLISH ல எழுதும்போது TAMIL னு எழுதக் கூடாதாம்.

அப்புறம் ஏன் தமிழ்ல ஆங்கிலம் னு சொல்றீங்க..

இங்கிலீஷ் னு சொல்ல வேண்டியது தானேனு கேட்டா 

பதில் சொல்ல மாட்றானுங்க..என்னாங்கடா உங்க நியாயம்..

 


நாலு நாள் சென்னையில மழை தூறினாலும் சூடு மட்டும் 

குறையவே இல்ல..முகத்தில ஆங்காங்கே டேஞ்சர் 

லைட்ஸ் வந்துடுச்சு..

 


ஒரு மாசத்தில பூந்தமல்லி ஹை ரோடைக் காணோம்..

நல்ல பாம்புக் கணக்கா வளைஞ்சு வளைஞ்சு போக 

வேண்டியதா இருக்கு..

 


குழந்தைக்கு பெயர் வைக்கிறதுக்கு யோசிக்கிறதை விட..

பார் க்கு பெயர் வைக்க ரொம்ப யோசிப்பானுங்க போல..

KICKOFF , SUB MARAINE , UNDERWORLD ..etc ..

 


விருப்பத்திற்கு மாறாக திணிக்கும்போது நல்ல விஷயங்கள் 

கூட வெறுப்பை தருது..#திருத்துவதற்கு நான் என்ன 

எக்ஸாம் பேப்பரா..என்னை விடுங்கடா டேய்…



 

பொய் சத்தியம் , தெளிவான குழப்பம் வார்த்தைகளைப் போல 

தான் நானும் என் பாஸும்..# எதிரெதிரா தான் இருக்கணும்..

ஒத்துவரவே மாட்டுது..ச்ச..

 


ராமர் சிவனைக் கும்பிட்டாருனு சொல்லுவாங்களாம்.

அடுத்தவர் நலனில் அக்கறைக் காட்டும் சக மனிதனை

நான் வணங்கினால் தப்பாம்..என்னாங்கடா உங்க நியாயம்..

 


வெளித்தோற்றத்தில் அவலட்சணமா தோன்றும் நபர்கள் பழக 

ஆரம்பித்த பின் நாளுக்கு நாள் அழகா தெரியுறாங்க..

#எனக்கும் தோன்றி இருக்கு..என்னைப் பார்த்த 

மற்றவர்களுக்கும் தோன்றி இருக்கு..

Tuesday, September 4, 2012

மாத்தி யோசி .. 66




அடுத்தவங்களை முழுசா நம்பி அவங்க ஏமாற்றும் போது 

ஏற்படும் வலியை விட,நான் என்னை மட்டும் நம்பி 

எல்லாரையும் சந்தேகத்தோடையே  பார்க்குறது 

எவ்வளவோ பரவாயில்லை..


 


கல்யாணம் பண்ணுவதும்,கம்பெனி மாறுவதும் 

ஒண்ணுதான்..ஆரம்பத்தில நல்லா இருக்கும்..

சில மாதங்கள் / வருடங்களில் விட்டுப்போயிட்டா 

நிம்மதின்னு தோணும்..



பசங்களை கோபப்படுத்தவும்,சமாதானப்படுத்தவும் 

பொண்ணுங்களுக்கு சில நிமிடங்கள் தான் தேவைப்படுது..



பொண்ணுங்க எல்லாத்தையும் ரொம்ப நாளைக்கு ஞாபகம் 

வச்சிக்கிறது பசங்களுக்கு பிரச்சினை..பசங்க அடிக்கடி 

மறந்து போறது பொண்ணுங்களுக்கு ப்ளஸ்..



வீம்புக்கு காதலிச்சு வீணாய்ப் போவதை விட..புத்திசாலி 

பேச்சுலராவே இருக்கலாம்..#காதலி கிடைக்காத காண்டு..



கல்யாணம் பண்ணியும் பிரம்ச்சாரியா இருந்த விட்டுடுறீங்க..

ஆனா கல்யாணம் பண்ணாம சம்சாரியா இருந்தா 

தப்பா என்ன..#என்னாங்கடா உங்க நியாயம்…



உயிர் எப்போ போகும்னே தெரியாத இந்த வாழ்க்கையில்

ம__போச்சேன்னு கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது..?



அழகான பொய்யாய் இருக்குறதை விட..நான் கொஞ்சம் 

வருத்தப்பட வைக்கும் உண்மையாவே வாழ்ந்துட்டு போறேன்..


 
விஸ்வரூபம் படத்தின் பெயர் உருது எழுத்துகள் போல உள்ளது.

இது கண்டிப்பா முஸ்லிம் தீவிரவாதிகள் பத்தின கதைதான்னு 

இன்னுமா யாரும் கிளம்பலை..




 


விருப்பமில்லாம ஒண்ணை நல்லதுன்னு சொல்றதை விட,

அதை செய்வதில கிடைக்கும் திருப்தியும்,சந்தோஷமும் 

முக்கியம் ஆச்சே..

Sunday, September 2, 2012

நீ சூழ் உலகு..




என் சில்மிஷங்களினால் உன்னை சிரிக்க வைக்கிறேன்..

நீ சிரித்து என்னை சிலிர்க்க வைக்கிறாய்..




உன் காதலைப் பெற முடியாமல் நான் சற்று தடுமாறுவேனே

தவிர..இன்னொருத்தி பின்னால் தடம் மாற மாட்டேன்..




எந்தக் கவிதையை எழுத ஆரம்பித்தாலும்
உன் பெயரையே முதலில் எழுதுகிறேன்..

முதலும்,முடிவும் நீயே.





காமத்தின் வெளிப்பாடாய் என் முத்தம்..

காதலின் வெளிப்பாடாய் உன் முத்தம்..

#தேவதை ஸ்த்ரீயடி நீ..




இது நீர் சூழ் உலகாம்..எனக்கு மட்டும் நீ சூழ் உலகு..



 


என் சீண்டல்களில் சிலிர்த்து,சிணுங்கிக்கொண்டே  கைகள் 

கொண்டு முகம் மூடுகிறாய்..வெட்கத்துக்கே 

வெட்கம் வருகிறதாம்..#வெட்கப்பட்டுக்கிட்டே 

இருந்தா வெளங்கிடும்..




எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதது குறித்து கோபிக்கிறாய்..

உன்னை என்னுடன் சேர்த்த காதல் நம்பிக்கை மட்டுமே 

உண்டு எனக்கு ஹனி..



 


மகிழ்ச்சியின் மிகுதியில் செத்துவிடலாம் என்கிறாய்..

பைத்தியக்காரி..புதிதாய் பிறப்போம் வாடி..


 


பல வார்த்தைகள் கொண்டு காதலை வெளிப்படுத்துகிறேன் நான்..

நீயோ ஒற்றை முத்தத்தில் புரியவைத்து விடுகிறாய்..


 


விடைபெற எத்தனிக்கையில் திரண்ட உன் கண்ணீர் 

துளிகளில் கரைகிறேன் " நான் "

Saturday, July 28, 2012

ஜோக்கூ..62




உன்னை விட்டு விலக நினைக்கும் போதெல்லாம் 

நீயே என்னுள் நிறைந்து நிற்கிறாய்..

# RC.. போ நீ போ..



ஓயாத கடல் அலைகளைப் போலவே..எனக்குள் 

தேயாமல் உன் நினைவுகள்..# நான் காயாம 

இருக்க CALL பண்ணுடி..




பிரிவின் வலி தெரிவது மீண்டும் சந்திக்கும் போது 

மட்டுமே..# 9 லார்ஜ்.. RC..I LOVE YOU..




உன்னைப் பிரிந்து மட்டுமே வாழ்கிறேன்..மறந்து அல்ல..

# அன்புள்ள RC..எனக்கு இப்போ மாசக்கடைசி..



புல்லின் மீது பனித்துளி போல இருந்த உன்மீதான என் காதல்..

சூரியன் போல உன் அப்பனைக் கண்டதும் உடனே காணாமல் 

போய் விட்டதே..# கெடா மீசையைக் 

கண்டாலே டர் ஆகுது..



விஷத்திற்கு விஷமே மருந்தாம்..உன் முத்தத்தால் 

மூர்ச்சையாகி போன என்னை மீண்டும் முத்தமிட்டு 

உயிர்ப்பிக்க செய்..#பல்லை தேயுடி  பன்னாடை..

Wednesday, July 25, 2012

ஏன் இப்படி ...66







பாஸுக்கும்,காதலிக்கும் உள்
ஒற்றுமை..

நாம எவ்வளவு நேரம் அவங்க கூட இருந்தாலும் பத்தாது..

வேடிக்கைப் பார்த்துகிட்டு  வெட்டி நியாயம்

பேசிக்கிட்டே இருக்கணும்..



 


நான் பேசணும் நீ கேட்கணும்னு நினைக்கிறதே 

இந்த பாஸ்களுக்கும்,பொண்ணுங்களுக்கும் 

வேலையா போச்சு..டிஸ்கஷன் அப்படினா ரெண்டு 

பேரும் பேசுறது தானே..

 


WORKING DAYS லயே வேலை செய்யாதவன் எப்படிடா சண்டேல 

வேலை செய்வேன்..புரிஞ்சிக்க மாட்றானே இந்த 

புண்ணாக்கு ரங்கன்..


 

நாமளா மதிச்சு சொல்லும்போது மதிக்காம,சொல்ல 

மாட்டேன்னு அடம்பிடிக்கும்போது தான் அதைப்பத்தி 

மட்டுமே கேட்பாங்க..#ஏன் பாஸ்..ஏன் கேர்ள்ஸ்..

 


ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு ஓவரா கவலைப்பட்டு 

தானும் டென்ஷனாகி நம்மையும் டென்ஷனாக்குவதே  

இந்த பொண்ணுங்களுக்கும்,பாஸ்களுக்கும் வேலையா போச்சு..

 

பார்த்தவுடனே மயக்கம் வந்து ஒரு வித ஏகாந்த நிலைக்கு 

போவது காதலிக்கு அப்புறம் கமலைப் பார்க்கும்போது தான்..

#கிறுட்டு கிறுட்டுனே வருது..
 


அது எப்படிடா கரெக்டா , சரக்கடிக்க காசில்லாம 

காண்டா இருக்கும்போது வந்து மச்சி..இன்னைக்கு சரக்கா னு 

கேட்டு வெறுப்பேத்துறீங்க..?

 


சனிக்கிழமை சாயங்காலம் நாலு பசங்க சேர்ந்து என்ன சாமி 

கும்பிடவா போறோம்..சரக்கடிக்கத் தான் போறோம்..

இதை கண்டுபிடிச்சிட்டேன் கூவுது ஒரு பக்கி..


அரசு , வேகத்தடைகளை டாஸ்மாக் பகுதிகளில் 


அதிகமாக்கினா நல்லது..மாடு,நாய் எல்லாம் ஒதுங்கி 

போகுது..இந்த மனுஷப் பயலுக நகர மாட்றானுங்களே..


 

சில நேரங்களில் ஏமாற்றம் தருபவரை விட ஆறுதல் 

சொல்ல வருபவர்கள் மீதே அதிகம் கோபம் வருது..

#பிகர் கிடைக்காத காண்டுல இருக்கும்போது புத்தி 

சொல்ல வருதாம் நாயி.

Saturday, July 21, 2012

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 60




குளிர் தெரியாம இருக்க கல்யாணமானவர்களுக்கு

மாது..பேச்சிலர்களுக்கு மது..சாமியார்களுக்கு மட்டும்

இரண்டும்...ஹ்ம்ம்.. இருங்கடா நானும் ஆதினம் ஆகுறேன்..






பணக்கஷ்டத்திற்காக ஆன்ட்டியை நாடிச்

செல்லாதே..மனக்கஷ்டதிற்காக செல்வதில் தவறில்லை..

#ஹர ஓ சாம்பா..






பணக்கார ஆன்ட்டியை தேடுவதை விட,பாசக்கார ஆன்ட்டியை 

நாடுவதே நல்லது..# ஹர ஓ சாம்பா..






சீசனுக்கு வந்து சீன் போடும் சிட்டுகளை விட,அப்போ 

அப்போ கிடைக்கும் ஆன்ட்டிகளின் ...களே அலாதியானது..

ஹர ஓ சாம்பா...








சரக்கடிச்சி வாந்தி எடுக்குறதும்..சண்டே ல ஆபிஸ் வருவதும் 

ஒண்ணு..# தலை பாரமா இருக்கு..






கன்னிகளும் காற்றும் ஒன்று தான்..

காதலிக்கும்போது தென்றலாக,கல்யாணத்துக்கு 

அப்புறம் சூறாவளியாக..








காதலுக்கும் கக்காவுக்கும் நேரம் காலமே கிடையாது..

சில பேருக்கு வரவே வராது..சில பேருக்கு அடிக்கடி வரும்..



கலர்புல் வீக் எண்டு வாய்த்தவனுக்கு எப்போதான் 

பிகர்புல் வீக் எண்டு வாய்க்குமோ..#ஆனா பீஸ்புல் வீக் 

எண்டு அப்புறம் கேர்புல் வீக் எண்டு ஆயிடுமே..