Thursday, February 10, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 5

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


1. கடவுள் பெயரால் கண்டவனுக்கு

கொடுப்பதை விட…

காஞ்சு போயி கிடப்பவனுக்கு 

வாங்கி கொடு..

நீ கடவுளாக தெரிவாய்..

சரக்கே சாமி.. 

RC யே ஆண்டவன்…


 
2. சரக்கடிக்கும் போது போதை

இல்லாத சந்தோஷம் கிடைப்பது 

கஷ்டம்..

அப்படி கிடைக்கிற தருணங்களை 

நாம் தவற விட்டால்.. 

சரக்கும் வேஸ்ட்..

சந்தோஷமும் வேஸ்ட்..

 3. ஒவ்வொரு சரக்கும் நமக்கு 

மதிப்பானதாக தோன்றும் 

தருணங்கள் இரண்டு..

ஒன்று குடிக்கும் முன்பு…

இன்னொன்று வாந்தியாய் 

வெளியேறிய பிறகு…

4. சரக்கடிச்சிட்டு நீ சலம்பினால்.. 

சரக்கு உனக்கு ஒத்துக்கலை…

சரக்கடிச்சிட்டு நீ சைலென்ட்டா 

இருந்தா..சரக்குக்கு உன்னை ஒத்துக்கலை…

5. சரக்கு அடிக்கும் விஷயத்தில் 

மற்றவர்கள் கருத்தை கேட்காதே..

இது உன்னுடைய போதை.. 

ஊறுகாய்யோ ஓட்டை வடையோ 

உனக்கு பிடித்ததை எடுத்துக்கொள்..


No comments: