Friday, February 4, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. குடிகாரர்கள் நல்ல சரக்கை 

தேர்ந்து எடுத்து குடிப்பார்கள்…

ஆனால் மொடா குடிகாரர்கள் எந்த

சரக்கை அடித்தாலும் அவர்களுக்கு

ஏற்றதாய் மாற்றி விடுவார்கள்…





2. சாந்தமாக இருங்கள்…

முடியாவிட்டால்…

சரக்கோடு இருங்கள்… 

அமைதியை ஆல்கஹால் தரும்..





3. கண்களை பயன்படுத்து தேர்ந்தெடுக்க..

மூளையை பயன்படுத்து மூடியை திறக்க…

கைகளை பயன்படுத்து கறித்துண்டுகளை

எடுக்க..

உன் கால்களை பயன்படுத்து

கம்பி நீட்ட…





4. சனிக்கிழமை சரக்கு என்னும்

பழக்கத்தை அழிக்கவும் முடியாது…

பசங்க மட்டை ஆகி மல்லாந்து 

விழுவதை தடுக்கவும் முடியாது…







5. சரக்கடிக்க போவது ஒருவனை 

தப்பானவனாக காட்டும்..

நல்லவர்கள் வேஷம் போடும்

அத்தனை பேருக்கும் கொஞ்சம்

ஊத்தி விட்டு பார்த்தால் தான் 

அவர்களின் உண்மை 

உருவம் தெரியும்.. 

குடிகாரர்கள் குழந்தை 

மனம் கொண்டவர்கள்..

No comments: