Sunday, February 6, 2011

ஜோக்கூ... Part 14 ( RC ஸ்பெஷல் 5 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



1. நீ என்னை அடிமை படுத்தி 

விட்டாய் என்று தெரிந்தும்…

இயல்பாய் இருக்கிறேன்…

ஏவாள் கடித்த பழம் உன்னை

விடவா சிறந்தது…????




2. உன்னை மறக்கா விட்டால்

நிச்சயம் எனக்கு மரணம் தான்…

ஆனால் உன்னை மறந்து விட்டு 

எனக்கு எதற்கு வாழ்க்கை…




3. நீ இல்லாத சனிக்கிழமைகள்

எனக்கு சபிக்கப்பட்டவை..

நீ இல்லாத விருந்துகள் 

எனக்கு விருப்பமற்றவை..

கடை மூடினாலும் கள்ள 

மார்க்கெட்டிலாவது  உன்னை

கண்டடைவேன்…

என்றும் நீ வேண்டும் எனக்கு 

எழுந்து நிற்க முடியாவிடிலும்..




4. உன்னை மறக்க வேண்டும்

என்று நினைக்கும் ஒவ்வொரு

நொடியிலும்...

உன்னை மட்டுமே நினைத்து

கொண்டிருக்கிறேன்…

RC இன்றி அமையாது உலகு…




5. அழகான உன்னால் மட்டுமே

ஆழமான அமைதியை 

தர முடியும்…
 
ஆனந்தம் RC யுடன் ஆரம்பம்…



No comments: