Wednesday, March 2, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 4

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஆறாவது போனதில் இருந்து ஆண்களின் வாசனையே அதிகம்…

ஆனாலும் அந்த சின்ன வயசுல அவ்வளவு சோகம் ஆகாதுங்க…

(பையனுக்கு என்ன ஒரு கஷ்டம்…)
அப்படியே ஒரு ரெண்டு மூணு வருஷம் எந்த பெண்களும் உள்ளே 

வராமலே போச்சு… ஆனா எங்க கிளாஸ் டீச்சர் மணிமாலா வை

எனக்கு ரொம்ப பிடிக்கும்… ( அட…பரதேசி நாயே…அங்க சுத்தி 

இங்க சுத்தி கடைசியில் ஆசிரியைக்கே வா…?) 

அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி…என்ன அப்ப அவங்களுக்கு 

ஒரு 26 வயசு இருக்கும்..அவ்வளவு தான்… 

( என்ன…அவ்வளவு தானா..? சனியனே…உனக்கு அப்ப 

வெறும் 11 வயசு தானே டா…)
 
அவங்க ஒரு ரெண்டு வருஷம் தான் எங்க ஸ்கூல் ல இருந்தாங்க… 

அப்புறம் வேற ஸ்கூல் போயிட்டாங்க… காலாண்டு பரீட்சை 

வந்துச்சு…அப்ப ரெண்டு மூணு ஸ்கூல் ல இருந்து பசங்க வந்து

சேர்ந்து இருந்ததால…யார்  ரேங்க் வாங்குவானுங்கன்னு ஏக

எதிர் பார்ப்பு… எங்க ஸ்கூல் ல இருந்து மொத்தமே 10 , 12 பேரு

சேர்ந்து இருந்தோம்… அதுல 5 பேரு B செக்ஷன் போயிட்டானுங்க…

பிரகாஷும் , சந்தோஷும் அந்த செக்ஷன்… எங்க வீட்டுகிட்ட இருந்த

ரெண்டு பசங்களோட சேர்த்து மொத்தமே ஆறு ஏழு பேரு தான்

எங்க பசங்க அவுட் of 60 பேருல… 

மொக்கையா உட்காந்து இருந்தோம்…
 
RANK CARD வந்ததுல நான் second rank… செல்வம் னு 

ஒருத்தன் First Rank… அன்னையில இருந்து பத்தாவது 

முடிக்கிற வரை அவன் தாங்க First Rank… ரெண்டு , மூணு தடவை 

மட்டும் அவனை ரெண்டாவது இடத்துக்கு தள்ளி நான் first வந்தேன்… 

மச்சி..உனக்கு ஞாபகம் இருக்கா அப்ப நீ கோவப்பட்டது…

ஆறுதல் சொல்ல போனது ஒரு குத்தமா… 

( சரி..விடுடா…உனக்கு சனி நாக்குல…) 

ஐயையோ…ட்ராக் மாறி போறேனே…
 
அப்போ  எந்த எதிர்பார்ப்புமே இல்லாம நான் இரண்டாம் இடம்

வந்ததால் அந்த டீச்சர் ருக்கும் என்னை பிடிக்கும் …

அவங்கள பார்த்தாலே அத்தனை பேருக்கும் பயம்…

அதனால வெளியில காட்டிக்க மாட்டாங்க…( பெண்களின் மனசு…)

 
இப்படியே…போயிகிட்டு இருக்கும் போது தான்… 

எங்க தெருவுக்கு மேரி னு ஒரு 

குட்டி ஜோதிகா வந்தா…

( மூணாவது கிறிஸ்டியன் பிகரா…) 


அந்த பொண்ணு அதிகம் படிக்கலை… பக்கத்தில் இருந்த

Export ல வேலைக்கு போயிகிட்டு இருந்தா… 

என்னோட பிரெண்ட் சதீஷ் வீட்ல தான் குடி இருந்தா… 

அவன் வீட்டு மொட்டை மாடி தான் எங்க தெரு பசங்களுக்கு

டாப்பு அடிக்கிற இடம்… அங்க தான் நாங்க ஏழு வயசுலேயே

ரம்மி ஆட ஆரம்பிச்சது… அவனுக்கு பக்கத்து வீட்ல மகேந்திரன்… 

அவனுக்கு பார்த்திபன்னு ஒரு அண்ணன்…பாஸ்கர் னு ஒரு தம்பி… 

அந்த பாஸ்கர் தான் எங்களுக்கு சீட்டாட்ட குரு…

( ஆமா…வில்வித்தை யாட கத்துகிட்டீங்க … 

வெளங்காம போறதுக்கு சீட்டாட்டம் தானே டா கத்துகிட்டீங்க..) 

அவங்க அப்பா வோட கேங் எல்லாம் Sunday ஆனா 

மாடியில சீட்டு ஆடுவாங்க…


அப்ப பாஸ்கர் தான் டீ , பீடி , தண்ணீர் சப்ளை…பையனுக்கு

கற்பூர புத்திங்க… அப்படியே கத்துகிட்டான்…
 
ஒரு நல்ல நாளில் நாங்க எல்லாரும் சுத்தி இருக்க ஐயா 

தான் நடு நாயகமா இருந்து எங்களுக்கு ரம்மி னா என்னனு

விளக்குனாரு…

( ஆகா…சின்ன வயசுலேயே சீட்டாடிய சில்லரைகளாடா நீங்க…).. 

சீட்டு விளையாடுறதுக்காக பசங்க எல்லாம் அங்க assemble ஆனா…

நான் அவளுக்காக அங்கயே இருக்க ஆரம்பிச்சேன்…

அந்த பொண்ணும் அப்போ அப்போ பார்வையாலேயே 

பதில் சொன்னா என் காதல் கேள்விகளுக்கு… 
 
என் பக்கத்து வீட்டுல காமராஜ் னு பிரெண்ட் ஒருத்தன்…

நல்ல பையன்…அந்த வயசில மட்டும் தான்… 

மன்னிச்சிக்கோ மச்சி.. உண்மைய சொல்லித்தானே ஆகணும்..

எனக்கு பொய் சொல்ல தெரியாது டா… 


இப்போ கொஞ்சம் தடம் மாறி போயிட்டான்... எங்க தெருவில 

எங்க செட்டு பசங்க மட்டும் ஒரு எட்டு பேரு இருந்தோம்… 

எல்லாரும் பக்கத்துலையே இருந்தததால காலையிலேயே

கூட்டமா இருந்து தான் வேலைகளை ஆரம்பிப்போம்…


பல்லு விளக்குவதில் இருந்து… சதீஷ் வீட்டுக்கு எதிர்ல ஒரு

காம்பவுண்ட் மட்டும் கட்டி காலியா விட்டு இருந்தாங்க… 

அந்த சுவர் தான் எங்க ஸ்பாட். அங்க உட்காந்து கிட்டு குறைஞ்சது

ஒரு அரை மணி நேரமாவது பல்லு விளக்குவோம்…
 
அடிக்கடி என் பார்வை அந்த பொண்ணு வீட்டு பக்கம் போகவே…

டே…நீ ப்ரியாவை தானே லவ் பண்றேன்னு கலாய்க்க

ஆரம்பிச்சிட்டானுங்க… 

( என்னடா…குழப்புறே.. ப்ரியா வா..? மேரி னு சொன்னே… )
 
பிரியா மேரி யோட தங்கச்சி… அவளை விட ரெண்டு மூணு வயசு

சின்ன பொண்ணு… ( ஆமா..இவங்களுக்கு மட்டும் காதலிக்கிற வயசு…) 

நான் பதறி போயிட்டேன்…அட சனியன் புடிச்சவனுன்களா…

சொல்றது தான் சொல்றீங்க…அக்காளோட சம்பந்தப்படுத்தி

சொல்லுங்கடான்னா தங்கச்சி கூட சேர்த்து வச்சி

சாவடிக்கிறீன்களே னு செம காண்டு ஆயிட்டேன்…

( இருக்காதே பின்னே…முதல் லட்டு திங்கவே முக்க

வேண்டி இருக்கு…இதுல ரெண்டாவது வேறையா…)

அப்புறம் ஒரு வழியா நான் அவளுக்கு நூல் விடுறது எல்லாருக்கும்

தெரிஞ்சி போச்சு… எங்க வீட்டு மொட்டை மாடிலையும் அடிக்கடி

கூட்டம் நடக்கும்…எங்க House owner பொண்ணு செல்வி அக்கா தான்

அதுக்கு In charge… so , பொண்ணுங்களோட சங்கமம் ஒரு பக்கம்…

நாங்க இந்த பக்கம்…இப்படியே கொஞ்ச நாளைக்கு இந்த மீட்டிங்

தொடர்ந்து நடந்தது… எங்க வீட்டில எப்பவுமே ஒரு பழக்கம்… 

இப்ப வரைக்கும்… 9 மணிக்குள்ள சாப்பிட்டுட்டு தூங்கிடணும்… 

இப்போ பிரச்சனை இல்ல..ஆனா அப்போ அது மிலிட்டரி ரூல்… 

மீறுனா தீக்குச்சி சூடு தான்…
கிடைக்கிற கொஞ்ச நேர கேப்புல கெடா வெட்ட முழு மூச்சோடு

முயன்றேன்… ( பண்ணித்தானே ஆகோணும்…)

ஒரு நாள் மொட்டை மாடில கிட்டத்தட்ட தெருவில் இருந்த

அத்தனை பசங்களும் பொண்ணுங்களும் கூடி இருந்தோம்… 

பாட்டு , டான்சுன்னு களை கட்டுச்சு… நாங்க அப்படியே ஒரு 

மூலையில போயி நின்னுகிட்டோம்… ( இருட்டு மூலையில முரட்டு……)

திடீருன்னு அவ என் கைய பிடிச்சிக்கிட்டா… எனக்கு பயத்துல

வேர்த்துடுச்சு…( கைய பிடிச்சதுக்கேவா…? ) 

அப்போ தான் நான் “ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சி இருக்கு மேரி… 

I you love “ னு உளறிகொட்டினேன்… 

( கருமம் பிடிச்சவனே… காதல் சொல்ற முறையா அது…)

அவ சிரிச்சிட்டா…எனக்கு ஏற்கனவே தெரியும் டா…

நீ தான் எப்ப பாரு வச்ச கண்ணு வாங்காமா பே னு பார்க்குறியே…


இதை பக்கத்து வீட்டு மாடியில இருந்து அந்த காமராஜ் படு 

பாவி பார்த்துட்டான்…( வில்லனா…? ) நல்ல வேளை… 

அவன் அதை யார் கிட்டயும் சொல்லலை… 

( தூ..இந்த கருமத்தை வெளியில வேற சொல்ல முடியுமா...?) 

அப்புறம் என்னை தனியா கூப்பிட்டு ஓட்டி எடுத்துட்டான்… 

இருட்டுகுள்ள என்ன டா பண்ணீங்கன்னு கேட்க…

நான் ஒண்ணுமே பண்ணலை டான்னு ன்னதும் என்னவெல்லாம்

பண்ணி இருக்கணும்னு அவன் சொன்னான் பாருங்க…

ச்ச..அது எல்லாம் நடந்து இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்…

( இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம் நாயே… )

அந்த டைம் ல சென்னை ல தண்ணீர் பிரச்சினை தலை

விரிச்சி ஆடிச்சு.. ( இன்னா டான்ஸ் ஆடுச்சி மச்சி…) 

அதனால எங்க வீட்ல வேற ஏரியா வுக்கு போகலாம்னு 

முடிவு பண்ணினாங்க...



இதை நான் அவ கிட்ட சொன்னேன்… அவ அலட்டிக்கவே இல்லை…

( உன்னை சுத்தமா மதிக்கலையோ… இதுக்காடா இவ்வளவு

build up கொடுத்த..)

சரி டா..விடு,அதனால என்ன…நீ அப்போ அப்போ

இங்க வந்து போ…முடிஞ்சா நானும் அங்க வர்றேன்னு சொன்னா…

( இதெல்லாம் எப்போ நீ எட்டாவது படிக்கும்போது…

வெளங்கிரும்… என்னா வெவரம்…) 

அவளுக்கு என் ஞாபகமா ஒரு ஜோடி ஜிமிக்கி வாங்கி

தந்தேன்…அவளோட கழுத்து மணியை அவ கொடுத்தா..

( அதை நீ தொலச்சி இருப்பியே…) அந்த மணியை ஒரு 

ரெண்டு வருஷம் வச்சி இருந்தேன்…அப்புறம் அது எங்க

போச்சோ தெரியலை…

ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் ஊருக்கு போயிடுவேன்…

அப்படி தான் அந்த வருஷமும் போயிட்டு வந்தா…நேரா என்னை 

புது வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க… அந்த வீட்டுக்கும்

இதுக்கும் எப்படியும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்…

ஆனா ஸ்கூல் போற வழியில தான் அந்த பொண்ணு வேளை 

செஞ்ச export இருந்துச்சு… அதுக்கு அப்புறம் ஒரு ஆறு மாசம் அடிக்கடி

மீட் பண்ணோம்..அப்புறம் அது அப்படியே குறைஞ்சி ஒரு 

கட்டத்தில் விட்டு போச்சி…
 
அந்த புது வீட்டுக்கு போன அப்புறம் தான் எனக்கு எத்தனையோ

விதமான ஜில்பான்சி கில்பான்ஸ் அனுபவங்கள் கிடைச்சது…

ஏன்னா அதுக்கு ஒரு ரெண்டு மாசம் முன்னாடி தான் நான் 

வயசுக்கு வந்தேன்… நான் வயசுக்கு வந்த கூத்து இருக்கே…

என்னை கொடுமை படுத்தி டானுங்க..

( என்ன டா சொல்ற...ஒரு மாதிரியா இருக்கே...?)


வழக்கம் போல அன்னைக்கு காலையில எழுந்த எனக்குள் என்னமோ

ஒரு மாற்றம்…( என்ன… ஜட்டியில ஜொள்ளு விட்டு டியா…?) 

நைட் வேற சரியா தூங்கலை…தப்பு தப்பான கனவுகள் நிறைய… 

குளிக்க போனதுக்கு அப்புறம் அதிர்ச்சி… இது ஏன் இப்படி இருக்கு…

ஸ்கூல் போனதுக்கு அப்புறம் பசங்க கிட்ட மெதுவா இந்த மேட்டரை

பத்தி கேட்டேன்… நான் ரெண்டாவது ரேங்க் வாங்குனாலும் 

கிளாஸ் ல எல்லா பசங்ககிட்டையும் பேசுவேன்… 

செல்வம் கொஞ்சம் Reserved டைப்… அவனுங்களுக்கு புரிஞ்சி போச்சு…

என் மார்பு காம்புகளை தொட்டு பார்த்துட்டு “ மச்சி…நீ வயசுக்கு 

வந்துட்டே டா னு சொல்லி கூச்சல் போட ஆரம்பிச்சிட்டானுங்க… “ 
 
லஞ்ச் அவர்ல என்னை உட்கார வச்சி கும்மி எல்லாம் 

அடிச்சி ஏக சேட்டை… 


அதுக்கு அப்புறம்..இனிமே நான் என்ன செய்யணும்…

( டே… அது தானே…எனக்கு புரிஞ்சி போச்சு…) 

அதை வலிக்காம எப்படி செய்யணும் னு எனக்கு ஒரு ஏழு எட்டு

பேரு சேர்ந்து பாடமே எடுத்தானுங்க… அதுல 

முக்கியமானவங்க…சொல்லி ஆகணும்ல.. மச்சி…உங்க இமேஜ்

பாதிச்சா மன்னிச்சுடுங்க… 

A.R மோகன் , பிரேம் , சரவணன் ( பாலி ) , மணி ( மண்டை ஓடு ), 

Science முருகன் , ராஜேஷ் , ராகவன் …

நான் இருந்தது பாடி புது நகர் ஏரியா வில  2 வது தெரு… 

யப்பா…எத்தனை பொண்ணுங்க எங்க தெருவில…ஆனா 

அதுல தேறுவது பார்த்தா விரல் விட்டு எண்ணிடலாம்…

(அடே..ஆலையில ஓடற கரும்பில அடிக்கரும்பா இருந்தா 

என்ன நுனி கரும்பா இருந்தா என்ன…

நமக்கு வேண்டியது வெல்லம்  தானே டா…)
 
அந்த வயசுக்கே உண்டானா தெனாவட்டு , ஆசைகள் , பழக்கங்கள்…

பல்லு விளக்க தெருவுக்கு வந்தா கூட தலை வாரிகிட்டு மாடியை 

விட்டு கீழ இறங்குவேன்… அந்த தெருவில இருந்த போது பழக்கம் 

ஆன நாலு அக்கா , ரெண்டு ஆன்டியை பத்தி நான் சொல்ல முடியாத

நிலமையில இருக்கேன்…மன்னிச்சுடுங்க… 

நான் சைபர் கிரைம் ல மாட்டின கதையும்…

முஸ்லிம் வீட்டு முயலுக்கு நூல் விட போயி நொந்த கதையும்

வரும் பதிவுகளில் சொல்றேன்…
 
ரொம்ப நாள் கழிச்சி அந்த பழைய House owner ரோட முதல்

பையன் கல்யாணத்தில் தான் மேரியை  மறுபடியும் பார்த்தேன்…

நண்பர்கள் கூட்டம் எப்போதும் கூடவே இருந்ததால சரியா

பேசிக்க முடியலை… ஆனா அங்க இருந்த அந்த மூணு மணி 

நேரமும் மனசுக்குள்ள சில நூறு பட்டாம்பூச்சிகள்… 

கொஞ்ச நேரம் வழக்கம் போல வாயிலேயே வடை சுட்டு 

பொண்ணுங்களை கவர் பண்ணினேன்…( பொண்ணுங்களையா …? ) 


ஆமாங்க… எங்க தெருவில இருந்த மோகனா , அமலா , ஈஸ்வரி 

பொண்ணையும் , அப்போ அப்போ சொந்தகாரங்க வீட்டுக்கு வந்து 

போன  நதியா , தமிழ்செல்வி யை பத்தியும் அடுத்த பதிவில் 

சொல்றேன்… 

(ஸ்ஸ்ஸ்…யப்பா…இப்பவே கண்ணை கட்டுதே…

இன்னும் எத்தனை பகுதிகள் வருமோ…?) 
 
ஆனா எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிற மாதிரியே இருந்தது 

அவளோட பேச்சும் , செய்கைகளும்… பசங்களை கேட்டா அப்படி 

எல்லாம் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் நடக்கலைன்னு 

சொன்னானுங்க… பழைய மாதிரி அவ கிட்ட அந்த சிரிப்பு 

இல்ல…என்கிட்டே கொஞ்சம் இடைவெளிவிட்டு பேசுவது நல்லாவே

தெரிஞ்சது… ஏன்…மேரி…எங்கிட்ட சகஜமா பேச ஆரம்பிச்சா 

உன் காதல் வெளியில வந்துடும்னு பயமா…? 

இல்ல வேற எதாவது தயக்கமா…?
எது எப்படியோ… நீ எங்கிட்ட காதலோட பேசலைனாலும்…

நான் கிளம்புன அந்த நேரம் 

கொஞ்சம் கண்ணீரோடு 

வழியனுப்பினியே… அது போதும்… 

என் காதல் பொய் இல்லை னு புரிஞ்சிக்க

No comments: