Thursday, March 3, 2011

ஜோக்கூ.. Part ..19

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
காதல் செய்யும் அனைவரும் 

நிலவை நினைக்க மறப்பதில்லை…
 
ஒரு வேளை காதலில் தோற்றால் 
 
நிலவை போலவே தனியாக 

இருக்க வேண்டும் என்பதாலோ…






தெளிந்த நீரில் உன் முகம்…
 
எனக்கோ உயிர் போகும் தாகம்…
 
என் கை பட்டால் நீ களைந்து விடுவாய்…
 
உன்மேல கைய வச்சா உங்கண்ணன்

கொன்னுடுவேன்னு சொன்னானே..






ஆயிரம் கவலை எனக்கு இருந்தாலும் 

உன்னை கண்டவுடன் தூக்கம் 

வருவது எப்படி…புத்தகம்..






என்னவள் உறங்கும் வரை காத்திருப்பேன்…
 
என் மச்சினி உஷாவுடன் கடலை போட…
 
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…






நீ என்னை பார்த்து சிரிக்கும் 

போது தெரியவில்லை…
 
ஒரு நாள் ஊரே என்னை பார்த்து

சிரிக்கும் என்று…
 
பாம்பு மட்டுமல்ல பெண்களின் 

பல்லிலும் விஷம் உள்ளது…



  


No comments: