Monday, March 28, 2011

ஏன் இப்படி ... Part 12

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
பெண்களே…

நாங்க தப்பு செஞ்சா நீங்க திட்றீங்க…

நாங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறோம்…

நீங்க தப்பு செஞ்சா நாங்க திட்றோம்…உடனே நீங்க அழுவுறீங்க…

அப்பவும் நாங்க தான் மன்னிப்பு கேட்குறோம்… 

என்ன எழவு இது…

உங்க போதைக்கு நாங்க தான் ஊறுகாயா…?





அம்மா : ஹிட்லர் யாரு…?

பையன் : தெரியாது…
அம்மா : படிப்புல கொஞ்சமாவது கவனமா இருக்கணும்…

பையன் : ப்ரியா ஆன்டி யாரு…?

அம்மா : தெரியலையே டா…

பையன் : இதுக்கு தான் அப்பா மேல கொஞ்சம் கவனமா இருக்கணும்…








ஒரு பொண்ணு தன முகத்தை துப்பட்டாவால மூடிகிட்டு

பஸ் ஸ்டாப்பில் நிற்கிறா..

45 + பெருசு – ஹலோ..பியூட்டி..

நான் வேணும்னா lift கொடுக்கவா..

பொண்ணு – இது என்ன கொடுமை..அப்பா..

நான் உன் பொண்ணு பா..







நேத்து ஒரு பொண்ணுக்கு கொஞ்சம் சுத்தி வளச்சி

" நான் உன்னை காதலிக்கிறேன்" னு messege அனுப்பினேன்.. 

அந்த அரை லூசு அதை forward message னு நெனச்சி 

எல்லாருக்கும் அனுப்பிட்டா.. 

எதையுமே முழுசா படிக்காம இப்படி எழவு கொட்டும்

இவளுங்களை என்ன பண்றதுனே தெரியலையே ஈஸ்வரா..









வாத்தி : நீ படிச்சி முடிச்சதும் என்னாவா ஆகப்போற..?

நானு : நான் M.B.B.S முடிச்சி S.I ஆகி நல்ல MNC சாப்ட்வேர்

கம்பனி யில வக்கீலா வேலை பார்க்க போறேன்.. 

எத்தனை நாள் எங்களுக்கு புரியாம பாடம் நடத்தினீங்க… 

இப்ப சாவுங்க..





நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் கோடிகளை 

முதலிலேயே கொள்ளை அடிச்சிட்டு அப்புறமா CBI 

கேட்குற கேள்விகளுக்கெல்லாம்  பதில் சொல்றாங்களே..

ஒரு வேளை KBC யை REVERSE ல விளையாடுறாங்களோ..?# டவுட்டு









உன் கண்களை மூடிக்கொண்டு பிரிந்து போன உன்னுடைய 

காதலியை பற்றி நினைத்து பார். 

உன் உதடுகளில் ஒரு புன்னகை வந்து தானாக 

ஒட்டி கொண்டு முணுமுணுக்கும்.

நல்லவேளை தப்பிச்சிட்டேன்டா சாமி.








நம்ம தேசத்தை நாசமாக்குன ஒரு வார்த்தை - ஊழல்.. 

மக்களை சோம்பேறிகளாகவும் சொரணை 

இல்லாதவர்களாகவும் ஆக்கிய ஒரு வார்த்தை - இலவசம்.




No comments: