Thursday, March 3, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 5

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
பொண்ணுங்க இல்லாத என்னோட வாழ்க்கையை நினைக்கவே 

ரொம்ப பயமா இருக்கு…எல்லாமே கிடைச்சிட்டா வாழ்க்கை ரொம்ப

போர் அடிக்குமே… சரி இப்போ இந்த பகுதியில நான் 

சொல்லப்போறது அமலா , நதியா , தமிழ்ச்செல்வி , 

அமலா பால் ( ஆக்ட்ரஸ்  இல்ல.. அவங்க வீட்ல மாடுகளை 

வச்சி பால் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க..அதான் ),

மோகனா னு சில பொண்ணுங்களை பத்தி..

(சொல்லின் செல்வர் வலம்புரி ஜான் இவரு… பாப்பாக்களை

பத்தி பக்குவமா சொல்றாரு…) 



இது எல்லாமே நான் 

எட்டாவது படிச்சி முடிக்கிற வரை..
 
 
அமலா… என்னை விட ரெண்டு வயசு சின்ன பொண்ணு… 

எங்க தெருவில் கணேஷ் னு எனக்கு இன்னொரு பிரெண்ட்… 

அவனோட தங்கை தான் இவ..அவனை பார்க்க அடிக்கடி போக

வர பத்திகிச்சி எனக்குள் காதல் தீ… ( எப்புடிடா உனக்கு 

மட்டும் இப்படி…கொஞ்சம் கூட விவஸ்தையே 

இல்லையா உனக்கு…) அந்த பொண்ணு English medium படிச்சா…

அதனால ஆடுகளம் தாப்சி மாதிரி  


what are you doing here…what do you want னு அவ வாயை

தொறந்தாலே எனக்கு டன் டாணா டர்ணா தான்… 

அப்போவெல்லாம் எனக்கு கொஞ்சம் struck English…

( ஆஹ்…இப்போ மட்டும்..) நல்லா அழகாவே இருப்பா… 

அது ஒரு அழகான சனிக்கிழமை மதியம்.. அவனை பார்க்க

அவன் வீட்டுக்கு போனேன்… நான் 7 th படிச்சிகிட்டு இருந்தேன்னு

நினைக்கிறேன்…அவ 5 th… ( எப்போ தாண்டா நீ வளர்ந்த பிறகு

வந்த காதலை சொல்லுவே…) அவங்க வீட்டில யாருமே

இல்லை…அவளை தவிர… ( நீ பிளான் பண்ணி தாண்டா

போயி இருப்பே…) கணேஷ் இல்லையானு நான் கேட்க… 

என் முன்னால தானே இருக்கான்னு அவ சொல்ல… 

( நல்ல மரியாதை… ) பொதுவாவே பொண்ணுங்க கிட்ட 

நான் மரியாதையை எதிர் பார்க்குறது இல்லை…

( எவளும் கொடுக்கவும் மாட்டா…) அண்ணா னு கூப்பிட்டா 

தான் அப்செட் ஆகிடுவேன்… 

அடடா…பொண்ணு என்ன இன்னைக்கு ஒரு மாதிரியான 

மூடுல இருக்கா னு எனக்குள்ள ஒரு சந்தேகம்…( 12 வயசுல 

10 வயசு பொண்ணோட மூடு உனக்கு தெரியுது…

உன்னை பெத்தாங்களா…இல்லை செஞ்சாங்களா…) அவ அப்படி

மொக்கை போட்டதுக்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கறதுன்னு

தெரியாம… நான் முழிக்க…அவ சிரிச்சிகிட்டே , 

" உள்ள வா…அவன் கடைக்கு போயி இருக்கான்… 

கொஞ்ச நேரத்தில வந்துடுவான்னு" சொன்னா… 

( பரவா இல்லை…பாரபட்சம் இல்லாம இருக்கா…

அவ அண்ணனுக்கும் அதே மரியாதை…)

 
உங்க ஸ்கூல் ல பொண்ணுங்க படிக்கிறாங்களான்னு 

அவ கேட்க.. இல்லைன்னு நான் சொல்ல... அதனால தான்

நீங்க டெய்லி தெருவில நின்னுகிட்டு பொண்ணுங்களை

பார்க்குறீங்களானு கேட்டா…


அட சனியனே அத நீ எப்ப 

பார்த்த னு நினைச்சுகிட்டு அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல 

சும்மா தான் னு நான் சமாளிக்க…  பொய் சொல்லாதடா… 

எனக்கு தெரியும்…நீ என்னை எப்ப பார்த்தாலும் குறுகுறுன்னு

பார்த்துகிட்டே இருப்பே… ( அவன் உன்னை மட்டுமா பார்த்தான்…)

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அம்மு… நீ என் கூட 

விளையாடுவியா னு ஒருவழியா சொல்லி முடிச்சேன்…

( விளையாடவா…) அவ உடனே அப்பா அம்மா விளையாட்டு

மட்டும் வேண்டாம்…எங்க அம்மா அடிப்பாங்க னு சொல்ல.. 

( உஷாரா இருக்காளுங்க…) அப்புறம் நான் உன்கூட என்ன 

விளையாட்டு விளையாட முடியும்…கோலியா…? னு கேட்க

அவ சினுங்கிகிட்டே சீ..பொறுக்கின்னு என்னை அடிக்க அவ 

அண்ணன் கதவை தொறக்க… நான் முழிக்க… டே உன் பிரெண்ட் 

என்ன சொல்றான் தெரியுமா… உன்னை விட இவன் தான் 

கிரிக்கெட் நல்லா விளையாடுவானாம்..நீ வேஸ்டாம் ..

அதான் நான் அவனை அடிக்க போனேன் நீயே வந்துட்ட னு 

அவ சமாளிக்க… அவனும் என்னை துரத்த… தலை தெறிக்க 

ஓடினேன்… ( பொண்ணுங்களுக்கு இயல்பிலேயே அந்த 

சமாளிக்கிற டேலண்ட் வந்துடுமோ…)



ஒரு ரெண்டு வருஷம்…அப்படி இப்படி னு சில பல 

சில்மிஷங்களிலையே காலம் ஓடிடுச்சு…அப்புறம்

அவளை பார்க்கலை…

 
நதியா… இந்த பொண்ணோட வீடு ரெண்டு தெரு தள்ளி

இருந்தது…இவளும் என்னை விட சின்ன பொண்ணு தான்…

( உன் வயசு பொண்ணுங்களையே நீ பார்க்க மாட்டியா…

ஒண்ணு சின்ன பொண்ணு இல்ல பெரிய பொண்ணு…) 

பசங்களோட சொந்தக்கார பொண்ணு வேற..அதுவும் இல்லாம 

அவளோட சித்தப்பா எங்க பெரிய செட்டுல உள்ளவரு… 

அவர் கூட நல்ல பழக்கம்…அதனால ஆரம்பத்தில் அந்த 

பொண்ணு மேல பெரிய அளவுல ஈர்ப்பு இல்ல… 

ரொம்ப நாளா பார்த்துகிட்டு இருந்தாலும்…நாங்க வீடு 

மாறிவர்றதுக்கு ஒரு 3 மாசம் முன்னாடி தான் என்னமோ

உள்ளுக்குள்ள குடஞ்சது..( அவ என்ன வண்டா…) அது ஏனோ

தெரியலை வெளியில பார்க்கிற எந்த பொண்ணை யுமே

சகோதரியா ஏத்துக்க மனசு வரலை… ( அது எப்படி கண்ணா வரும்… 

அக்கா அக்கா னு சொல்லிக்கிட்டு சொக்கா உள்ள கை 

விடுற கும்பல் தானே நீ…) நாங்க பசங்க எல்லாம் 

இருக்கும்போது பொண்ணுங்க எல்லாம் வந்து கலாய்ப்பாளுங்க…

அது அப்படியே போயிடுச்சு…அதுக்கு அப்புறம் அவளை பத்தின 

நினைவு தோணவே இல்லை…( வேற வேற பிகர் கெடச்சிடுச்சே…

அதனால தானே…) இப்போ எங்க இருக்காளோ தெரியலை…

இப்ப கூட பசங்க கிட்ட கேட்டா விவரம் தெரியும்…

ஆனா கூச்சமா இருக்கு… ( யாரு..உனக்கா…)

 
அமலா பால்… எங்க தெரு கடைசியில மாடுகளை வச்சி 

பால் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்த குடும்பம்…

அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் நல்ல பழக்கம்.. 

அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்க…( அந்த பொண்ணை

கூட்டிகிட்டு தானே…) பொண்ணு கொஞ்சம் வாயாடி…

அப்போவே எங்களுக்கு அவகிட்ட பேச பயம்… சடையை பிடிச்சி

இழுத்த ஒரு பையனை செருப்பை சாணியில முக்கி அடிச்சவ…

ஆனாலும் பார்க்கும்போதெல்லாம் வீசிட்டுப்போன அந்த

சிநேகப்புன்னகை வலையை வீசிதான் பாருடா னு என்ன 

உசுப்பேத்துச்சு…( இதெல்லாம் எப்போ 8 வது படிக்கும்போது…

என்ன ஒரு வளர்ச்சி…) வீசுன வலையில் எப்பவாது சிக்குவா…

சிரிப்பா.. சிணுங்குவா…அவ்வளவு தான்..அதுக்கு அப்புறம் வீடு 

மாறி வந்து ஒரு 4 வருஷம் இருக்கும்…அவளுக்கு கல்யாணம்னு

அவ அண்ணனும் அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்து பத்திரிகை

வச்சாங்க…( உனக்கு கன்னி ராசி டா…அதாவது நீ நூல் 
 
விடுற பொண்ணுங்களுக்கு எல்லாம் தாலி கயிறு 


ஏறிடுது கழுத்துல… ) எனக்கோ எந்த விதமான பீலிங்க்ஸ் சும்

தோணலை… ( எப்படி ராஜா தோணும்…அப்போ நீ அமுதா , 

அனிதா வை ஓட்டிகிட்டு இருந்தே சரி தானே…)

எப்படியும் இந்நேரம் மூணு குழந்தைகளுக்கு அம்மாவாகி இருப்பா…


மோகனா… இவ எனக்கு எதிர் வீட்டிலேயே இருந்தா… 

பிகர் சுமாரா தான் இருக்கும்… நான் அது கூட தான் முதன்முதலா

அப்பா , அம்மா விளையாட்டு  விளையாடுனேன்… 




( விளையாட்டுப்பிள்ளை டா நீ…) கொஞ்சம் வளர்ந்த அப்புறம்

அதாவது 5 வதுக்கு அப்புறம்…நான் அவளை கண்டுக்குறது இல்லை…

( 10 வயசு உனக்கு வளர்ச்சி யா…அப்போ எத்தனை வயசில டா

அப்பா , அம்மா விளையாட்டு..? நீ செய்டா..) அவளும் 

ஆரம்பத்தில கொஞ்சம் பிரச்சினை பண்ணிட்டு அமைதியாயிட்டா…

அவ என்னைவிட அதிகம் விஷயம் தெரிஞ்சி வச்சி

இருந்தாங்க…அவளுக்கு 17 வயசுலேயே கல்யாணம் ஆயிடுச்சி…

எவன் மாட்டினானோ… ( உனக்கு ஏண்டா காண்டு..)





தமிழ்ச்செல்வி…  இவ நான் குடி இருந்த ஹவுஸ் ஓனரோட 

அண்ணன் பொண்ணு… லீவ் விட்டா இங்க வந்துடுவா… 

அப்போ அவங்க வேளச்சேரி ல இருந்தாங்க… நான் 

கோயம்பேடு பக்கம்…அவளுக்கு ஒரு அண்ணன் , தம்பி…

அவனுங்களும் எங்க செட் ல தான் இருந்தானுங்க…

ஆறாவது படிக்கும் போதில் இருந்து தாங்க அவ மேல ஒரு

இனம் புரியாத ஈர்ப்பு… எப்படா அவ வருவான்னு ஏங்கி 

காத்துகிடந்த காலம் அது…( தமிழ் மேல பையனுக்கு சின்ன

வயசுல எவ்வளவு ஆர்வம் பாருங்க சார்… தமிழன் டா நீ..)



பொண்ணு நல்ல அழகா சிவப்பா இருப்பா… ( ஏன்..கருப்பா

இருந்தா வேண்டாம்னு சொல்லுவியா…காஞ்சு கிடந்த நாயிக்கு 

கருவாடு கிடச்சா போதாதா… KFC சிக்கனா வேணும்…)

நான் கொஞ்சம் சிரிக்க சிரிக்க பேசுறதால அவளுக்கும் 

என்னை ரொம்ப பிடிச்சிபோச்சு…( சத்தியமா உனக்கு வாய்

இல்லைனா உன்னை நாய் கூட மதிக்காது…) என்னங்க பண்றது…

காற்று னா அது வீசணும்…கணேஷ் னா அவன் பேசணும்…

( ஐயையோ…அடங்க மாட்றானே …) நல்லவேளையா எங்க 

செட் ல இருந்த பசங்க எவனும் அவளை காதலிக்கலை…

( அவனுங்க இன்னும் வளரலை தம்பி…) 

ஒரு நாள் அவ மொட்டை மாடியில துணி காயப்போடும்போது 

பயந்துகிட்டே நான் வீட்டு வாசலில் இருந்து பிளையிங் கிஸ் 

கொடுத்தேன்… ஒரு 12 வயசு இருக்கும்…


 
அவ அதுக்கு அப்புறம் ரெண்டு மூணு நாள் என் 

கூட பேசவே இல்லை…

அப்புறம் அவ சிரிக்க , நான் சிரிக்க ஒரே 

கிளுகிளுப்பு தான் போங்க… 
 
அப்புறம் அவளை ஒரு மூணு வருஷம் கழிச்சி தான் 

மீட் பண்ணேன்… ஹவுஸ் ஒனேரோட முதல் பையனுக்கு 

பொண்ணு பார்க்க போகும்போது…ஆண்கள் எல்லாரும் ஒரு

வேன் ல ஏற..என் அம்மா என்னை அவங்களோட அனுப்பாம

பெண்கள் எல்லாம் போன இன்னொரு வேன் ல அவங்க 

கூடவே ஏற சொன்னாங்க… பசங்களோட இருந்தா எங்க 

நானும் , தம்மு , தண்ணி அடிக்க கத்துப்பேன்னு… 

( பொத்தி பொத்தி வளர்த்ததால தான் இப்படி waste லேன்ட்

( தமிழ்ல சொல்லி பாருங்க..ரைமிங்கா வரும்..) 

டா போயிட்டியா டா…) 
 
குலுக்கி வச்ச coca cola போல இருந்ததால தான் இன்னைக்கு


இந்த மாதிரி பொங்கிகிட்டு இருக்கேன்… அந்த வேன் ல 

டிரைவரும் நானும் தான் ஆண்கள்… நான் செல்வி அக்கா 

பக்கத்தில் உட்கார… அவ எனக்கு எதிர்ல.. வந்தவாசி பக்கத்தில

ஏதோ ஒரு ஊருன்னு நினைக்கிறேன்…அடா…அடா..அடா…

அந்த 6 மணி நேரமும் பார்வையிலேயே பேசிகிட்டோம்…

ரெண்டு பேருமே வயசுக்கு வந்து இருந்தோம்… 

பத்தி எரியுற வயசு…பார்க்க துடிக்குது மனசு… 

( கவிதை…கவிதை…)
 
அங்க போயி எறங்குன உடனே ரெண்டு பேரும்

தனியா வைக்கப்போருக்கு பின்னாடி போயிட்டோம்…

சும்மா பேச தாங்க… ( வாயில தானே…) இந்த மூணு 

வருஷத்தில் நீ என்னை பத்தி நினச்சியானு அவ எதோ 

மொக்கை போட்டுக்கிட்டு இருந்தா… 




ஆடுகளம் தனுஷ் மாதிரி நான் அப்பவே 

" நாம ரெண்டு பேரும் ஒரு கிஸ் அடிச்சிக்கலாமா " னு 

கேட்க அவ கோச்சிகிட்டு போயிட்டா… அதுக்கு அப்புறம் 

அங்க இருந்து திரும்பி வரும்போது அவ பார்வையில

பச்சை மிளகாய் காரம்…


அடி பாவிங்களா.. நான் ஒரே ஒரு முத்தம் கேட்டது

குத்தமா… அவன் அவன் 17 வயசுலேயே பலானது

பலானது எல்லாம் பண்ணிடுறான்…ஹ்ம்ம்…
 
அந்த முத்தம் கேட்டதுக்கு அப்புறம்..கடைசியா அவளை 

அந்த அண்ணனோட கல்யாணத்தில் பார்த்தது…

ஒரு ஆறு மாசம் கழிச்சி…அப்போ அவ கோவமா இல்லை…

நான் ரொம்ப தயக்கத்தோட போயி அவ கிட்ட கேட்டேன்…
 
நான் : என் மேல கோபமா தமிழ்… 

அவ : கோவமா…எதுக்கு… 
 
நான் : இல்ல…அன்னைக்கு முத்தம் கேட்டேன்ல அதான்…
 
அவ :  அதுக்கா…ரொம்ப கோபம் தான்… 
 
நான் : என்ன மன்னிச்சுடு தமிழ்…நானும் எவ்வளவோ கன்ட்ரோல் 

பண்ணேன்…முடியல..அதனால தான் கேட்டேன்… 
 
அவ :  போடா லூசு… நான் எதுக்கு உன் கூட அப்போ

தனியா வந்தேன்… சரியான மக்குடா நீ… கட்டிபுடிச்சி

முத்தம் குடுக்காம…என் கிட்ட போயி பர்மிஷன்

கேட்டுகிட்டு பயந்துகிட்டே நின்னே… அதுக்குள்ளே யாரோ 

வர்ற மாதிரி இருந்தது…அதான் நான் கோபமா போயிட்டேன்…
 
அட..ச்ச…நல்ல சான்ஸ் மிஸ் ஆயிடுச்சே… னு சொல்லிகிட்டே 

அவளை நான் கட்டிபிடிக்க போக…என்னை தள்ளி விட்டுட்டு

சீ..போடா பொறுக்கி னு சொல்லிட்டு ஓடிட்டா… 




என்னாங்கடி உங்க நியாயம்… கேட்டா ஏன் கேக்குறன்னு

சொல்றீங்க… கேக்காம ட்ரை பண்ணா கேனையாக்கிட்டு

கம்பி நீட்றாளுங்க… 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி பசங்க கிட்ட விசாரிச்சதில்

அவளுக்கும் கல்யாணம் ஆகி 2 வயசுல ஒரு குழந்தை

இருக்காம்…நல்லா தானே போயிக்கிட்டு இருந்துச்சி…

வீட்ல மாப்பிள்ளை பார்த்தப்போ ஒண்ணுமே 

சொல்லலையா தமிழ்… ( சொல்லி இருந்தா மட்டும் தூக்கி

கிட்டு வந்து இருப்பியோ...?) நானாவது பசங்க கிட்ட

கேட்டு இருக்கலாம்… புதுசா வந்த பிகர்களால 

அவளை இழந்துட்டேன்… ஹ்ம்ம்…
 
சற்று முன் கிடைத்த தகவல்… 
 
நதியாவை பத்தி கேட்டதுல அவளுக்கும் 

கல்யாணம் ஆகிடுச்சாம்…

முதலில் சொன்ன அமலா இன்னும் கல்யாணம்
 
ஆகாமல் தான் இருக்காளாம்… 




கண்ணா…அடுத்த லட்டு 

திங்க ஆசையா…



No comments: