Wednesday, March 2, 2011

நீதிக்கதைகள்...Part 11

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒரு பையன் தன்னோட அம்மாகிட்ட காதலியை 

அறிமுகப்படுத்தி வச்சானாம்…
 
அம்மா : இவளை நான் மருமகளா ஏத்துக்கறதுக்கு 

ஒரே ஒரு காரணம் சொல்லு…நான் உங்களுக்கு 

கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…
 
பையன் : நான் அவளோடு இருக்கும் போது 

உன்னை மறந்துடுறேன் அம்மா…ஆனா அவள் என் 

மேல காட்டும் அக்கறையை பார்க்கும்போதெல்லாம்

நீ தான்ம்மா ஞாபகம் வர்ற…

 
நீதி : வாயுள்ள பிள்ளை பிழைக்கும்…


பையன் : அப்பா…எனக்கு பிரிட்ஜ்ல  இருந்து ஐஸ் 

வாட்டர் எடுத்து தாப்பா…
 
அப்பா : ஏன்டா…டே..நான் தான் வேலையா இருக்குறேன்ல.. 

நீ வெட்டியா TV தானே பார்க்குற…நீ போயி எடுத்து குடி…
 
பையன் : அப்பா..சீக்கிரம் எடுத்துட்டு வாப்பா…
 
அப்பா : டே ..என்னை வெறுப்பேத்தாதே… இன்னொரு 

தடவை கூப்பிட்ட உன்னை கட்டையாலையே அடிப்பேன்…
 
பையன் : என்ன அடிக்க கட்டை எடுத்துகிட்டு வரும்போது

அப்படியே ஐஸ் வாட்டரும் எடுத்துகிட்டு வாப்பா…
 
நீதி : எத்தனை துன்பம் வந்தாலும் நம் 

இலக்கை அடைய வேண்டும்…





16 வயசுல முதல் முறையா பண்ணும்போது ரத்தமே வந்துடுச்சு…
 
ரெண்டாவது தடவை பண்ணும்போது வலிச்சது…
 
மூணாவது முறை கொஞ்சம் எரிச்சலா இருந்தது…
 
நாலாவது தடவைக்கு அப்புறம் பழக்கமாயிட்டதால

எந்த பிரச்சினையும் இல்லாம ஸ்மூத்தா முடிஞ்சது…
 
இப்போவெல்லாம் வாரத்துக்கு நாலு முறை பண்றேன்…
 
அது என்னமோ தெரியலை…ஷேவ் பண்ணலைனா

சங்கடமா இருக்கு…
 
நீதி : பால் கொழுக்கட்டைனா சும்மா தானா…

ஆஹ்..ஆஹ்..பற்களை கடிக்கிறார் பதிவை படித்தவர்…








ஒரு பையனும்…ஒரு பொண்ணும் தற்கொலை பண்ணிக்க 

போனாங்களாம்… அப்போ அந்த பொண்ணு அழுதாளாம்…

இவன் ஏன்னு கேட்க…அவ சொன்னாளாம்…நானும் என்

தங்கச்சியும் எப்பவுமே ஒண்ணா தான் இருப்போம்…

அவளை நெனச்சா தான் எனக்கு அழுகையா வருதுன்னு

சொன்னாளாம்…உடனே அந்த பையன் தற்கொலை 

பண்ணிக்க வேண்டாம்னு அவளை கூட்டிகிட்டு

போயிட்டானாம்…
 
நீதி : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…

மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…







ரயில் நிலையத்தில்…

பையன் : சார்…டைம் என்ன…
 
அரை கிழம் : ஆமாண்டா…நீ இப்ப டைம் என்னனு கேட்ப…

நானும் சொல்லுவேன்… ட்ரெயின் வரும்…நீயும் என்

கூடவே வருவே…ரெண்டு பெரும் பேசிக்கிட்டே போவோம்…

நீ நான் இறங்குற ஸ்டேஷன்லே இறங்குவே…அங்க என்னை 

கூட்டிகிட்டு போக என் பொண்ணு வந்து இருப்பா…நீங்க ரெண்டு

பேரும் பார்த்துக்குவீங்க…உடனே உங்களுக்குள்ள

காதல் முளைக்கும்…

நீ என் கிட்ட வந்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுவ… 

ஒரு வாட்ச் வாங்க வக்கில்லாதவனுக்கு நான் எப்படி

என் பொண்ணை கட்டி வைக்க முடியும்…
 
நீதி : அட…பாவிங்களா…டைம் கேட்டது ஒரு குத்தமாடா…



No comments: