Thursday, March 17, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 12

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஓசி சரக்கோ…இல்லை உன் காசுல வாங்குன சரக்கோ…

ஒண்ணே ஒண்ணை ஞாபகம் வச்சிக்கோ… 

இந்த போதை நிரந்தரமல்ல…




பேசிக்கொண்டே இருந்தால் உன் போதையை

மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்…

அமைதியாக இருந்து பார் RC யை பற்றி

நீ அறிந்து கொள்வாய்…




ஒரு உண்மையான குடிமகன் சக குடிமகனுக்கு 

கொடுக்கும் சிறந்த பரிசு எது தெரியுமா…? 

அன்போ , அரவணைப்போ , சிரிப்போ எதுவும்

வேண்டாம்… கொஞ்சம் ஊறுகாய் மட்டும்

கொடுத்தால் போதும்…





அன்பு , ஆசை என்பது அடிக்கடி பார்ப்பது அல்ல…

எப்போது நினைத்தாலும் ஈரக்குலையில் ஜில்லுனு 

ஒரு ஜில்லிப்பு வருமே அது தான்…

இது சரக்குக்கும் பொருந்தும்…







சனிக்கிழமைகளில் இழக்க கூடாத விஷயங்கள்…

. பெருமாள் கோவில் தொன்னை பிரசாதம்…
 
. ஆஞ்சநேயர் கோவில் வடை…
 
. ஊருக்கு போகும் வெளியூர் வஞ்சிகளின்

பஸ் ஸ்டாண்ட் தரிசனம்…
 
. சரக்கு உடன் கொஞ்சம் முறுக்கு…



காரணமே இல்லாவிட்டாலும்  உங்களை

குடிக்க சொல்லி தூண்டும் சரக்கே 

உண்மையான சரக்கு… 


 

No comments: