Saturday, January 29, 2011

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 1

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு..

இங்கேயே வாழ்ந்து கொண்டு 

இருப்பவர்களுக்கு மட்டும் வாய்க்கரிசி

தான் போடுமோ..


இலங்கையை எரித்தான் வாயு புத்திரன்.

அதுக்கு பதிலா தான் நம் இன மக்களை

எரிப்பதை வேடிக்கை பார்க்கிறார்களோ 

நம் உத்தம புத்திரர்கள்..



எல்லையை தாண்டி மீன் பிடித்தால்

அது குற்றம்.எல்லாத்தையும் சுருட்டிகிட்டு

இருந்தா மட்டும் தான் உங்க சுற்றம்.

இல்லையா மஞ்சள் துண்டு மன்னா..?



இன்னும் எத்தனை நாளைக்கு தான் 

தந்தி அனுப்பி கிட்டே இருப்பீங்க 

தாத்தா..தமிழர்கள் இனம் அழியும் 

வரையா…?




மனித உயிர்கள் போயிகிட்டு இருக்கே 

கொடநாட்டில் இருந்து இதுக்காச்சும்

குரல் வருமா..வராதா..?



புத்தன் மண்ணில்..யுத்தம் செய்து

ரத்தம் குடிக்கும் ரத்த காட்டேரி ஆட்சி..

தாய் மண்ணில் தன் நாட்டு மக்களையே

தாரை வார்க்கும் தமிழின தலைவர் ஆட்சி..

தமிழன் என்றால் பலி ஆடுகளா..?

No comments: