Saturday, January 29, 2011

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
கடற்படை கழுகுகளே..

எங்கள் மீனவன் உடலிலும் 

செங்குருதி தான் ஓடுகிறது..

எதை எதிர்பார்த்து இப்படி 

எழவு கொட்டுகிறீர்கள்…?





கிரிக்கெட் ல இலங்கை காரன் அடிச்சா 

மட்டும் கூப்பாடு போடுறோம்..

கடல்ல அடிச்சா கம்முனு இருக்குறோம்..

நல்ல தமிழர்கள் நாம்..


எலக்கியம் பேசி எழவு கொட்டும்

இலக்கியவாதிகளே..நீங்கள் உளறுவதை

கேட்பதற்காக வாவது மக்கள் வேண்டாமா .

எதிர்த்து குரல் கொடுப்போம் வாருங்கள்..

எவன் கண்டான்…எலெக்ஷன் நெருங்கி வர்ற 

நேரம்..ஏதாவது நடவடிக்கை எடுத்தாலும்

எடுப்பானுங்க சொரணை இல்லாத 

எருமை மாடுங்க.. அப்புறம் வழக்கம் 

போல.. எங்களால் தான் இது நடந்தது..

நாங்கள் அப்படி செய்தோம்..

நாங்கள் இப்படி செய்தோம் னு 

பெருமை பீத்திக்கலாம்..


படம் ரிலீஸ் ஆகுறதுல பிரச்சினை னா

கொந்தளிக்கிறோம்.. படகுல ல போனவன் 

எல்லாம் பாடை ல போயிகிட்டு

இருக்கான்..

பார்த்துகிட்டு இருக்கோம்..

மானக்கேடு..



அடுத்த நாட்டில் அகதியாய் இருப்பவன்

கூட அமைதியாய் வாழ முடியும்போது..

நம் நாட்டில் மட்டும் தான் குடிமக்கள் 

கொலை செய்யப்படுகிறார்கள் 

குடும்ப அரசியலால்..



கலி முத்தினால் தான் கடவுள் 

வருவார் எனில்..கலைஞர் ஆட்சியிலேயே

வந்து இருக்க வேண்டுமே..?

ஏன்..கடவுள் காணாம போயிட்டாரா..?

No comments: