Saturday, January 29, 2011

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
வங்காள விரிகுடாவில் மீன்கள் 

மிதந்தால் போதாதா..? 

எங்கள் மீனவர்கள் தான் 

மிதக்க வேண்டுமா…??




பிழைப்புக்கு சென்றவர்கள் பிணங்களாகி 

வந்தால் அது தான் தமிழ் உணர்வு

மிக்க தாத்தா ஆட்சி செய்யும் 

தமிழ்நாடு என்று இனி தெரிந்து 

கொள்ளுங்கள்..




மத்தியில் மண் பொம்மைகளும்  ..

மாநிலத்தில்  மதி  இழந்தவர்களும்

அருகில்  அரக்கனும்  ஆண்டு  கொண்டு  

இருக்கும்  நாட்டில்  மனித  உயிர்கள் 

மலிவானது தான்..



தன் கூட்டத்தையே தாரை வார்த்து 

கொடுத்த பெருமை அண்ணாவின் 

தம்பியையே சாரும்.





உடன்பிறப்புகளேனு அவரு கூப்பிடும்போதே 

நினைச்சேன்..இப்படி தான் இவரு

இருப்பாருன்னு..

அரசியல்ல அண்ணனாவது ..

தம்பியாவது..



இத்து னுண்டு இருக்குற இலங்கைக்கே 

இவ்வளவு அதுப்புனா இம்மாம் பெரிய

இந்தியா வுக்கு எவ்வளவு அதுப்பு

இருக்கணும்..கச்சத்தீவு போல 

கடல் மொத்தத்தையும் தாரை 

வார்த்து கொடுக்காம அடங்க 

மாட்டானுங்க போல..

No comments: