Sunday, December 25, 2011

புரிஞ்சுக்கடி பம்ப்ளிமாஸ்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




பொண்ணுங்களை மதிக்கிற நல்லவங்க ஒரு வகை.

போகப்பொருளா மட்டுமே பார்க்கும் கெட்டவங்க 

இன்னொரு வகை னு சொன்னா..

நான் எந்த வகைடி னு கேட்டேன்..

நீ ரொம்ப நல்லவன் டா மூணாவது ஒரு 

வகையை சொல்றா..





நீ எப்பவும் பவுர்ணமி நிலா போல பிரகாசமா இருப்பியா..

அதான் உன் முகம் கொஞ்சம் டல் ஆனதும் பிறை நிலா 

போல தெரியுற..

எப்படி பார்த்தாலும் நீ அழகு தானடி..



உன்னைப்பார்க்காமல் பல வருடங்கள் வாழ முடிந்த 

என்னால், இப்போது நீ இல்லாமல் ஒரு நாள் கூட 

இருக்க முடிவதில்லை..





காதல் வழிய பேசினால் கண்டிக்கிறாய்..

காதலியிடம் வேறு என்ன கந்த புராணம் பற்றியா 

பேச முடியும்..?





கண்டிப்பினில் அன்பை காட்ட அன்னை எனில்,

கண்டிப்பினில் காதலைக் காட்ட என் ஹனி 

நீ மட்டும் தான்டி..



எனைக்குறித்து எதெற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படாதேடா

என்கிறாய்.நானும் இயல்பாய் இருப்பது போல 

நடிக்கிறேன்..உடைந்த என் குரலில் எனைப்புரிந்து 

ஆறுதல் சொல்கிறாய்.. லவ் யூடி ஹனி..





நீ நினைப்பது போல என்னால் காதலுடன் பேச 

முடியாது டா என்கிறாய்..அதனாலென்ன.. 

பரவாயில்லை ஹனி..உனக்கும் சேர்த்து 

நானே காதலித்துவிட்டு போகிறேன்..





ஒவ்வொரு முறையும் உன்னை முத்தமிட எத்தனிக்கும்

போதும் அதில் காமத்தின் அளவை விட காதலின் 

அளவே மேலோங்கி இருக்கிறது..





நான் காமம் கொள்ள ஒரு பெண் இருந்தால் போதும்.

ஆனால் காதல் கொள்ள நீ வேண்டுமடி.

லவ்யூடி ஹனி..





அரை மணி நேர காமத்திற்காக ஆயுள் முழுதும் கிடைக்கும் 

உன் காதலை இழக்க நான் விரும்ப வில்லை.

உன்னை தொடாமல் இருக்கமுடியும்..

ஆனால் உன் பார்வை படாமல்..?

1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

பட்டாசு பாஸ் கவிதை மட்டுமில்லை பிளாக் டிஸ்க்ரிப்சன் கூட ...