Saturday, December 31, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 54

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



போதை அதிகமானா தான்  புலம்பலும் அதிகம் இருக்கும்..

அலப்பறை அதிகம் ஆனா தான் அடி விழும்..

சலம்பாம குடிங்கடா சனியனுங்களா..




சாப்பாட்டில் கலந்திருக்கும் தீயவைகளை வெளிக்கொணர 

சரக்கு செய்யும் உதவியே வாந்தி..# குடிகார நாயிக்கு 

சரக்கு ஒத்துக்குச்சாம்..சாப்பாடு ஒத்துக்கலையாம்..



பெத்தவங்க,பெரியவங்க சொன்ன போது எல்லாம் 

கேட்காதவன் கூட பிடித்த பெண் சொல்லும்போது 

பூம் பூம் மாடு போல ஆட்டுறான்..மண்டையை..




காதல் உணர்வும்,போதை உணர்வும் மட்டும் தான் 

சம்பந்த பட்டவங்கள மட்டுமில்லாம கூட 

இருக்குறவங்களையும் சேர்த்து பத்திக்குது..




அவமானங்களை சேகரிக்கத் தொடங்கு .. 

ஆன்ட்டிகள் ஆட்டோமெடிக்காக மடங்கும்..





சோலோவா உட்காந்து ஸ்காட்ச் அடிக்கிறதை விட,

பசங்களோட சேர்ந்து சலம்பிக்கிட்டு மாடியில உட்காந்து 

மேன்சன் ஹவுஸ் அடிக்கலாம்..




பூந்தோட்டத்துக்கு போயி ரசிக்கிறவனைக் காட்டிலும் 

சாலையோர பூக்களை ரசிப்பவன் எந்த விதத்தில மட்டம்…?




சாந்தி முகூர்த்தம் நடந்து பொண்ணு வாந்தி எடுத்தா

சந்தோஷப்படுறாங்க..பிராந்தி முகூர்த்தம் நடந்து 

பையன் வாந்தி எடுத்தா வண்டை வண்டையா திட்றாங்க




குடல் பெருத்தவன் எல்லாம் குடிகாரனும் இல்ல..

#மிச்சத்தை நீங்களே தேவைக்கு ஏற்ப போட்டுக்குங்கப்பா…




சரக்கு இல்லாம சனிக்கிழமையை தனிக்கிழமையாய் 

மாற்றுவது பிகர் இல்லா பேஷன் டிவி பார்க்குறது போல..

# ஒரு பயனும் இல்ல..




குடிக்கிற பீரும்,குளிர்ந்து போன குடலும் பேசிக்கிற 

ஒரு அற்புதமான மொழி தான் ஏப்பம்..#ஏவ்வ்வ்வ்…

No comments: