Tuesday, December 13, 2011

தேவதை பாஷை..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






நான் எழுதும் எந்தக் கவிதையிலும் உன் 

பெயரை எழுதுவதில்லை..கவிதைக்குள் கவிதை 

அவசியமா என்ன..?



என் நிழல் கூட வெளிச்சத்தில் மட்டுமே என்னுடன் வர,

உயிரில் கலந்த உன் நினைவுகள் மட்டும் நித்திரையிலும் 

நீக்கமற நிறைந்திருக்கிறதடி…


வாய் திறக்காத மொட்டு அழகு தான்..

ஆனால் பூ அதை விட அழகாயிற்றே..

மவுனமாய் இருந்தது போதும்..

பேசு ஹனி ப்ளீஸ்..



உன் அருகாமையும்,ஆறுதலும்,அரவணைப்பும் கிடைக்க 

வேண்டியே வாழ்க்கையில் சில வருத்தங்கள் 

வர வேண்டிக்கொள்கிறேனடி..


 

என் ஞாபகமே உனக்கு இல்லையோ என்ற ஒற்றை வாக்கியத்தில்

என் முழு நாளையும் முழுவதுமாய் ஆக்கிரமிக்கிறாய்..

அதனாலென்ன..வாழ்நாளே உனக்கானது என்றிருக்கையில் 

வார நாள் தானே..


 

சமஸ்கிருதம் தான் தேவ பாஷையாம்..அது சரி..

அப்போ உன் பெயரில் வரும் எழுத்துக்களால் மட்டும் 

ஆனது தேவதை பாஷையோ..?

 

என்னைப்பற்றி எல்லாம் புரிந்தும்,தெரிந்தும் இயல்பாய் 

இருக்கிறாய் நீ..உன்னைப்பற்றி எதுவுமே புரிந்து கொள்ள,

தெரிந்து கொள்ள முடியாமல் புலம்பித்தவிக்கிறேன் நான்..

 

கவலைகளை மறக்க தெரிந்த எனக்கு காதலை மறைக்கவோ,

மறக்கவோ தெரியவில்லை..அடுத்தவர் தருவதை விட,

அன்னை தருவது எப்போதும் ஆனந்தம்..

என் தாயுமானவள் நீ..

 

சிரிப்பினில் என்னை சிதற வைக்கவும்,கண்ணீரில் 

கரைய வைக்கவும்,கொஞ்சலில் குளிர வைக்கவும் 

உன்னால் மட்டும் எப்படி தான் முடிகிறதோ..

ஆச்சர்யமான அற்புதம்டி ஹனி நீ..

 

கவலைகளால் நிரம்பி வழிந்த என் கோப்பையை

காதலால் நிரப்பிய தேவதை ஸ்த்ரீயடி நீ.. 



ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் என்ன..?

தலை முதல் பாதம் வரை காட்டுவேன்..

உன் உதடுகளின் ஒத்தடம் கிடைக்குமெனில்..

No comments: