Monday, December 5, 2011

உன்னால் மட்டும் எப்படி

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


உனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் என்னை

" பத்திரமா இருடா " என்று சொல்ல உன்னால் மட்டும் 

எப்படி முடிகிறதோ..?



எதை எதையோ எழுத நினைத்தாலும் இறுதியில்

உன்னை பற்றியே எழுதி விடுகிறேன்..




நல்லா இருக்கியாடா என்று நீ கேட்பாய் என ஒவ்வொரு 

முறையும் எதிர்பார்க்கிறேன்.நீ நல்லா தான் இருப்பேன்னு 

நான் நம்புறேன் டா னு சொல்லியே நெகிழ வைக்கிறாய்.



பளிங்கு தரையில் உருளும் கோலி குண்டுகளாய் உன் நினைவுகள்..

எதை பிடிப்பது எதை விடுவது என்று என்னுள்  

ஏகப்பட்ட தடுமாற்றம்..



உன்னைப்பற்றி கவிதை எழுத நான் என்றுமே யோசித்ததில்லை..

நான் சுவாசிப்பதே உந்தன் காதலை தானே..


என் ரத்த ஓட்டத்தில் நீந்துகின்றன..

உன் நினைவுகள்..மீன்களாய்..


நீ பேசுவது உண்மையோ,பொய்யோ எனக்கென்ன கவலை…

நீ பேசினா போதாதா..?



நீ இன்றி கூட என்னால் இருந்து விட முடியும்..

ஆனால் நான் இன்றி நீ எப்படி இருப்பாய்..



மனதில் ஏற்பட்ட வெற்றிடத்தால் வெந்து தவிக்கிறேன்..

ஒருமுறை சிரித்து உன் புன்னகையால் 

அதை நிரப்பிவிடேன் ஹனி..



 

நீ கோபமாய் இருந்தால் பெயரிட்டு,நான் கோபமாய் 

இருந்தால் டா,மகிழ்ச்சியில் டியர்,நான் வருத்தத்தில் 

இருந்தால் பேபி.உன் அகராதியில் எனக்கு 

வெவ்வேறு பெயர்கள்..

ஆனால் எனக்கு மட்டும் நீ எப்போதும் ஹனி..

No comments: