Tuesday, December 27, 2011

மிகச் சிறந்தவள் நீ..பம்ப்ளிமாஸ்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





புதிய பேனா வாங்கிய போது எல்லாம் உன் பெயர் 

எழுதி பார்த்தது போய்..இப்போது உன் பெயர் எழுதி 

பார்க்கவே புதிய பேனா வாங்குகிறேன்..

#முத்திடுச்சோ..





ஸ்ரீ ராம ஜெயம் எழுது டா லைப் ல நல்லது நடக்கும்னு 

சொன்னா..நான் உன் பெயர் எழுதி I love you னு 

எழுதுறேன்..இதை விட வேற எந்த நல்லதும் 

எனக்கும் வேணாம்.. னு சொல்லிட்டேன்..




என்னை தவிக்க விட்டு பார்ப்பது உனக்கு ஒரு 

விளையாட்டு..நான் தவித்தால் நீ துடிப்பாய் என 

தெரிந்தும் தவிப்பது போல் நடிக்கிறேன் 

நான் உனக்காக..



சாதாரண நேரங்களை விட உன்னை சமாதானப் படுத்தும் 

போதே என் காதல் அதிகம் வெளிப்படுகிறது என 

தெரிந்தே அடிக்கடி ஊடல் கொள்கிறாயோ..

பம்ப்ளிமாஸ்..





காதலை வெளிப்படுத்துவதில் நான் சிறந்தவன் 

என்றால்,அதை செயலில் காட்டுவதில் நீயே 

மிகச் சிறந்தவள்..லவ் யூடி ஹனி..






ஏன்டா என்னை எதனுடனும் ஒப்பிட மாட்ற என்கிறாய்..

காண்பதைக் காட்டிலும் உணர்வதே சிறந்தது..

என் உயிர் நீ..ஹனி..



கண்களால் பேசி காதல் வளர்த்த நீ..இன்று மவுனமாய் 

இருந்து அதை மரணிக்க செய்வது ஏனோ..? 

பேசு ஹனி..ப்ளீஸ்..





கூடல் பொழுதுகளை விட,உன்னுடனான ஊடல் 

பொழுதுகளே என்னை எப்போதும் உன் நினைவுடன் 

இருக்க செய்கிறது என தெரிந்தே 

சண்டையிடுவாயோ..? பம்ப்ளிமாஸ்..






நீயும் வர மாட்ட..உன் நிழற்படமும் தரமாட்ட..

ஏன்னு கேட்டா நான் எந்நேரமும் உன்னையே 

நினைப்பேன் னு காரணம் சொல்ற..சரி ஹனி..

என் கிட்ட இருக்குற உன் நினைவுகளை 

என்ன பண்ண முடியும்…?





நீ சொல்லும் அத்தனையையும் ஏற்று உன் 

சொல்படி நடக்கிறேன்..ஆனால் உன்னைக்குறித்து 

செய்பவைகளை மட்டும் என் விருப்பத்திற்கு 

விட்டு விடேன்..

1 comment:

அக்கப்போரு said...

அட அட அட ... சொட்டுது ... வடியுது ... ஒழுகுது .... நானு காதல்னு சொல்ல வந்தேன்