Saturday, December 3, 2011

போடி..பம்ப்ளிமாஸ்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





என்னைக்கண்டதும் மிளிரும் உன் விழித்திரையில் 

உன் மனத்திரையை காண்கிறேன்..

மாமன் மேல அம்புட்டு ஆசையா…அடிக்கள்ளி..



உன் விழிகளாலேயே என்னை விழுங்கி விடேன்..

உன் உயிரில் கலந்து உள்ளேயே இருந்து விடுகிறேன்..


நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுப்பதில்லை..

அது என் தவறாய் இருந்தால் என்னை நானே வெறுத்திருப்பேன்..

அது உன் தவறாயிற்றே..



நீ பறித்தால் மரணம் என்று தெரிந்தும் புன்னகைக்கும் 

பூக்களை போலவே,உன் ஸ்பரிசம் பெற்று சிலிர்த்து 

சிலையாகவே உன்னை சீன்டிப்பார்க்கிறேன்..



நீ பேரழகி மட்டுமல்லடி..பெயர் அழகியும் கூட..

உன் பெயர் உச்சரிக்கும்போது உயிர் வரை உற்சாகம்..



உலகம் உருண்டையோ தட்டையா தெரியாது..

ஆனால் என் உலகம் 5 அடி 4 அங்குல உயர 

சற்றே உருளையானது..பம்ப்ளிமாஸ்..



உன் இதழ்கள் பிரியாமல் இருக்கும் மவுனம் அழகு தான்..

ஆனால் பேசாமல் இருந்தால் நாம் பிரிந்து விடுவோம் 

போலேயே..# பேசு ஹனி பேசு…



ரணம் மட்டும் மனிதனின் கண்களுக்கு தெரியுமாறு 

இருந்திருந்தால் நாங்கள் உங்களை காதலித்து இருக்கவே 

மாட்டோம்..# என் கூட சண்டைக்காவது யாராவது 

வாங்க பொண்ணுங்களா..



உன்னைப்புரிந்து கொண்ட எனக்கு உன் கோபமும் 

அன்பாய் தெரிய,உனக்கு மட்டும் ஏனோ என் அன்பும் 

அர்த்தமற்றதாய் தோன்றுகிறது..#போடி..பம்ப்ளிமாஸ்..



எப்போ பாரு எனக்கு மெசேஜ் அனுப்புறியே உனக்கு 

வேலையே இல்லையா என நீ கேட்கிறாய்..பைத்தியக்காரி..

வேற வேலை கிடைக்கும்..ஆனால் நீ..?

No comments: