Friday, December 23, 2011

ஊடல்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நீ சிரிச்சா சிலிர்க்கிற நான்,நீ சைலெண்ட்டா இருந்தா 

ஸ்தம்பிச்சு போயிட மாட்டேனா..? 

பேசுடி பம்ப்ளிமாஸ்..



பெண்கள் மட்டுமே என் தேவை என்றால் யார் 

பின்னே வேண்டுமானாலும் நான் போயிருப்பேன்..

என் தேவை தேவதை நீ மட்டுமே..



என் ஆசைகளாலும்,ஆர்வத்தினாலும் நீ அழ நேரிடும்போது 

எனக்கு நானே அருவெருப்பாய் தெரிகிறேன்..



காதலின் இன்னொரு பரிமாணம் காமம் என்பது என் எண்ணம்..

அன்பு மட்டுமே வேண்டும் என்றால் எனக்கு 

ஒரு நாய்க்குட்டி போதுமே..



சுகம் மட்டுமே பிரதானம் என்றால் வேசி போதுமே..

ஒவ்வொரு கணமும் உன்னை காதலித்து இருக்க

வேண்டாமே..#புரிஞ்சிக்க மாட்றியேடி பம்ப்ளிமாஸ்..



கட்டாயப்படுத்தி காமம் கொள்ள நானென்ன காட்டு 

மிராண்டியா..? இயல்பாய் கூடுவதே இன்பம்..

#எத்தனை காலமெனினும் காத்திருப்பேன்டி  ஹனி..



அவளால தான் சிகரெட்டை விட்டேன்..இப்போ அவளால 

காயப்பட்டு இருக்கும்போது கூட அதை பத்த 

வைக்க மனசு வரலை..



நான் உன்னுடன் பேசாமல் இருப்பது என் ஈகோவினால் அல்ல..

உன் மனதை புரிந்து கொள்ள முடியாத என் 

இயலாமையால் தான்..



ஒருமுறை அழைத்து என்னை திட்டி தீர்த்து விடேன்..

மவுனமாய் இருந்து ஒவ்வொரு கணமும் கொல்வதற்கு 

அது எவ்வளவோ பெட்டர்..



உன் கோபத்தைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியும்..

ஆனால் ஒரு போதும் என் முன்னால் அழுது விடாதே..

உடைந்து போவேன்..



தெரிந்தே செய்த பல தவறுகளை மன்னித்தாய்..

உன் மீதான காதல் வேகத்தில் வெளிப்பட்ட 

வார்த்தைகளுக்கு மட்டும் மன்னிப்பே கிடையாதா..

#ப்ளீஸ் ஹனி..

No comments: