Tuesday, December 6, 2011

ஏன் இப்படி ...52

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





இப்போவெல்லாம் பெண்களை பார்த்து அதிகம் கமெண்ட் 

பண்றது இல்ல..ஆனா கூட இருக்குற நாயிங்க என் மேல 

பழியை போட்டு நீ இப்படி தாண்டா சொல்லி இருப்பேனு 

அவனுங்க கமெண்ட் அடிக்கிறானுங்க.

யோக்கியனுங்களாம்.



INNER WEAR லேசா வெளிய தெரிஞ்சதுக்கே மச்சி..

அயிட்டம் ஒண்ணு போகுது பாரு னு சொல்றானுங்க

பரதேசிங்க..இவனுங்க மத்தியில எப்படி நான் 

நல்லவனா இருக்குறது..?



எல்லாத்துக்கும் USER MANUAL ,INSTRUCTIONS இருக்குறது 

போலவும்..அதை படிக்காம நாம வேணும்னே தப்பு செஞ்ச

மாதிரியும் பேசுறாங்க..# அட..ராமா..



நாம லீவு போட்டா வேகமா ஓடிடுது ..

மத்தவன் லீவு போட்டா அவன் மட்டும் ஜாலியா 

என்ஜாய் பண்ணுவானோனு  பொறாமையா இருக்கு ..




நாம வருத்தப்படுற ஒரு விஷயத்தை சத்தமாக

சொல்லுறவங்க..சந்தோஷப்படக்கூடிய விஷயத்தை

மட்டும் சைலெண்ட்டா சொல்றாங்க..ஏன் இப்படி..




அனுஷ்கா ஆன்ட்டி ஆயிடுச்சி சொல்றவனுங்களை பார்த்தா 

அணிலு ஆக்டிங்க்ல ஆஸ்கார் அவார்டு வாங்கிடுச்சுனு

சொல்றவனுங்களை போல இருக்குது..

ரசனை கெட்ட காமெடி பீசுங்க..




சந்தோஷமா இருந்த பல கணங்களை ஒரு சில நிமிட 

சண்டை போடும்போது மறந்துடுறோம்..அப்புறம் அதே

நினைவாகவே இருக்கு..#காதல் மிருகம் கடிச்சிடிச்சி..
 

முதல் நாள் கேன்ல இருந்த தண்ணியை அடுத்த நாள் 


குடிக்க மாட்றானுங்க .அட பிக்காலிங்களா ..கார்ப்பரேஷன் 

தண்ணியே ஏரி ,அணைகளில் இருந்து சில நாள் கழிச்சி தானே 

உங்க வீட்டுக்கு வருது .





எனக்கு எல்லாம் தெரியும்…எனக்கு மட்டும் தான் தெரியும்..

எனக்கு எப்படி தெரியும்..? இந்த வார்த்தைகளை 

கேட்டாலே எரியுது..அணிலும் ஆக்டிங்கும் போல 

ஒட்டாமலேயே இருக்குறாங்க..


பொறாமையை உள்ளே வச்சிக்கிட்டு பொக்கே 

கொடுக்குறதை விட,உண்மையான சந்தோஷத்தோட 

சின்ன சிரிப்பை கொடுங்க போதும்..

#வெறுமனே வாயால மட்டும் வாழ்த்துறவங்களை

கண்டாலே வெறுப்பாகுது..

No comments: