Wednesday, December 28, 2011

மாத்தி யோசி ..55

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


6 வருஷம் பழக்கப்பட்ட தம்,சரக்கை நிறுத்தவே 
தாவு தீருது..ஆனா எத்தனை வருஷம் படிச்சாலும் 
படிப்பு மட்டும் பிடிக்கவே மாட்டுது..#ச்சீய்..

எனக்கு பிடிச்சவளுக்காக என்னை நான் இப்போ 

கொஞ்சம் மாத்திக்கிட்டேன், நான் மாறாம 

இருக்கும்போதே என்னை காதலிச்சவங்க 

உண்மையிலேயே தேவதைகள் தான்..






WORST எப்பவுமே ஓடி வருமாம்..நல்லது எப்பவுமே 

நடந்து வருமாம்..(ATM ,BILLA 
 
பத்தி சொல்லல..) # அப்போ பலானது..?



வேணும்கிறதை கேட்டு பெறுபவன் வீரன்.

கிடைப்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்பவன் 
 
அடிமை.புலம்பிக்கொண்டே பொறுத்துக் 

கொள்பவன் கோழை#எனக்கு இப்போ உடனே 

ஒரு காதலிவேண்டும்..any honey here..?



நிரம்பி வழியும் காதலுடன் கூடும் காமம்..

இருப்பதாக சொல்லப்படும் இறைவனின் ஒரு

அம்சம்..இறைவன் இல்லைனா இயற்கையோட 

ஸ்பெஷல் அம்சம்னு வச்சுக்கலாம்.




வேணாம்னு சொல்றது பிடிக்காம இல்ல.. 

நமக்குதேவைப்பட்டாலும் அது இன்னொருத்தருக்கு

சொந்தமானதாக இருப்பதாலும் இருக்கலாம்..

இன்னைக்கு கத்துக்கிட்டது..




பொண்ணுங்களை பத்தி பேசாம,அவங்களை 

நினைக்காம இருந்தா தான் வாழ முடியும்னா

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையே எனக்கு வேணாம்..

#COME ON GIRLS..நாம ஜூஜூலிப்பா பண்ணலாம்..






நமக்கு தெரிஞ்ச விஷயமா இருந்தாலும் அதை 

நமக்கு பிடிச்சவங்களை சொல்ல வச்சி 

கேட்குறது சந்தோஷமா தான் இருக்கு..#நான் 

சொல்லிட்டேன்ல ஹனி..இப்போ நீ சொல்லு

பார்க்கலாம் ஐ லவ் யூ..




அவஸ்தைன்னு தெரிஞ்சும் அனுபவிக்க நினைக்கிறது 

காதலா தான் இருக்கும் போல.நான் 

இப்போ ரொம்ப ஆனந்தமா இருக்கேன்..யாராவது 

வந்து எனக்கு அவஸ்தை கொடுங்களேன் ப்ளீஸ்..




எல்லாத்துக்கும் புலம்புறவங்ககிட்ட , அவங்க ஆரம்பிக்கும் 

முன் நாம புலம்பினா அமைதியா ஆயிடுறானுங்க..

#இருங்கடா டே..சூட்சுமத்தை கண்டுபிடிச்சிட்டேன்டா..




யாருக்கும் பிடிக்காத என்னோட சில குணங்களை 

நான் மாத்திக்க கூடாதுன்னு நெனச்சாலும்,

எனக்கு பிடிச்சவங்க என்னை மாத்திடுறாங்க..

#தேங்க்ஸ் தேவதைகளே..

1 comment:

அக்கப்போரு said...

// பொண்ணுங்களை பத்தி பேசாம,அவங்களை

நினைக்காம இருந்தா தான் வாழ முடியும்னா

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையே எனக்கு வேணாம்..

#COME ON GIRLS..நாம ஜூஜூலிப்பா பண்ணலாம்..//

யாராவது வந்தாங்களா