Sunday, December 18, 2011

என் ஆருயிரே நீ...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

இது நான் 2005  ல காலேஜ் படிக்கும் போது எனக்கு 

வரப்போற மனைவியைப் பத்தி எழுதி பஸ்ல பாடிய பாட்டு..

இன்னைக்கு பதிவா போடுறேன்.. 

( ஆனா ட்யூன் சத்தியமா சுட்டது தான்..)




என் ஆருயிரே நீ..
என் கண்கள் காட்டிய காரிகையே..
என் தூயவளே நீ..
என் உயிரை பார்வையில் கொன்றாயே..

என் புன்னகையே நீ..
என் கனவை கலைத்து சென்ற பெண்ணே..
உயிர் காதலியே நீ..
என் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவுகளே..

நீ கோபமாய் பார்த்தாய்..
என் உள்ளம் பற்றி எரிகிறதே..
நீ புன்னகை பூத்தால்..
அது அமைதியாய் அடங்கி போய்விடுமே..

என்னோடு நீ கொண்ட கோபம்..
குழந்தையின் மீது ஒரு தாய் கொண்டது..
நான் எங்கு சென்றாலும்..
என் சொர்க்கம் உந்தன் மடி தானே..

உன் பூ முகம் பார்த்தால்..
என் மனம் இங்கு துள்ளுது குழந்தை போல..
நீ சம்மதம் சொன்னால்..
உன் காலடியில் நான் கிடப்பேனே..

இந்த மவுனம் வேண்டாம்..
என்னை புரிந்து கொள் என் காதலியே..
நீ என்னுடன் இருந்தால்..
இந்த உலகில் வேறேதும் வேண்டாமே..


நீ என்னுடன் பழகினாய்..
நான் முழுவதும் இன்று மாறிவிட்டேன்..
நீ உன்னைத்தந்தால்..
என் உயிரில் வைத்தே பார்த்துக்கொள்வேன்..

விரைவில் உன்னிடம் வருவேன்..
உந்தன் பிரிவு எனக்கு சித்ரவதை..
வந்து உன்னை அடைவேன்..
என் மெக்கா உந்தன்  மனம் தானே..

என் தேவதையே நீ..
உன்னை பார்த்த பின்பு நான் மோட்சம் பெற்றேன்.. 
என் வானவில்லே நீ...
உன் தாவணி தீண்டலில் தீட்சை பெற்றேன்..

என் ரத்த ஓட்டம் நீ..
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் உன்னைக்காண்கிறேன்..
என் சுவாசக்காற்றும் நீ..
இரு நுரையீரல் முழுவதும் உந்தன்  வாசம் வீசுதே.. 



ஏன் பேச மறுக்கிறாய்..
என் நெஞ்சில் காதலின் தீபத்தை ஏற்றி விட்டு..
தலைக்குனிந்து நடக்கிறாய்..
என்னைக்கண்ட வெட்கமா இல்லை தயக்கமா..

நீ என்னோடு பேசிய

முதல் நிமிடம் என்றும் நகராது..
நீ என்னைப்பிரிந்தாலும்..
என் காதல் என்றும் குறையாது..

உன்னைப்பார்த்த நொடி முதல்..

நீ என்னுடன் இரண்டறக் கலந்துவிட்டாய்..
உன் விழிகளைக்கண்டேன்..
நான் பிறந்ததன் அர்த்தம் புரிந்ததடி..

உன் பார்வையில் படவே..

உன் பக்கத்தில் வந்து நிற்கிறேனே..
உன் கை விரல் பட்டால்..
நான் காற்றில் கலந்தே போவேனே..

அல்ஜீப்ரா கூட ..

எனக்குப்புரிந்து விடும் போலிருக்கிறது..
நீ விழிகளால் பேசும்..
இந்த பார்வைகளின் அர்த்தம் புரியவில்லை..

அடி பெண்ணே போதும்..

நீ கண்களால் காதலை வளர்த்து விட்டது..
வாய் திறந்து ஒருமுறை..
சொல்..என் அச்சம் நீங்கி மகிழ்ச்சிக்கொள்வேன்..

1 comment:

சேகர் said...

கடைசீல யார கல்யாணம் பனுநீங்க???