Sunday, December 11, 2011

தன்னிலை மறந்த தூக்கம்.

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



வேறு ஒரு பெண்ணைக் காதலித்து இருந்தால் கவிஞன் 

ஆகி இருப்பேன்..தேவதை உன்னைக் காதலித்ததால் 

புனிதன் ஆகி விட்டேன்..



உனக்கு பிடித்தவர்கள் வரிசையில் நான் இல்லை 

என்றாலும் பரவாயில்லை..எதிரிகள் வரிசையிலாவது 

என்னை ஏற்றுக்கொள்..

உந்தன் அலட்சியமே அதிகம் வலி தருகிறது..




நிழலும்,நகலும் கூட நினைவை விட்டு நீங்க மறுக்கின்றன..

அது நீயாக இருக்கும் பட்சத்தில்..



 

மூங்கிலாய் இருக்கும் என்னுள் உன் நினைவுகள் 

வந்து நுழைந்து இசையாய் மாறி செல்கின்றன..




உன்னைப்பார்த்ததும் என் உணர்வுகளை அடக்கி வைக்கவே 

ஆசை..என்ன செய்ய என்னை இயக்கும் ரிமோட் 

உன்னிடம் அல்லவா உள்ளது..




நீ என்னைத் திருப்பிக் காயப்படுத்தி இருந்தால் கூட நான் 

அழுதிருக்க மாட்டேன்..அமைதியாய் நீ விலகி 

சென்றதே அதிகம் வலிக்குதடி..




கடிதம் எழுத நேரமில்லை என்றால்,உன் கைகளால் தொட்டு 

ஒரு காகிதத்தை அனுப்பு..நான் கண்டு கொள்வேன்..

உன் கைரேகைக் கவிதைகளை..




நீ என்னைக் கலாய்த்து ஓட்டும் சில நிமிடங்களுக்காகவே..

தெரிந்தே தவறுகள் பல செய்கிறேன்..தினம் தினம்..




என்னுடைய விருப்பங்கள் அனைத்தும் உனக்கு 

நகைப்பாய் இருக்கிறது.ஆனால் என் விருப்பமாகிய நீ எனக்கு 

தினம் தினம் திகைப்பாய்..

ஆச்சர்யமான அற்புதம்டி நீ.




எந்த மெத்தையிலும் எனக்கு கிடைக்கவில்லை..

உன் மடியில் கிடைத்த அந்த தன்னிலை மறந்த தூக்கம்.

No comments: