Friday, December 9, 2011

என் க்ளோனிங் நீ

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



உன் கைகளில் இருப்பது விரல்களா இல்லை க்ளோரோபார்மா..

நீ ஒவ்வொரு முறை என் தலை கோதும்போதும் நான் 

உடனே உறங்கி விடுகிறேன்.




ICU வில் இருப்பவனுக்கு ஆக்சிஜன் போல எனக்கு 

உன் கேசத்தின் வாசமே சுவாசம்.




காலையில் நீ சூடி,பின் மாலையில் வாடிய பூக்களில் 

முன்பை விட அதிக வாசம்..

உன் கூந்தலில் இருந்ததாலோ.




ஒரு நிமிடத்தில் நீ என்னை கடந்து சென்று விட்டாய்..

ஒவ்வொரு நொடியும் உன்னையே நினைக்கிறேன்..

#இதற்கு பெயர்தான் காதலா..?




என்னுள் இரண்டறக்கலந்து விட்ட உன் கோபம் கூட 

என் மீது நீ கொண்ட உந்தன் காதலின் வெளிப்பாடு தான் 

என்று எனக்கு தெரியாதா என்ன…?




உன் ஓரவிழிப்பார்வை ஒன்றே கூட்டத்தில் இருக்கும் 

என்னை தனித்து உணர செய்கிறது..




திப்பின்றி இருந்த என்னை மனிதனாக மாற்றியது 

எனக்காக நீ சிந்திய உன் கண்ணீர் மட்டுமே..



என்னை க்ளோனிங் செய்யத்தேவை இல்லை..

எதிரில் தான் நீ இருக்கிறாயே..# நீ வேறு நான் வேறா..?




இரவெல்லாம் நிலவைக்காதலித்து பின் பகலவனுடன் 

கலக்கும் பனித்துளி போல..பார்க்கும் பெண்களை 

எல்லாம் காதலித்தாலும் முடிவில் உன்னிடமே 

வந்து முடிவடைகிறேன்.




என்னுடையவள் நீ என்கிறேன்..

உன்னுடையவள் நான் என்கிறாய்..

நம்முடையது மட்டுமே என்றது காதல்.

No comments: