Sunday, December 4, 2011

ஜோக்கூ....Part 55

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



மாலை வேளையினில் மாடியில் காத்திருந்தேன்..

ஆன்ட்டி அவள் ஆடி மாதத்திற்காக அம்மா வீட்டுக்கு 

சென்றிருப்பதை அறியாமல்.



இரவு என்னை உறங்க தூண்டினாலும்,உன் நினைவு 

என்னை உறங்க விடுவதில்லை...

#மேக்கப் போடாத உன்னை பார்த்தது என் தப்பு தான்..


உன்னைக்காதலிக்கும் காரணத்தை நான் 

யாரிடமும் சொல்வதில்லை..பின் அவர்களும் 

உன்னைக்காதலிக்க தொடங்கிவிட்டால்..

#நான் என்ன சும்மாவா..




வயசுப்பெண்களின் அலட்சியப்பார்வையில் அடிபட்ட என் 

மனதிற்கு அருமையான மருந்து..குழந்தைகள் தரும் 

அந்த ஒற்றைப்பார்வையும்,பூப்போன்ற புன்னகையும்..

#பிகர்கள் மட்டுமே வாழ்க்கைன்னு யார் சொன்னது..



என்னைக்கட்டி அணைத்தது போதும்..விட்டு விடுங்கள்..

செல்லமாய் சிணுங்கும் இமைகள்…கண்களிடம்..

# ஹ்ம்ம்…இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சமாளிக்க..?

No comments: