Wednesday, December 21, 2011

ஐ லவ் யூ ஹனி..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை உன் குரலில் கேட்டுவிட 

தினம் தினம் பகீரதப்பிரயத்தனப்படுகிறேன் நான்..

ஆனால் நீயோ மிக சுலபமாக உன் ஒற்றை சிரிப்பினில் 

அடிக்கடி அதே வார்த்தைகளை என்னை உதிர்க்க வைக்கிறாய்..

லவ் யூடி ஹனி..

 
எல்லோருக்கும் என்னைப்பிடித்திருப்பதன் காரணம் நான் 

உனக்கு பிடித்த நானாய் இருப்பதால் மட்டுமே..

லவ் யூடி ஹனி..

 
நீ என்னை வெறுப்பதாக இருந்தால் தயவு செய்து என்னிடம் 

சொல்லி விடாதே..நீ  என்னை விரும்பவில்லை 

என்பதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியும்..

ஆனால் வெறுப்பதை நிச்சயம் தாங்க முடியாது..

 
உன் கோபமும்,கொஞ்சலும் எனக்கு ஒன்று தான்..

நீ காற்று..நான் பலூன்..நீ குளிர்ந்து இருந்தாலும்,

சூடாக இருந்தாலும் கவலை இல்லை..

நீ இருந்தால் மட்டுமே நான்..


நான் உனக்கு அதிர்ஷ்டம்னு நினைக்கிறியாடா என்ற உன் 

கேள்விக்கு இல்லை என்ற என் பதிலினால் வருத்தப்படுகிறாய்.





வாழ்க்கையில தான் அதிர்ஷ்டம் வரும்..என் வாழ்க்கையே 

நீ தாண்டி ஹனி..



அறிவாளி என்று அனைவரிடமும் பெயரெடுப்பதை விட..

நீ சரியான தத்தி டா என்று உன்னிடம் பெயரெடுக்கவே 

விரும்புகிறது என் மனது..



எப்போ பேசினாலும் ஏன்டா ஐ லவ் யூ சொல்லிக்கிட்டே 

இருக்கேன்னு கேட்குறா..என்ன பண்ண. பொய் யை எத்தனை 

விதமா வேணும்னாலும் சொல்லலாம்..

ஆனா உண்மையை ஒரே விதமா தானே சொல்ல முடியும்..



முகம் பார்த்து மனதை அறிபவர்கள் மத்தியில் என் குரல் 

கேட்டே உள்ளம் அறிபவள் நீ மட்டுமே..

லவ் யூடி ஹனி..



மழலையைக் கண்டால் மகிழ்கிறேன் நான் என்கிறாய்..

நீ மகிழ்வதை நினைத்து மகிழ்கிறேன் நான் என்றேன்.

புன்னகைத்தாய்..புரியாமல் நிற்கிறேன்..



என் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் நீ தவிக்கிறாய்.

என்றேனும் ஒரு நாள் என்னை ஏற்றுக்கொள்வாய் என 

நினைத்தே துடிக்கும் என் இதயத்திடம் எப்படி சொல்வேன்

உன் நிலையை..

No comments: