Wednesday, December 7, 2011

சிலிர்க்க வைக்கும் சின்ட்ரெல்லா

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க







நிமிடங்களில் முடிவதில்லை வாழ்க்கை...

ஆனால்  என் வாழ்க்கை முழுவதும் உன்னுடனான 

நிமிடங்களால் மட்டுமே நிறைந்தது..




நீ என்னை பிரிந்து செல்வாயோ என்று நான் பயப்படவில்லை..

என்னை புரிந்து கொள்ளாமலே போய் விடுவாயோ 

என்றே கவலைப்படுகிறேன்.



நான் தூங்கிக்கொண்டே சொர்க்கத்தை கண்டது,

என் அன்னை மடியிலும்,உந்தன் அரவணைப்பிலுமே..




உன்னுடனான காதலுக்கு பிறகு எனக்கு ஒவ்வொரு 

நாளும் பண்டிகையே..

# சிலிர்க்க வைக்கும் சின்ட்ரெல்லா..



என்னை தனியாக விட்டு போகாதே,என்னைக்கொஞ்சம் தனியாக

இருக்க விடு..இந்த வார்த்தைகளை நீ சொல்லும் 

ஒவ்வொரு முறையும் என் கண்களில் கண்ணீர்.




உன்னுடன் சிரித்து பேசிய தருணங்களை விட,

நீ அழுத கணங்களே என்னுள் ரணமாய்..


மற்றவரிடம் வாதிட்டு வெற்றி பெறும்போது கிடைக்காத 

மகிழ்ச்சி உன்னிடம் உளறிக்கொட்டி சிக்கி

வாங்கிக்கட்டிக்கொள்ளும்போது கிடைக்கிறது..


 

வாய் திறக்காத மொட்டு அழகு தான்..

ஆனால் அதை விட பூ அழகாயிற்றே..

மவுனமாய் இருந்தது போதும்..பேசு ஹனி ப்ளீஸ்..


 

தனக்கான மழையை தானே உருவாக்கி நனையும் 

கடலைப்போல , உனக்கான கவிதையை என் 

வழியே நீயே உருவாக்கி பின் உருகுகிறாய்..


 

எப்போதாவது மட்டுமே நீ உன்னை மறந்து பேசுகிறாய்..

வழக்கம் போல உன் தேன் குரலில் உருகி அதை 

மட்டும் தவற விடுகிறேன் நான்..

No comments: