Saturday, December 17, 2011

இனிக்கும் பெயர்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




பாலைவனத்தில் அலைந்து களைத்தவனுக்கு நீர் போல,

வேலையில் உழைத்து களைத்த  எனக்கு நீ மட்டுமே 

தேவையென உணர்ந்து,குறிப்பறிந்து தீர்த்து வைப்பதில் 

அன்னைக்கு நிகர் நீயடி..


என்னுடனான உந்தன் அத்தனை தயக்கங்களுக்கும் காரணம் 

நிச்சயமாய் நீ அல்ல..உனக்கு அந்த நம்பிக்கையை 

தராத நானும்,சரியாய் வெளிப்படுத்தாத என் காதலும் தான்..

# Do You Want More Emotion..?




நீ என்னை சிறிது கோபப்படுத்தினாலே ஊடல் 

கொள்கிறேன் நான்..என்னால் நீ எத்தனை 

காயப்பட்டாலும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள 

உன்னால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ..

என் ஏஞ்சல்டி நீ..



உன் மீதான என் காதலை வார்த்தைகளில் வெளிப்படுத்தி 

உன்னை வசப்படுத்துகிறேன் நான்..ஆனால் நீயோ அதை 

செயல்களில் காட்டி என்னை சிலிர்க்க வைக்கிறாய்..

லவ் யூ ஹனி..



தன்னிடம் எதைக்கொடுத்தாலும் தன்னையே திருப்பிக்கொடுக்கும்

தீயைப்போல..நீ என்னிடம் அன்பு,கோபம்,கொஞ்சல்,எரிச்சல், 

துன்பம் என எதைக்கொடுத்தாலும் என் காதலை மட்டுமே 

உனக்குத் திருப்பித் தருவேன்..லவ் யூ ஹனி..



தவறுகள் செய்து நான் தடுமாறி நிற்கும் ஒவ்வொரு 

முறையும் மன்னிப்புத்தந்தே என்னை மலைக்க

வைக்கிறாய்..உடலெங்கும் ஓடும் ரத்தம் உன் இதயத்தில் 

நுழைந்து வெளியேறும்போது மட்டும் தேனாய் மாறி விடுமோ..?



நான் செய்யும் தவறுகளுக்கு தண்டனையை நீயே

அனுபவிக்கிறாய்..உனக்கு என் காதலை தவிர வேறு 

என்ன நான் தந்து விட முடியும்.. லவ் யூடி பம்ப்ளிமாஸ்..



என் கவிதைகள் அனைத்தும் வெறும் கற்பனை வார்த்தைகள் 

அல்ல..என் கண்ணீர் துளிகள் என்று நீ உணர்ந்தாலே 

போதுமடி எனக்கு..

 
ஆங்கிலத்தில் உன் பெயரை எழுதினேன் ..

கொம்புத்தேனாய் இனித்தது ..

தமிழில்  உன் பெயரை எழுதினேன் ..

மலைத்தேனாய் இனிக்கிறது ..

மொழிகள் எதுவாய் இருப்பினும் உன் பெயரின் 

இனிமை குறைவதேயில்லை ..லவ் யூடி ஹனி..

 
என் மீதான உந்தன் காதலை உன் கண்களில் மறைத்து வைக்கிறாய்.

நான் பார்த்துவிடக்கூடாதென கண்களை மூடுகிறாய்.

பைத்தியக்காரி..அது கண்ணீராக உருண்டு உன்னை 

காட்டிக்கொடுத்து விடுகிறது..

1 comment:

rishvan said...

ந்ல்ல கவிதை..... நல்ல முயற்சி....

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...