Friday, April 29, 2011

விளம்பர இடைவேளை..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
படங்கள் மின்னஞ்சலில் வந்தது..

அதோட என்னோட வழக்கமான குசும்பையும் சேர்த்து.. 

இதோ உங்களுக்காக..


இவங்க வாழ்வில் மட்டும் தான் இனி மலரும்.. 

காலம் போற வயசுல மக்களுக்கு பால் ஊத்திட்டு

கெழவனுக்கு காப்பி ஒரு கேடா..  

அக்காவும் , தங்கச்சி அக்காவும்.. 

ரெண்டையும் பார்த்தா குருவாயூர் கோவில்ல அலங்காரம் 

பண்ண அந்த யானைகள் ஞாபகம்  வருவதை தவிர்க்க முடியலை..

 
இவரு பேரு தான் மரு.டோமதாஸ். 

மரங்களை வெட்டி பேர் பெற்றவர் மரம் நட சொல்றாருப்பா..

 எவன் ஆட்சி வந்தாலும் என் புள்ளைக்கு மந்திரி பதவின்னு 

நல்லா வித்தை காட்டுவாரு..இந்த பொழப்புக்கு கவுரவமா 

வெள்ளை கலரு வட்ட மாத்திரை கொடுத்து பொழைக்கலாம்..

பொட்டிக்கடைல கடன் சொன்னது..

பீடியை திருடிக் குடிச்சது..சந்தையில கருப்பட்டியை 

நக்கிட்டு ஓடுனதுன்னு எல்லா கும்பலும் " கை " கோர்த்து 

இருக்குற இடம்.. எவன் எந்திரிச்சாலும் வேட்டியை உருவ 

ஒரு கும்பலே காத்திருக்கும்..


நம்ம ஊருல ஒலக அரசியல் தெரிஞ்ச ஒரே ஆள்.. 

ரோமாபுரியிலே , எகிப்திலே , மூத்திர சந்திலேன்னு இவர் வாய்

தொறந்து பேச ஆரம்பிச்சாலே அவன் அவனுக்கு 

அர்ஜென்ட்டா வந்துடும்..பேசி பேசி வீணாப்போன வீரர்..


இவரை தெரியாதா..

இவர் தாங்க விக்கி லீக்ஸ் அசாஞ்சேவுக்கு குரு.. 

டைட்டானிக் கப்பலை கவிழ்த்ததே கலைஞரும் 

அவாளோட கூட்டணிக்கட்சிகளும்னு கண்டுபிடிச்ச 

அரசியல் டூமா கோலி இவர் தானே..


ஓ..இவர் நம்ம ஊரு அரசியல்வியாதியா..

அது சரி எவன் தும்மினாலும் இவங்க தானே கர்சீப் மாதிரி 

அசிங்கமாகி நிக்கிறாங்க..தனக்கென இருந்த 

தனித்தன்மையை இழந்துட்டு இன்னைக்கு கை ஏந்தி நிக்கிற 

கேவலமான நிலைமை..


ஹே..இவரை பத்தி தெளிவா தெரியணும்னா நீ 

பாகிஸ்தான் தீவிரவாதிகளை தான் போய் கேட்கணும்..

கப்பல்ல இருந்தா மட்டும் கேப்டன் இல்லடா..

கருப்பா இருந்தாலும் கேப்டன் தான்டா.. 

குடி குடியை கெடுக்கும்னு சொன்னது.. 

குடும்பம் இருந்தா குடிக்க முடியாது 

அப்படிங்கற அர்த்தத்தில..

பிரம்மச்சாரியா இருங்க..போதையில குளிங்க..

2 comments:

பிசாசு said...

பிருச்சுட்டேள் போங்கோ..

பிசாசு said...

பிருச்சுட்டேள் போங்கோ..