Monday, April 25, 2011

ஜோக்கூ..Part 33 ( sarakku ஸ்பெஷல்..7 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

இதயத்துடிப்பு நின்றால் மட்டும் மரணம் இல்லை…

இதழ்களில் உன்னை ஏந்தாமல் விட்டாலும் 

எனக்கு மரணம் தான்…






மலரை தேடி வரும் வண்டு போல,

மண்ணை தேடி வரும் மழையை போல,

சனிக்கிழமை ஆனால் நானும் சரக்கை

தேடி போகிறேன்… 




அமலாபாலை யே ரசிக்க தெரியாமல் இருந்த நான் 

இன்று ஆயாவை கூட ரசிக்க கற்று கொண்டேன்…

 உந்தன் உதவியால்… 




உன் ருசியை உணர என்னிடம் நாக்கு உண்டு… 

ஆனால் என் அன்பை காட்ட என்னிடம்

காசு இல்லையே…



உன் வாசம் மட்டும் இருந்தால் போதும்… 

பாசம் இல்லாத மனிதர்கள் நிறைந்த இந்த உலகில்…





கண்கள் கண்ணீரை காட்டவில்லை..

முகம் ஏமாற்றத்தை பிரதிபலிக்கவில்லை..

ஆனால் என் குடல்கள் மட்டும் குமுறுகிறது..

உன்னை காணாமல்...





போதையின் முதல் எதிரி வாய் தான்..

மனதில் மறைத்ததை மப்பில் உளறிவிடும்.

மாவுக்கட்டையால் மண்டை பிளந்து விடும்..





நீ தந்த போதையை என் உடலில் 

பத்திரமாக வைத்து இருந்தேன்..


பின்பு தான் தெரிந்தது..


உன் போதை தான் என் உடலை 


பத்திரமாக வைத்து இருந்தது


என்று..ஆடிட்டிங்க்ல அடி கொஞ்சம்

அதிகம் தானோ..


No comments: