Thursday, April 14, 2011

நான் ஏன் இப்படி ஆனேன்..?

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
எனக்கு பேராசை எல்லாம் இல்லை பெண்ணே..

உன் பெயருக்கு பின்னால் என் பெயர் இணைத்திடும்

பெயராசை மட்டும் தான்..



தர்க்கம் செய்து வருத்தமடைய செய்கிறாய்.. 

கொஞ்சி பேசி சொர்க்கத்தையும் காட்டுகிறாய்..

முரண்பாடுகளின் மூட்டையாடி நீ..




உளிகளை விடவும் உன் விழிகளே மிகவும் 

ஆபத்தான ஆயுதம்.. ஊடுருவும் பார்வை..

என் உடலெங்கும் வேர்வை..




நேரத்திற்கு பேருந்து வராதா என தவிக்கிறாய் நீ.. 

வந்துவிடுமோ என்று தவிக்கிறேன் நான்.. 

இருவருக்குமிடையில் தவிக்கிறது காதல்..




நிலவை காட்டி அனைவரும் சோறு 

ஊட்டும்போது நான் மட்டுமே நிலவுக்கே 

சோறு ஊட்டுகிறேன்..

நீ மருதாணி வைத்திருக்கும்போது..





No comments: