Friday, April 15, 2011

ஜோக்கூ...Part 32

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
காதலிப்பவர்கள் எல்லாரையும் 

எதிர்த்து எல்லாவற்றையும் 

இழக்கிறார்கள்  காதலுக்காக..

ஏனோ சில்லறை விஷயங்களுக்காக

சில சமயங்களில் காதலையும்..




பூக்களை பறித்து தான் அதன் அழகை 

ரசிக்க வேண்டுமா என்ன..

செடியில் வைத்தே  ரசிக்கலாமே..

காதல் தான் செய்ய வேண்டுமா என்ன..

கண் குளிர கண்டு ரசிக்கலாமே..

அதான் எவளும் என்ன காதலிக்க

மாட்றாளே ..என்ன பண்றது..




அழகான உன்னை தொட

ஆசைப்பட்டேன்..தொட்டதும் 

தொலைந்து போனேன்..

கையை பிடிச்சதுக்கே கல்யாணம்

பண்ணி வச்சிட்டானுன்களே..

வடைக்கு ஆசைப்பட்டு என் 

வாழ்க்கையே போச்சே..



ஒரு பிகரை பிக்கப் பண்ண நான் பட்ட 


கஷ்டம் சொல்லி மாளாது..

உஷார் ஆனதுக்கு அப்புறம் அவ

கொடுக்கும் குடைச்சல் என் ஆத்மா

தாங்காது..நையு..நையுனு 

நச்சரிக்கிறாளே..




எல்லா பெண்களையும் ரசித்து பார்த்த

நான் உன்னை மட்டும் நேசித்து பார்க்க 

என்ன காரணமோ..? 

டாக்டர் கிட்ட போகணுமா இல்லை 

தர்காவுக்கு போகணுமா..



உங்கள் பொழுது போக்கிற்கு 

இனி காதலிக்காதீர்கள்..

என்னால் பாரம் தாங்க முடியவில்லை.. 

சுடுகாடு..

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்....
தொடருங்கள்..