Tuesday, April 19, 2011

3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…Part 7

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
முஸ்லிம் வீட்டு முயலுக்கு நூல் விட
 
போயி நொந்து நூடுல்ஸ் ஆன கதை..




மனிதர்களுக்கு ஏற்படும் உணர்வுகளிலேயே
 
விவரிக்க முடியாத உணர்வு காதல்..



தொடர்ந்து பிளாஷ் பேக் ஓட்டியதால ஒரு மாதிரி 

ஆகி போச்சு..( எங்களுக்கும் தான் மவனே..) 

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ஓவர் சோகம்..

அதனால தான் இந்த இடைவெளி.. 

இப்போ மறுபடியும் கொசுவர்த்தி சுத்த வேண்டியதுதான்.. 

இந்த பதிவுல நான் சொல்ல போறது பாத்திமா வை பத்தி..

என் வாழ்க்கையில வந்த ஒரே முஸ்லிம் பொண்ணு..

( எனக்கு தெரியும்டா..அவங்க கிட்ட மாட்டின 

ல்யாணத்துக்கு முன்னாடி இன்னொரு கல்யாணம்

பண்ணுவாங்களே..அதை நினைச்சி தானே உனக்கு பயம்..) 

அது என்னமோ எங்க ஏரியா வில முஸ்லிம் வீட்டுல எல்லாம் 

பசங்க தான் அதிகமா இருக்கானுங்க..

( அதானே பார்த்தேன்..பொண்ணு கொடுத்தா தான் நீ 

எல்லாத்துக்கும் துணிவியே..)




நான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் சமயம்..

அந்த ஏரியாவுக்கு வந்து 4 , 5 வருஷம் ஆயிருந்தாலும் எங்க 

தெருவில இருந்த சில பொண்ணுங்களை நான் பார்த்ததே இல்லை..

( ஐயோ..ஐயோ..இது தானே டா எட்டாவது அதிசயம்..) 

எங்க ஏரியா வில கார்பொரேஷன் தண்ணி ஒரு நாள் விட்டு 

ஒரு நாள் அடி பம்ப் வழியா வீட்டுக்கு வீடு வரும்.. குடிக்க , 

குளிக்க எல்லாத்துக்கும் அது தான்..

சென்னை ல தான் கிணறு வெட்டுனா பூதம் கூட வந்துடும் 

தண்ணி வராதே.. அதனால் தண்ணி வர்ற அந்த நேரம் ஒரே

களேபரமா இருக்கும்..பக்கத்து தெருவில இருந்து எல்லாம் 

தண்ணி பிடிக்க வருவாங்க..

( நீ ஜொள்ளு விட்டுகிட்டே இருந்தே அப்படி தானே..)



அப்படி தான் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஹாலிடேவில 

அவளை பார்த்தேன்..என் வீடு மாடியில தனி வீடு..

first floor ல ரெண்டு வீடு..ground fllor ல ஒனேர்..எங்க வீட்டு 

தண்ணி தேவைகள் எல்லாம் கொஞ்ச நேரத்திலேயே முடிஞ்சுடும்.. 

நான் குடிக்க மட்டும் தண்ணி அடிச்சி ( குடத்தில ) மாடிக்கு 

கொண்டு போவேன்..பனியன் லுங்கி யோட ஆர்ம்ஸ் காட்டிகிட்டு

அடி பம்புல தண்ணி அடிச்சி கிட்டு இருந்தேன்..

( ஆமாம்..இவரு பெரிய அர்னால்டு..) தெருவை ஒட்டியே

எங்க காம்பவுண்டு..காம்பவுண்டை ஒட்டி அடி பம்பு..so தெருவில 

போற வர்ற எல்லாரையும் நல்லா பார்க்கலாம்..

( இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..)


இடது கையை காம்பவுண்டு மேல வச்சி சாஞ்சுகிட்டே 

ஒரு கையால அடிச்சி கிட்டு இருந்தேன்..

அடி பம்பை..( ஏன்டா நாயே..எதையுமே சிங்கிள் மீனிங் ல 

சொல்ல மாட்டியா..) ஐயையோ.. நான் கார்பொரேஷன் 

காரன் போட்ட குழாயை சொன்னேன்..

எங்க வீட்டுக்கு எதிர்ல ஒரு தள்ளு வண்டி நிறுத்தி இருந்தது..

மதியம் 1.30 மணிக்கு ஒரு பவுர்ணமியை பார்த்தேன்..

ஆமாங்க அவ தெருவில நடந்து வந்தா..

( யம்மா..யம்மா..யம்மா..யப்பா..யப்பா..யப்பா..) மெரூன் கலர்

பாவாடை , ஜாக்கெட் , மஞ்சள் கலர் தாவணி கட்டிக்கிட்டு

ஒத்த சடை போட்டு ஒய்யாரமா அவ நடந்து வர..

நான் அப்படியே குளிர்ச்சி தாங்காம கொஞ்சம் கொஞ்சமா 

உறைய ஆரம்பிச்சேன்..( ஏப்ரல் மாசம் மதியம் 1.30 மணிக்கு

குளிரா..கடவுளே..) பொதுவா பாவாடை தாவணி போட்டா 

சுமார் மூஞ்சி பொண்ணுங்க கூட சூப்பரா தெரியும்..

ஒரு தேவதை தாவணி கட்டி வந்தா கேட்கவா வேணும்..


( டே..விட்ருடா..முடியலை..) அவ அழகு எங்க 

தெருவையே தேவலோகமா மாத்திகிட்டு இருந்தது.. 

அவ அப்படியே நடந்து வந்து அந்த வண்டியில துள்ளி 

ஏறி உட்காந்தா.. அதை பார்த்ததும் எனக்கு புள்ளிமான் 

ரெண்டு கால்ல துள்ளின மாதிரி தோனுச்சு..

( சத்தியமா..நீ நிறுத்த போறதில்லை..கண்டினியு..)





நான் அப்போ தான் அவளை முதல் முறையா பார்க்குறேன்..

குஷி ஜோதிகா போல அவ அந்த சர்ச்சைக்குரிய பகுதியை காட்ட..



நான் முதல் முறையா ஒரு பொண்ணோட இடுப்பை 2 மீட்டர்

இடைவெளில நேர்ல பார்க்குறேன்..சும்மா சொல்ல கூடாது..

வோட்காவையும் , fanta வையும் மிக்ஸ் பண்ணா ஒரு கலர்

வருமே..அந்த கலர்ல இருந்தது..

(நல்லவேளை , எங்க எலுமிச்சை பழம் , மஞ்சள் தூள் னு

சொல்லுவியோன்னு பார்த்தேன்..நீ என் ஜாதி டா..)


பார்க்கவும் முடியாம , தலை குனியவும் முடியாம நான் தவிக்க..

என் தவிப்பை கவனிச்சிட்டா..என்னை பார்த்து சிரிச்சுகிட்டே


தாவணியை சரி பண்ணி கவர் பண்ணிட்டா..

அப்போ தான் எனக்குள்ள அடிச்சிகிட்டு இருந்த புயல் ஓய்ந்தது.. 

அவ வேணும்னே வந்து உட்காந்த மாதிரி தான் தெரிஞ்சது..

எங்க தெரு வில இருந்த ஒரே நல்ல பையன் நான் தான்..

( நீ பேசு மவனே..இந்த வார்த்தைக்கு எத்தனை பேர் கிட்ட

இருந்து கண்டனம் வரப்போகுதோ..) அதனால என்னை பத்தி 

யாராவது அவ கிட்ட சொல்லி இருப்பாங்கனு நினைக்கிறேன்..

என்னை சோதிச்சி பார்க்க வந்துட்டா போல..

( ஆமாம்..இவரு விசுவாமித்திரர்..அந்த பொண்ணு மேனகா..

ஏண்டா சாவடிக்கிற..)


 
தெருவில ஆள் நடமாட்டமே இல்ல..( கூட்டமா இருக்கும்னு

சொன்னே..) அது தண்ணி நிக்கப்போற நேரம்..எல்லாரும் 

ஏற்கனவே வந்து போயிட்டாங்க..சுப்ரமணியபுரம் சுவாதி போல 

அவ அங்க இருந்து அவ காம்பவுண்டுல இருந்த இன்னொரு 

பொண்ணை கூப்பிட்டா..எங்க ஒனேருக்கு ஒரு பொண்ணு..

அவங்க பேரு அம்பிகா..அவங்களும் வெளியில வர 3 பேரும்

பேசிக்கிட்டு இருந்தாளுங்க.. நானும் அந்த 4 குடம் தண்ணியை

எவ்வளவு நேரம் தான் அடிக்கிறது..

( நாலு பாட்டில் பீர் னா எவ்வளவு நேரம் வேணும்னாலும் 

அடிச்சி இருப்பே..) நடுவுல என்ன பத்தி சொல்லி ஏதோ கலாய்க்க 

அம்பி அக்கா எனக்கு சப்போர்ட் பண்ண.. நான் அப்படியே 

குடத்தை தூக்கி கிட்டு தெரு வழியா மாடி ஏற போனேன்.. 

காம்பவுண்டு குள்ள இருந்த வரைக்கும் ஓரக்கண்ணில 

பார்த்துகிட்டு இருந்த நான்..தெருவுக்கு வந்ததும் அந்த 

பக்கம் பார்க்காமலேயே நடக்க..( நெசமாத்தான் சொல்றியா..?) 

தெருவில இமேஜ் ரொம்ப முக்கியம் இல்ல..

உடனே அவ “ அம்பி அக்கா..ஒத்துக்குறேன்..கணேஷ் ரொம்ப 

நல்ல பையன் தான்..ரெண்டு பொண்ணுங்க உட்காந்து

இருக்கோம்..திரும்பாம போறாரு” னு சொல்ல..அட..என் 

பேரு இவளுக்கு எப்படி தெரியும் னு யோசிச்சி கிட்டே நான் படி ஏற.. 

அம்பி அக்காவோ “நான் தான் சொன்னேன் ல.. அவன் நல்லவன் டி” 

னு சொல்லவும்..நான் பறக்குற மாதிரியே ஒரு பீலிங்கு..


3 வது குடத்தை தூக்கிட்டு போகும்போது தான் நிமிர்ந்து 

அவள் முகத்தை பார்த்தேன்..( அட சனியனே..அப்போ 

ஓரக்கண்ணில எதைடா பார்த்தே..நான் நெனச்சேன்

டா..நீயாவது..நல்லவனாவது..) மைதா மாவுல செஞ்ச pizza போல

முகம்.டொமேட்டோ சாஸ் டிசைன் மாதிரி உதடுகள்..சீஸ் போல

கன்னம்..கோலா உருண்டை போல கண்கள்..காட்பரி சாக்லேட் கவர்

போல புருவம்..கோன் குல்பி போல மூக்கு..

( திருந்த மாட்டே..நீ திருந்த மாட்டே..திங்கிறதும் , 

பொண்ணுங்களை தொங்குறதுமே உனக்கு பொழப்பா போச்சு..) 



மொத்தத்தில ரகளையான ரெஸ்டாரன்ட் போல இருந்தா..

அவ மட்டும் என்னை பார்த்துட்டா..ஒரு சிரிப்பு..முடிஞ்சேன்

நான்..அதுக்கு அப்புறம் மாடியில இருந்து நான் அவளை பார்க்க..

அவ அப்படியே அவங்களோட பேசிகிட்டே லுக்கு விட அடடடா..

சூப்பர் ஸ்டார் படத்துக்கு பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ டிக்கெட்

கிடச்சா எவ்வளவு சந்தோஷப்படுவமோ அப்படி இருந்துச்சு..



So ,இந்த பொண்ணு என் தெருவில தான் இருக்கா..என்னை 

பார்த்து இருக்கா..அடுத்து என்ன..பசங்க கிட்ட details கேட்கணும்.. 

அன்னைக்கு சாயங்காலமே பசங்க கூட உட்காந்து பேசிகிட்டு 

இருக்கும்போது அவளை பத்தி ஒரு பையன் கிட்ட கேட்டேன்..

என் பக்கத்து வீட்டுல நரேஷ்னு ஒரு பையன்..என்னை விட 

ரெண்டு மூணு வயசு சின்னவன்..அந்த நாயிகிட்ட தான்

கேட்டேன்..அதுவும் எப்படி..நேரடியா கேட்டா ஓட்ட

ஆரம்பிச்சிடுவானுங்கனு..



நானு -  டே..நரேஷே..நம்ம தெருவில மொத்தம்

எத்தனை பொண்ணுங்கடா காலேஜ் படிக்குது..

அவன் - ஏன் கேட்குற..

நானு - இல்லடா நேத்து ஒரு பொண்ணை நம்ம தெருவில

முதல்முறையா பார்த்தேன்..அதாண்டா கேட்டேன்..

அவன் -  யாரு..

நானு – அதோ அந்தகாம்பவுண்டு தாண்டா..

அவன் - அந்த பொண்ணா..அவ பேரு கற்பகம்..

அது ஓவரா சீன போடுமே..

நானு – அடச்சி..அந்த விடியா மூஞ்சிய தெரியும்டா.. 

மூஞ்சிக்கு 3 தடவை சோப்பு போட்டு கழுவி 3 ரூபா fair & lovely 

யை முழுசா பெயிண்ட் மாதிரி அப்பிகிட்டு வருமே..

அந்த கருமம் தானே கற்பகம்..நான் அதை சொல்லலை டா.. 

இந்த பொண்ணு நல்லா சிவப்பா , அழகா இருந்தா டா..  

அவன் – அந்த பொண்ணா..அது பேரு பாத்திமா..என் கூட தான்

படிச்சா ..இப்போ வேலைக்கு போயிகிட்டு இருக்கா னு 

சொல்லிட்டு போயிட்டான்..



அடடே..பொண்ணு என்னை விட சின்ன பொண்ணு தான்..

அதனால பிரச்சினை இல்லை..( எது இந்த வல்லவன் , 

விண்ணை தாண்டி வருவாயா அந்த வகையறாவா..) 

அதுக்கு அப்புறம் எனக்கு எந்த பாட்டு கேட்டாலும் அது 

பாத்திமானே கேட்டுச்சு.. அப்போ எனக்கு பிடிச்ச டிவி ப்ரோக்ராம் 

என்ன தெரியுமா.. ராஜ் டிவி ல வர்ற பாத்திமா ஜுவேல்லேர்ஸ்

 தங்கமான நேரம் தான்..( அட கருமம் பிடிச்சவனே..அட..

அந்த ப்ரோக்ராம்மை தொகுத்து வழங்குனவ நம்ம விஜய் 

ஆண்டனி பொண்டாட்டி..அவ பேரு கூட பாத்திமா ஹனிடியூ..) 

எனக்கு அது தான் MOSQUE போயி மந்திரிக்க வேண்டிய நேரம்னு 

நல்லா தெரிஞ்சது.. காலையில நான் காலேஜ் க்கு 7 மணிக்கே

கிளம்பிடுவேன்.. அந்த நேரத்தில அவ தலைக்கு குளிச்சு வீட்டு

வாசலில் வந்து தலை துவட்டிகிட்டு இருப்பா.. கிராஸ் பண்ணி

போகும்போது 20 செகண்ட்ஸ்..அப்படியே மிதக்குற மாதிரி 

இருக்கும்..ஆரம்பத்தில் அறிவு இதெல்லாம் எதேச்சையா 

நடக்குறதுன்னு சொன்னாலும்.. 



ரெண்டு , மூணு நாள் எதேச்சையா

நடந்ததுன்னு வச்சிக்கலாம்.. ஒரு நாள் நான் வேணும்னே 7.30 மணிக்கு

தான் வீட்டை விட்டு கிளம்புனேன்..அப்பவும் அவ வெளியில தான்

வந்து நின்னுகிட்டு இருந்தா..என்னை பார்த்ததும் அவ முகத்தில

சிரிப்பும் , சந்தோஷமும் வந்ததை என்னால உணர முடிஞ்சது..

அதுக்கு அப்புறம் அவ வீட்டு வாசலில் அவ நிக்குறாளானு 

பார்த்துட்டு தான் நான் வீட்டை விட்டே கிளம்புனேன்.. 

உள்ளே இருக்குற சாத்தான் எல்லாத்துக்கும் காதல் னு 

அர்த்தம் சொல்லுச்சு.. விதி யாரை விட்டது.. 






என் பிரெண்ட் பேரு அஜித்..எங்க செட்டுக்கு அவன்தான் தல..



எந்த பிரச்சினைனாலும் அவனை தான் கோர்த்து 

விடுவோம்..அவனுக்கும் மேல எங்க செட்டுல ஒருத்தர் இருக்காரு..

( தலைக்கும் மேலனா என்ன மயிரா..?)

அவர் டார்வின் டொம்னிக் ராஜா.. ( மூணு பேரா..) 



எங்க செட்டோட இயேசு நாதர்.. எங்க பாவங்களை எல்லாம் 

அவரு தாங்கிக்குவாரு.. அஜித் வீடு அரும்பாக்கம் 

( அண்ணா ஆர்ச் ).. அவனும் அவன் வீட்டு கிட்ட ஒரு பொண்ணை 

பார்க்க ஆரம்பிச்சி இருந்தான்.. அதனால எப்பவும் 5 மணிக்கு 

காலேஜ் முடிஞ்சா சைட் அடிச்சி , ஜொள்ளு விட்டு பஸ் ஸ்டாப்பை

நனைச்சி 7.30 , 8 மணிக்கு வீடு திரும்புற நாங்க..

அடிச்சி பிடிச்சி 6.30 மணிக்குள்ள வீடு வந்து சேர ஆயத்தமானோம்.

பசங்க கேட்டாலும் ஏதாவது மொக்கை காரணம் சொல்லி 

பழுப்பிடுவோம்..இது மழுப்பிடுவோம்.. பாத்திமாவும் வேலை 

முடிஞ்சு 6.30 , 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவா..அதனால 

பஸ் ஸ்டாப் ல இருந்து வீடு வரை 5 நிமிஷம் அவ கூட

அவளை பார்த்துகிட்டே வர்றதுல ஒரு அல்ப சந்தோசம்.. 



அப்புறம் லீவ் நாள் கிரிக்கெட் , சாயங்கால வெட்டி பேச்சுனு 

எப்ப தெருவில இருந்தாலும் என் கண்ணு அவளை தேட 

ஆரம்பிச்சுது.. அந்த பொண்ணு வீட்டில அவ அம்மாவும் , 

அவளும் மட்டும் தான்னு பசங்க சொன்னாங்க..அப்பாடா..

அண்ணன் காரனுங்க தொல்லை இல்லைன்னு நெனச்சுக்கிட்டேன்..




வருணனை மன்மதன் பாணம் கொண்டு தொந்தரவு செய்த ஒரு

அற்புதமான நாள் மழை வேற கொஞ்சம் பலமா பெஞ்சுது..நான் 

கொஞ்சம் லேட் டா தான் பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தேன்..

7.30 மணி இருக்கும்..நடந்தா 5 நிமிஷத்தில வீட்டுக்கு 

போகலாம்னு நடக்க ஆரம்பிக்கிறேன்..ஒரு கடை வாசல்ல 

சாரல்ல நனைஞ்ச சின்ட்ரெல்லா மாதிரி சிரிச்சுகிட்டே 

நின்னுகிட்டு இருந்தா..



அப்புறம் நான் ஏன் நடக்குறேன்..

நானும் போயி பக்கத்திலேயே நின்னுகிட்டேன்.. 

அந்த மழை துளிகள் எல்லாம் சாரலா அவ மேல பட்டு

வெண்ணிலா ஐஸ்கிரீம்மா மாறி கீழ விழுந்துகிட்டு இருந்துச்சு.




உன் அழகை அள்ளி பருக துடித்தேன்.. 

உன் அருகினில் நின்று தவித்தேன்.. 

நான் உயிர் வாழ போதும் உன் இதழ் தேன்.. 

ஆயுள் நீடிக்க அமரர்களின் அமுதம் ஏன்..? னு 

நான் பாட்டுக்கு முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டேன்..

( அது ஏண்டா..காதலிக்கிற நாயெல்லாம் கவிதை சொல்றேன்னு 

கண்ட கருமாந்திரத்தையும் சொல்லி கழுத்தறுக்குறீங்க..)

மழை நின்னுடாதானு எல்லாரும் அண்ணாந்து பார்த்தா..நான் 

மட்டும் சீக்கிரம் நின்னுடுமோனு பயந்துகிட்டே பார்த்தேன்.. 

அப்பவும் அவ என்கிட்டே எதுவும் பேசலை..

(அப்படினா…பாடுமோ..) 

அப்புறம் கொஞ்சம் மழை நிக்கவும் ஒதுங்கி இருந்த 4 , 5 பேரும்

போயிட்டாங்க.. நான் போலாமான்னு ஆட்டி கேட்டேன்..

வேணாம்னு அவ ஆட்டினா மண்டையை..

(மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா..) கொஞ்ச நேரம் 

பார்த்துகிட்டே இருந்தோம்..


நான் தயங்கி கிட்டே ரொம்ப லேட் ஆயிடுச்சு போல..

குடை எடுத்துகிட்டு போக வேண்டியது தானே னு கேட்டேன்..

ஏன் நீ எடுத்துட்டு போகலியானு அவ கேட்டா.. 

நான் notebook எடுத்துகிட்டு போறதே அதிகம்..இதுல extra fittings 

வேறயா னு சொல்ல..அவ உடனே hand bag ல இருந்த குடையை

எடுத்து காட்டினா..( டே..தெளிவா சொல்லு..குடை தானே..) 

என்ன இது..குடையை வச்சிகிட்டேவா இவ்வளவு நேரம் 

இங்க நின்னுகிட்டு இருந்தே..போக வேண்டியது தானே னு கேட்கவும்..

நீ பஸ் ல இருந்து இறங்குனதை பார்த்தேன்..

அதான் குடையை வெளியவே எடுக்காம இங்க வந்து நின்னுட்டேன்..

( ஏன்டா..நீ குடையை கூட திருடுவியா..) எப்படியும் நீயும் 

வருவேன்னு நெனச்சேன்..வந்துட்டனு சொல்லி சிரிச்சா..

( ஊருக்கே தெரிஞ்சிருக்கு..நீ யாருன்னு..) அடி பாவிங்களா..

நான் தான் மொக்கை வாங்குனனா னு நெனச்சுகிட்டே..



சரி வா போகலாம்னு சொன்னதும் ரெண்டு பேரும் சேர்ந்து 

போனா தப்பா நினைப்பாங்க..நீ முன்னால போ..நான் 

பக்கத்திலேயே கொஞ்சம் ஒதுங்கி வர்றேன்னு சொன்னா.. 

நாம என்ன லவ்வா பண்றோம்னு கேப் ல பால் போட்டேன்.. 

அவ சிரிச்சுகிட்டே இருந்தா..( அதானே பார்த்தேன்..சிறுக்கிங்க..

சிரிச்சே மழுப்பிடுவாளுங்க..) நான் ஞே னு பார்த்துகிட்டே கூட

நடந்தேன்.. தெருமுனைக்கு வந்ததும் அவளை போக 

சொல்லிட்டு நான் அப்படியே கடைல நின்னுட்டேன்..





இன்னொரு நாள் அப்படி தான்..பசங்களோட கலெக்டர் நகர் ஏரியா

வில சுத்திகிட்டு இருந்தேன்..அங்க எல்லாவிதமான கடைகளும்

இருக்கும்..பசங்களோட நின்னு டீ குடிச்சுகிட்டே சைட் அடிச்சிகிட்டு

இருந்தோம்..அங்க அருண் பேன்சி ஸ்டோர் கொஞ்சம் பேமஸ்..

அந்த கடைக்கு தான் அவ போயிகிட்டு இருந்தா.. பசங்களை

சாமர்த்தியமா கழட்டி விட்டுட்டு நான் மட்டும் கடைக்குள்ள 

போனேன்..அட..என்ன நீ பேன்சி ஸ்டோர் க்கு வந்து இருக்கன்னு 

அவ கேட்க..இல்ல..சும்மா பசங்களோட நின்னுகிட்டு 

இருந்தேன்..உன்ன பார்த்தேன்..அதான் வந்துட்டேன்னு வழிஞ்சேன்.. 

அதுக்கும் சிரிச்சா.. சரி..இந்த செயின்ல எது எனக்கு நல்லா 

இருக்கும்னு பார்த்து சொல்லுனு என்கிட்டே சில செயின்களை 

காமிச்சா.. உனக்கு எந்த செயின் போட்டாலும் உன் கழுத்து 

கலருக்கு அது கம்மியா தானே இருக்கும்னு நான் ஜொள்ள.. 


சனியன் புடிச்சவ..அதுக்கும் சிரிச்சா..அப்புறம் அப்படியே கொஞ்ச

நேரம் கடையிலேயே கடலை வறுத்து , பார்த்துகிட்டு 

இருந்தவங்களுக்கு எல்லாம் பத்திகிட்டு வர்ற மாதிரி படம்

போட்டுக்கிட்டு இருந்தேன்..வெளியில வந்ததும் MMM hospital 

பின்னாடி நிறைய மரங்கள் உண்டு..அந்த ரோடு வழியா பேசிகிட்டே

நடந்தோம்.. நீ யாரையாவது லவ் பண்றியானு கேட்டா..

( அது ஏன்டா எல்லா பொண்ணுங்களும் இந்த கேள்வியையே 

கேட்குறாளுங்க..) ன்னடா..இன்னும் கேட்கலையேன்னு பார்த்தேன்.. 

என்னை மதிச்சு பேசுறது நீ மட்டும் தான்..அப்படியே லவ் பண்ணா 

உன்னை தான் லவ் பண்ணனும்னு சொன்னேன்..

என்ன..அதுக்கும் சிரிச்சாளா..) எழவு மவ.. அப்பவும் சிரிச்சா..



பொண்ணு தினமும் காத்திருந்து பார்க்குது..

பார்க்கும் போதெல்லாம் சிரிக்குது..

பார்க்காம போனா முறைக்குது..

கண்களில் காதல் தெறிக்குதுன்னு நானே முடிவு 

பண்ணி தினம் தினம் தீபாவளி கொண்டாடுனேன்..


( எதுகை,மோனைல பின்றியே மவனே..எங்கடா கத்துகிட்ட..) 



எங்க தெருவில தேவினு ஒரு அக்கா இருந்தாங்க..

என்னை சைபர் கிரைம்ல மாட்டி விட்ட ரேவதி யோட அக்கா..

ரேவதியை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்.. 

அந்த அக்கா கூட ஒரு நாள் அவங்க வீட்டு மாடியில 

உட்காந்து பேசிகிட்டு இருந்தேன்..என்னடா..பஸ் ல பாட்டு

எல்லாம் பாடுறியாமே.. உன் பாட்டுல மயங்கி ஏதாவது 

பொண்ணு உன்னை காதலிக்குதா..இல்ல நீ தான் யாரையாவது

ஜொள்ளு விடுறியானு கேட்டாங்க.. ஆமா..அப்படியே 

நான் பஸ்ல பாடினாலும் பொண்ணுங்களை கலாய்க்கிறது மாதிரி

தான் பாடுவேன்..எவ வந்து என்கிட்டே பேசுவா..அவன் அவன் 

பிகரை கூட்டிகிட்டு சுத்துறான்..என் முகத்திலேயே 420 னு 

எழுதி இருக்கோ என்னவோ..ஒரு பொண்ணு கூட என்னை 

சீண்ட மாட்டுதுன்னு சொல்ல..கவலைப்படாதேடா..

நீ கெட்டவன்னு யார்  சொன்னது..கண்டிப்பா உன் நல்ல 

மனசை புரிஞ்சிகிட்டு ஒரு சூப்பர் பிகர் வரும் பாரு 

சமாதானம் சொன்னாங்க..


அக்கா..அன்னைக்கு நம்ம தெருவில ஒரு பொண்ணை பார்த்தேன்..

செம கலரா இருந்தாக்கா..ஆனா அந்த பொண்ணு யாருன்னு

தெரியலை..குறுகுறுன்னு பார்க்குறா..காலையில எனக்காக 

வீட்டு வாசலில் வந்து நிக்குறானு சொன்னேன்..எந்த வீடு டான்னு

அவங்க கேட்க..நான் அவ வீட்டை காட்ட..அந்த பாத்திமா வா.. 

அவ ஒரு கேடுகெட்ட திருட்டு ………… சொன்னதும் 

அறை எண் 305 இல் கடவுள் படத்துல வர்ற சந்தானம் மாதிரி

என் காதுக்குள்ள ஜொயிங்னு ஒரு சத்தம்..

கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது..உண்மையிலேயே

ரொம்ப கலங்கிட்டேன்..




என்னக்கா சொல்ற.. 

அந்த பொண்ணை பார்த்தா அப்படி எல்லாம் தெரியலையே..

நீ சும்மா சொல்லாதக்கானு தடுமாறினேன்..

ச்ச..நான் ஏன் அந்த நாயை பத்தி பொய் சொல்ல போறேன்..

இந்த தெருவுக்கே தெரியுமே அவ லட்சணம்..டே..அவ 

சிரிக்குறா,சிணுங்குறானு  அவ பின்னாடி போயி நிக்காதே டா..

உன்னை நாய் மாதிரி அலையவிட்டு எமாத்திடுவா.. 

உன் மனசுக்கு சந்தனமாலையே போடலாம்..நீ ஏன் போயி 

சாக்கடைல விழுறனு ஏகப்பட்ட அறிவுரைகள்..




அத்தனையும் எனக்கு எங்கையோ எக்கோ போல தான் 

கேட்டுச்சு.. முதல் வார்த்தையிலேயே தான் நான் மூர்ச்சை

ஆகிட்டேனே..அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் நான் அவளை

கண்டுக்கலை.. ஏமாற்றம் அவள் முகத்தில நல்லாவே 

தெரிஞ்சது..இருந்தாலும் மனசு அவளை பார்க்கணும்னே ஏங்குச்சு 

..ஒளிஞ்சிருந்து அவளை அப்போப்போ பார்ப்பேன்.. இருந்தாலும் 

அந்த அக்கா சொன்ன வார்த்தைகள் என்னை ரொம்பவே 

காயப்படுத்திடுச்சு..அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பசங்களும்

அவளை பத்தி தப்பு தப்பா பேச ஆரம்பிச்சானுங்க..

(அவனுங்க  ஆரம்பத்தில் இருந்தே பேசிக்கிட்டு இருந்து 

இருப்பானுங்க..உனக்கு தான் இப்போ தெரிஞ்சிருக்கும்..) 

ஆனாலும் என்னால  நம்ப முடியல.. 

தீபாவளி , பொங்கல் போன்ற ஒரு சந்தோஷமான நாளில் 

விஜய் படம் ரிலீஸ் ஆகி நம்மை சங்கடப்படுத்துமே..

அது போல..அனிதா வந்து 

என்கிட்டே பேசின அந்த நாள் சாயங்காலம் பாத்திமாவை 

நான் இன்னொரு பையன் கூட பார்த்தேன்..சந்தேகம் வந்தாலும்

என்னை நானே சமாதானப்படுத்திகிட்டேன்.. ஆனா அதுக்கு

அப்புறம் ஒரு வாரத்துக்குள்ள அதே நேரங்களில் நான் 

அவளை வெவ்வேற பசங்களோட பார்த்தேன்.. 

அன்னையோட அவளுக்காக நான் ஏங்குவதை விட்டுட்டேன்..




எல்லா மேட்ச் சிலையும் நல்லா 

விளையாடிட்டு பைனல்

வந்து தோர்த்துகிட்டு இருந்த இந்திய

கிரிக்கெட் டீம் 

மாதிரி என்னோட ஒவ்வொரு காதலும்

ஆரம்பத்தில நல்லா இருந்துட்டு 

அப்புறமா டல்லா ஆகி என்னை 

ஏமாத்திட்டு  போகுதே ஏன் கடவுளே..



கடைசியா வேர்ல்ட் கப் அடிச்ச 

மாதிரி யார் வர்றாளோ 

என்னை கொள்ளை அடிக்க..

காத்திருக்கிறேன் என் கனவுதேவதையே..





1 comment:

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

இன்னா மாமா..என் டாவை பத்தி கலாய்ச்சிட்ட.. இன்னும் ரேவதி , அமுத , காயத்ரி னு ஒரு லிஸ்ட் டே இருக்கே..