Friday, March 11, 2011

பஸ்ல படம் போட்ட என்னோட காலேஜ் கானா

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
பக்கத்து வீட்டு நிர்மலா..

உன்னை மயக்கியது என்கண்களா

மனசுக்குள்ள என்னை நீயும் விரும்புற

நான் ஆசையோடு பக்கம் வந்தா ஒதுங்குற



அடுத்த வீட்டு தேவியே

உன்னை பார்க்காதவன் பாவியே
 
என் இதயத்துக்கு நீ தாண்டி சாவியே

என்னை கட்டிகிலேன்னா போடுவேன் நான் காவியே



அடியே பொண்ணு ரேவதி

என் உசுருல பாதி நீ

ரெண்டு பெரும் பீச்சுக்கு தான் போவோமா

நானும் கெஞ்சுறனே  நாலு நாளா பாவமா





வாடி யம்மா வளர்மதி

அழகுல நீ முழு மதி

படத்துக்கு தான் போய் வருவோம் ஜாலியா

உன்னால ஆயிடுச்சே என் பர்சு காலியா


மாடி வீட்டு மாலா வா

நான் நிக்குறேண்டி சோலோ வா

என் கூட பார்க்குக்கு  நீயும் கொஞ்சம் கூலா வா

உனக்கு பிடிச்ச கூல் ட்ரின்க் என்ன coca cola வா



எதிர் வீட்டு ஹேமா

நீ வாசலுக்கு வாம்மா

ஆசையோடு காத்திருக்கேன் உன் மாமா

அடி..கொஞ்ச நேரம் கொஞ்சி பேசுவோமா



கொடி இடையாள் வள்ளி

என் மனசு சுத்த வெள்ளி

சிரிப்பால் என்னை மயக்குறியே கள்ளி

உன்னை சீண்டி நானும் பார்க்கவாடி கிள்ளி





கோடி வீட்டு சுந்தரி..

நீ சீக்கிரமா எந்திரி..

காலேஜுக்கு போறியே நீ பஸ்சுல..

உன்னை பைக்ல நான் ட்ராப் பண்ணவா லஸ் ல..



புதுப்பொண்ணே  மோகனா

நான் உன்னை மறந்தே போவனா


பளபளப்பா இருக்குது உன் கன்னம்






உன்னை காதலிப்பது மட்டும் தாண்டி என் எண்ணம்



எங்கடி உங்கக்கா ப்ரியா..

இன்னிக்கு அவ ப்ரீயா..

நம்ம தெருவுலேயே இருக்கா நல்ல அழகா..

அவ ரொம்ப ரொம்ப ஜாலி தாண்டி பழக..



தங்க தாரகை தாரா..

அவ தனியாக போறா…

அழகுல அவள் ஒரு மணிப்புறா…

நான் வேற பொண்ணு கூட பேசினாக்கா முறைக்குறா..



தாவணி போட்ட தீபா..

ஒரு மாதிரியா என்னை பார்ப்பா..

அந்த பார்வையில மயங்கி நின்னேன் நானு..

எனக்கு பிரச்சனைனா அது அவ அண்ணன் சீனு..


 
அய்யர் வீட்டு அழகே காயத்ரி..

மாடிக்கு வா நீ ராத்திரி..

உன்னோட பார்வையில் நான் உருக..

ரொம்ப ஆசை படுறேன் உன் இதழ்களை  பருக…



கண்ணே கலைவாணி..

கோவிலுக்கு வா நீ..

கிடைக்காதா எனக்கு உன் தரிசனம்…

அன்பே காட்டு நீயும் என் மேல கரிசனம்…


 
மானே மணி மேகலை..

நான் உன்னை வெறுத்து போகலை..

காத்திருக்க சொன்னியேடி என்ன..

உன்னை எதிர் பார்த்தே நானும் அங்க நின்னேன்..



ஆனா நீ  கடைசி வரைக்கும் வரல..

நானும் நம்பிக்கையை விடல..

உனக்கு என்ன ஆச்சோ மணி இப்போ பத்தரை..

உன்னை நெனச்சி எனக்கு வரலயேடி நித்திரை…




பச்சை சுடிதாரு பத்மினி..

என்னை கட்டி புடிச்சிக்கோ சேர்த்து நீ..

பெண்களிலே நீ தாண்டி சிறப்பு…

நீ தேவலோக ரம்பையின் மறுபிறப்பு…

பச்சை கிளி பாத்திமா..

பஸ் ஸ்டாப்பில் உன்னை பார்த்தேன்மா..

மகுடி கண்ட பாம்பு போல் நான் மயங்குறேன்…

உன் பக்கம் வந்து பேச நானும் தயங்குறேன்…



அதுக்கு காரணம் உன் status..

நீ பணக்கார வீட்டு lotus…

ஒரு தடவ என்னை பார்த்து சிரிடி..

உன்னை இழுத்துக்கிட்டு ஓட நானும் ரெடி டி…




அழகு பொண்ணு அனிதா…

என்னை அலையவிட்டு பார்த்தா..

கொடைக்கானல் கூட்டிட்டு போக சொன்னா..

என்னை கொலை வெறியோடு தேடுறான் அவ அண்ணா..



மச்சி..நான் சொல்லுறதை நம்பு..

இந்த பொண்ணுங்க னாலே வம்பு..

திருவண்ணாமலை சுத்தினா அது கிரிவலம்..

இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தினா அது கேவலம்…




கண்ணுக்கு வெப்பாளுங்க கண் மை..

அவளுங்க பேச்சில இல்ல உண்மை…

தயவு செய்து நம்பிடாத பொண்ண.

உன்னை குழில தள்ளி மூடிடுவா மண்ணை…




படிக்க வச்ச தாய் தந்தையை நேசி நீ…

சுடிதார் , ஜீன்ஸ் எல்லாம் துடிக்க வைக்கும் யோசி நீ..

அரசர்கள் அன்று போனாங்க நகர்வலம்..

மச்சி..நாம இன்னைக்கு போறதெல்லாம் பிகர்வலம்..



 
நாமதான் பொண்ணுங்க பின்னாடி வருவோம்..

அவ மரணத்தின் மறு உருவம்..

காதல் னா கண் கட்டி வித்தை..

அவளுக்கு செலவு பண்ண அழிக்கணும் ங்கொப்பன் சொத்தை…



ராமனும் ஒடச்சானே வில்லை..

அப்புறம் நிம்மதியே இல்லை..

அவன் பட்ட துன்பத்துக்கு ஏது எல்லை..

மச்சான்..கல்யாணம்னா எப்பவும் படு தொல்லை...




So , Friends Avoid the Marriage…

Life ல இல்ல Damage..

So that we can live very Happy..

Beware of Beautiful baby..




 

2 comments:

Anush said...

Thala, konnuteenga..

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

டே..மோனே..ஞாபகம் இருக்கா..நீ ஸ்கூல் படிக்கும் போது இதை நான் உன் கிட்ட பாடி காட்டியது..