Friday, March 4, 2011

கவிதை..கவிதை..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

சொர்க்கத்தில் இருப்பார் கடவுள்

என்றால்...உன் மடியில் கிடக்கும் 

போது நானும் கடவுள் தான்.

#காதல் மாதம் கீச்சுக்கள்....


நீ இனி மொட்டை மாடியில் 

தூங்க போகாதே...

போக மறுக்கிறது நிலா…

அண்ணனுக்கு லவ் மூட் 

ஸ்டார்ட் ஆயிடுச்சி..




நீ என்னை கடக்கும்போது மட்டும்

எனக்கு எட்டுத்திக்கிலும் கண் 

முளைக்கிறதடி...

#திரும்பவும் கோயம்புத்தூர் குளிரு..




என் தாகம் தீர்க்க கங்கை 

தேவை இல்லையடி..
மங்கை நீ குளித்து முடித்ததும் 

உன் கூந்தலில் 
வடியும் நீர் போதுமடி... 

#என்னால குளிரை தனியா

சமாளிக்க முடியலை.. 






பெண்ணை காதலித்தால் 

பித்து பிடிக்குமாம்..
நல்லவேளை நான் உன்னை

காதலிக்கிறேன்..
நீ தேவதை ஆச்சே..

#காதல் மாதம் கீச்சுக்கள்....




இருளில் தவிக்கும் எனக்கு 

வழி காட்ட வந்தவளே...
உன் விழியை கண்டு திசைகள்

மறந்து நிற்கிறேன் நான்...

#காதல் மாதம் கீச்சுக்கள்....





எல்லாரும் ஒரு நாள் இறக்க 

தான் போகிறோம்..
அதற்குள்ளாக உன் மேல் 

கிறக்கத்தோடு இருக்கும் எனக்கு 

இரக்கம் காட்ட கூடாதா...

#காதல் மாதம் கீச்சுக்கள்....


4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>முளைக்கிரதடி...

முளைக்கிறதடி..

சி.பி.செந்தில்குமார் said...

>>>நல்லவேளை நான் உன்னை

காதலிக்கிறேன்..

நீ தேவதை ஆச்சே..

கலக்கல்

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அது விடியற்காலையில் பதிவேற்றியது..கவனக்குறைவு..திருத்திகொள்கிறேன்..