Wednesday, March 2, 2011

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 5

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
கட்டு மரமாய் நான் மிதப்பேன்னு 

சொன்னீங்களே தாத்தா...எதுக்கு…

சக தமிழர்களின் சடலங்களை கரைக்கு

கொண்டு வரவா..?






நம்ம மாநிலத்தில அதிகமா 

குடிசைகளில் வாழ்வது 

மீனவர்களும் கூலித்தொழிலாளிகளும் தான்..

 

தமிழக பட்ஜெட்டில் 2250 கோடி ரூபாய் 

கலைஞரின் இலவச வீடு 

திட்டத்துக்கு ஒதுக்கீடு.... 

சிங்கார சென்னையா மாத்துறோம்னு 

கூலிதொழிலாளிகளை கூண்டோடு ஊருக்கு

வெளியில தள்ளியாச்சு... இப்போ மீனவர்களை

மொத்தமா அழிக்க ப்ராஜெக்ட் ப்ராசெஸ்ல

இருக்கு...திட்டம் போட்டு அந்த குடும்பங்களை

அழிச்சிகிட்டே யாருக்குயா வீடி கட்டி 

கொடுக்கப்போற...

கேக்குறவன் கேனையா இருந்தா 

இலியானாவுக்கு இடுப்பு 

இருக்குன்னு சொல்லுவ..






கடல்ல போயி ஓட்டு மொத்த 

பிணங்களையும் பத்திரமா கரைக்கு

கொண்டு வரவா..? இல்லை அதை 

எவனாவது எதிர்த்து கேள்வி கேட்டா  

அவனை போட்டு தள்ளவா..? 

இல்லை அரசியல்வாதிகள் போற அவங்க

சின்ன வீட்டுக்கு கூட பந்தோபஸ்து 

ஏற்பாடு பண்ணவா...? இல்லை

காவல்துறையினரின் குடும்பத்துக்கு 

ஏதாவது நல்லது செய்யவா..?

எதுக்கையா காவல் துறைக்கு 3239 கோடி

ரூபாய் ஒதுக்கீடு.. 

உங்க அழிச்சாட்டியத்துக்கு ஒரு 

அளவே இல்லையா தாத்தா...







2 comments:

FREIND-நண்பன் said...

நல்லா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க ... உங்கள் பணி தொடரட்டும் ...

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நன்றி நண்பா..