Thursday, November 17, 2011

மொத்த சொர்க்கம் - மிச்ச நரகம்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




கவிதை எழுத வேண்டுமென்றால் எதைப்பற்றி 

எனக்கவலைப்படுபவர்கள் மத்தியில் எனக்கு மட்டும் 

கவலையே இல்லை..

கவிதை என்றால் நீ தானே..




கொஞ்சம் நீ தான் மொத்த சொர்க்கம்...

கொஞ்சும் என்னை கெஞ்ச விடும் நீ தான் மிச்ச நரகம்.




உன்னிடம் காதலை நான் வெளிப்படுத்தும் முன்னரே அதை 

விட நீ அதிகமாக வலியை தந்தாலும் ஏற்றுக்கொள்ள 

தயாராகிவிட்டேன் அன்பே..




பக்கத்தில் இருந்த போது உன்னை பார்க்காமல் தவிர்த்த நான்,

உன் பக்கத்தில் வேறொருவன் இருப்பதை பார்க்க 

முடியாமல் தவிக்கிறேனடி..



நினைவுகளில் நிற்கும் பல உறவுகளை விட..

உந்தன் நினைவுகளே எனக்கு உறவாய் போதுமடி.

உன் நினைவுகள் என்னை படுத்தினாலும்,

பிடிக்கவே செய்கிறது..




உன்னைப்பற்றி பல மணி நேரம் பேசுபவன் நான்..

ஒரு நிமிடம் கூட என்னை விட்டுக்கொடுக்காமல் 

பேசுபவள் நீ..#என்னமோ போ..




வார்த்தைகளால் காயப்படுத்தும் என்னை திரும்ப 

காயப்படுத்தாமல் என் கோபத்தின் காரணத்தை தேடி தீர்க்கும் 

நீ நிச்சயம் தேவதை தானடி..




ஊடல் கொண்ட நேரங்களில் நீயும் நானும்.. அதுவே கூடல் 

சமயத்தில் நாம் ஆகி விட்டோம்..

#எப்படி வார்த்தையில விளையாண்டேன் பார்த்தீங்களா..

வார்த்தை விளையாட்டல்ல..இது வாழ்க்கை விளையாட்டு..




உன்னை வருந்த வைத்து மன்னிப்பு கேட்ட என்னை விட,

காயப்பட்ட வலியோடு "பரவாயில்லை விடு " என்று என்னை 

மன்னித்த நீயே சிறந்தவள்.



உன்மீதான என் காதலை அடக்க பிரபஞ்சமே பத்தாது 

எனும்போது 140 ல் எப்படி அடக்க..

#போதையில இல்ல..சரக்கடிக்க வக்கில்லாத காண்டு..

1 comment:

சேகர் said...

அய்யோ அய்யோ ..